அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
Episode 21
Episode 22
Episode 23
Episode 24
Episode 25
Episode 26
Episode 27
Episode 28
Episode 29
Episode 30
Episode 31
Episode 32
Episode 33
Episode 34
Episode 35
Episode 36
Episode 37
Episode 38
Episode 39
அத்தியாயம் 4
சென்னையில் இருந்து கிளம்பிய அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செண்பகநல்லூர் கிராமத்தின் எல்லையைத் தொட்டபோது, ஊரே மயான அமைதியில் உறைந்திருந்தது. ஊர் எல்லைப் பிள்ளையார் கோவிலைத் தாண்டியதும், தூரத்தில் தெரிந்த அந்தச் செண்பகக் கோட்டை மாளிகையின் உச்சாணிக் கோபுரம் ரோஜாவின் கண்களில் பட்டது. அவளது அப்பா அடிக்கடி வர்ணிக்கும் அதே கோபுரம்… ஆனால் இன்று அதைச் சுற்றி ஒரு கறுப்பு நிழல் படர்ந்திருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
ஆம்புலன்ஸ் மாளிகையின் முகப்பில் வந்து நின்றதும், அங்கிருந்த நிசப்தம் சுக்குநூறாக உடைந்தது. வாசலில் நின்றிருந்த தெய்வானை, தன் தம்பி சங்கரின் உடலைப் பார்த்ததும் அப்படியே தரையில் விழுந்து புரண்டு அழத் தொடங்கினார்.
“ஐயோ… என் தம்பி சங்கரு! பெத்த ஆத்தாவையும் அப்பாவையும் பார்க்காமப் போனாலும், இந்த அக்கா முகத்தைப் பார்க்கவாவது ஒரு தரம் உயிரோட வந்திருக்கக் கூடாதாடா? பெத்த வயித்துல நெருப்பை அள்ளிப் போட்டுட்டு இப்படிப் போயிட்டியேடா பாவி!” என்று அவர் வைத்த ஒப்பாரிச் சத்தம் அந்தப் பெரிய மாளிகையின் ஒவ்வொரு சுவரிலும் மோதி எதிரொலித்தது.
கௌரி ஓடி வந்து தன் தாய்மாமனின் சடலத்தைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். “மாமா… நீங்க இல்லைன்னா நாங்க எப்போவோ அனாதையாகி இருப்போம். எங்களுக்காகப் பார்த்துப் பார்த்துப் பண்ணுனீங்களே… இப்போ இப்படிப் பேச்சில்லாம கிடக்குறீங்களே!” என்று அவள் அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சைப் பிழிந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரமூர்த்திக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவருக்கும் சங்கருக்கும் இடையில் வயது வித்தியாசம் குறைவு என்பதால், அவர்கள் இருவரும் தாய்மாமன் மருமகன் என்பதை விடச் சிறந்த நண்பர்களாக வளர்ந்தவர்கள். சங்கர் ஊரை விட்டுப் போகும்போது சுந்தரமூர்த்தி தான் ரகசியமாகச் சில உதவிகளைச் செய்திருந்தார். இன்று தன் உயிர் நண்பன் சடலமாகக் கிடப்பதைப் பார்த்ததும், “சங்கரு… என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிட்டியேடா” என்று அவர் சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தினார்.
யமுனாவும், காயத்ரியும் அமுதாவின் உடலைப் பிடித்துக்கொண்டு அழுதனர். “அந்த ஊர்ல யாருமே இல்லாமத் தவிச்சீங்களே அமுதா அக்கா… இப்போ இப்படி ஊரே கூடி நிக்கும்போது நீங்க இல்லாமப் போயிட்டீங்களே!” என்று யமுனா புலம்பினார்.
சக்திவேலும் தேவராஜும் ரோஜாவை மெல்லத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அந்த மாளிகையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு சடலங்களுக்கு முன்னால், ரோஜா ஒரு உடைந்த சிலையைப் போல அமர்ந்திருந்தாள். அவளுக்கு யாரைத் தெரியும்? யார் உறவு, யார் பகை என்று தெரியாத அந்தப் புது உலகில், தன் அப்பாவின் உடலைப் பார்த்துக் கதறும் இந்த மனிதர்களைப் பார்க்கும்போது அவளுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.
அப்போதுதான் கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தச் சிங்கம் உள்ளே வந்தது.
வேட்டியை மடிச்சுக்கட்டி, இறுகிய முகத்தோடு வந்த ராஜன், நேராகச் சங்கரின் சடலத்தின் முன்னால் வந்து நின்றான். சுற்றியிருந்த அழுகைச் சத்தம் அவனது வருகையாலேயே சற்றுத் தணிந்தது. ராஜன் குனிந்து தன் மாமனின் முகத்தைப் பார்த்தான். வன்மம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த முகத்தில் தெரிந்த அமைதி அவனுக்குள் ஒரு பாரத்தை உண்டாக்கியது.
சரியாக அந்த நேரம், கூட்டத்தில் இருந்த சில பங்காளி உறவுகள் முணுமுணுத்தனர். “என்னதான் இருந்தாலும் ராஜன்… ஊரை விட்டுப் போனவனுக்கு எதுக்கு இவ்வளவு மரியாதை? இவனைப் போய் மாளிகைக்குள்ள கொண்டு வந்திருக்கக் கூடாது” என்று ஒருவன் சொல்ல, ராஜன் மெல்லத் திரும்பிப் பார்த்தான்.
அவன் கண்கள் சிவந்திருந்தன. “யாரடா அது? கௌரவம் பேசுறதுக்கு இது நேரமில்ல. என் அக்காவுக்கு இவன் துரோகம் செஞ்சிருக்கலாம், ஆனா இந்த மண்ணுக்கு இவன் ஒரு வாரிசு. செண்பகக் கோட்டைப் பாரம்பரியப்படி ஒரு உயிருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுப்பேன். அதுல எவனாவது குறுக்கே வந்தா, அவனுக்குச் சுடுகாட்டுல தான் இடம்!” என்று அவன் கர்ஜிக்க, அந்த இடமே அமைதியானது.
ராஜன் மெல்லத் திரும்பி ரோஜாவைப் பார்த்தான். அவளது கண்கள் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஒரு கேள்வி இருந்தது, ஒரு தவிப்பு இருந்தது. ராஜன் அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“தேவராஜ்! சக்திவேல்! எல்லா ஏற்பாடுகளையும் கவனிங்க. அக்கா… அழுதது போதும், அந்தப் பொண்ணு ரோஜாவை உள்ள அழைச்சுட்டுப் போய் கொஞ்சம் தண்ணி கொடுங்க. அவ பயந்து போயிருக்கா” என்று ராஜன் சொன்னபோது, அவனது குரலில் ஒரு மென்மையான அக்கறை முதல்முறையாக வெளிப்பட்டது.
அன்று மாலை, செண்பகநல்லூர் கிராமமே திரண்டு நிற்க, சங்கரும் அமுதாவும் அந்தத் தோட்டத்து மண்ணிலேயே ஒருவரையொருவர் பிரியாமல் அடக்கம் செய்யப்பட்டனர். எல்லாம் முடிந்த பிறகு, அந்தப் பெரிய தோட்டத்து வீட்டின் வாசலில் ரோஜா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். ராஜன் தூரத்தில் நின்று அந்த வீட்டின் விளக்கைப் பார்த்தபடி ஒரு பெருமூச்சு விட்டான். “பகை தீர்ந்ததா… இல்ல புதுசா ஆரம்பிக்குதா?” என்பது அவனுக்கே தெரியவில்லை.
ஆனால் அவன் மனதில் ஒன்று மட்டும் சொல்லிக் கொண்டான்
‘நீ இந்த மண்ணை மிதிச்சி இருக்க கூடாது ரோஜா!!’
.
சங்கர் மற்றும் அமுதாவின் மறைவுக்குப் பிந்தைய சடங்குகள் செண்பகநல்லூர் வழக்கப்படி குறையேதுமில்லாமல் நடந்தேறின. ஊர் வழக்கப்படி, ஒரு நாள் பங்காளிகள் சார்பாக ‘பச்சைத் தண்ணி’ ஊற்றப்பட்டது, மறுநாள் தாய்மாமன் முறையுள்ளவர்கள் விருந்து வைத்தனர். இன்று 16-வது நாள் காரியம். செண்பகநல்லூர் தோட்டத்து வீடே ஜனங்களால் நிறைந்திருந்தது.
பெரிய கிடா வெட்டி, ஊருக்கே கறி விருந்து போடும் ஏற்பாடுகளைச் செண்பகக் கோட்டை மாளிகை முன்னின்று நடத்தியது. ராஜன் ஒரு பக்கம் அதிகாரமாக வேலைகளைப் பிரித்துக் கொடுத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் சுந்தரமூர்த்தியும் தேவராஜும் பந்தியில் ஆட்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
வீட்டின் உள்ளே, கௌரியும் யமுனாவும் ரோஜாவைக் கவனித்துக் கொண்டனர். “ரோஜா, இன்னைக்கு நீ எதுவும் வேலை செய்யக்கூடாது. அம்மா அப்பாவோட ஆத்மா சாந்தியடையணும்னா நீ மனசாரச் சாப்பிடணும்” என்று கௌரி சொல்ல, ரோஜாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.
தனது அப்பாவுக்காகவும் அம்மாவுக்காகவும் இந்த ஊரே திரண்டு நின்று அஞ்சலி செலுத்துவதைப் பார்க்கும்போது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதைவிட, எல்லாவற்றையும் ஒற்றை ஆளாக நின்று கவனிக்கும் அந்த ‘ராஜன்’… அவன் மீது அவளுக்கு ஒரு விதமான பயமும், அதே சமயம் இனம் புரியாத மரியாதையும் ஏற்பட்டது. அவளுக்கு அவன் சித்தப்பா முறையல்ல, தூரத்துச் சொந்தம் என்றாலும் அவன் காட்டும் அந்த ‘கெத்து’ அவளை ஈர்த்தது.
மதிய நேரம்… பந்தியில் கூட்டம் அலைமோதியது. ராஜன் வேட்டியை மடிச்சுக்கட்டி, கையில் ஒரு அகப்பையோடு தானே இறங்கிப் பரிமாறத் தொடங்கினான். அவன் பரிமாறினால் யாரும் மறுபேச்சு பேச மாட்டார்கள்.
சாப்பிட்டு முடித்த பின், பந்தியின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ஊர் பெரியவர் ஒருவர், “என்னதான் இருந்தாலும் ராஜன்… அந்தப் பொண்ணு இனிமே எங்கே போகும்? மெட்ராஸ்ல சொத்து சுகம் இருந்தாலும், ஒரு பொம்பளப் பிள்ளை தனியா அங்க இருக்க முடியுமா? இங்கேயே ஏதாவது ஒரு நல்ல வரனைப் பார்த்து முடிச்சுப் போட்டா என்ன?” என்று கேட்க, ராஜனின் கை ஒரு நொடி நின்றது.
அவன் நிமிர்ந்து, வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த ரோஜாவைப் பார்த்தான். அவள் வெள்ளை நிறச் சேலையில், சோகம் அப்பிய முகத்தோடு தேவதை போல அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் ராஜனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தன. அந்தப் பார்வையில் ஒரு துணிச்சலும், அதே சமயம் ஒரு தவிப்பும் இருந்தது.
“பெரியவரே… அந்தப் பொண்ணு எங்கே இருக்கணும்னு அவதான் முடிவு பண்ணணும். ஆனா, செண்பகக் கோட்டை வாரிசு ஒன்னு அனாதையா மெட்ராஸ்ல கிடக்க நான் விடமாட்டேன்” என்று ராஜன் அழுத்தமாகச் சொன்னான்.
மாலை நேரம்… காரியம் முடிந்து கூட்டம் கலைந்தது. ரோஜா அந்தப் பழைய தோட்டத்து வீட்டின் வாசலில் அமர்ந்து அஸ்தமிக்கும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்தான் ராஜன். அவனது நிழல் அவள் மீது விழுந்தது.
“ரோஜா!” – அவன் முதல்முறையாக அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். அவனது குரலில் அந்த பழைய வன்மம் சற்று குறைந்திருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
ரோஜா மெல்ல எழுந்தாள். “சொல்லுங்க… ராஜன்” – அவள் அவனை உறவு முறை சொல்லி அழைக்காமல், அவன் பெயரையே ஒருவித மரியாதையோடு சொன்னாள்.
ராஜன் அவளை நெருங்கி வந்தான். “இன்னைக்கோட காரியம் எல்லாம் முடிஞ்சது. இனிமே நீ என்ன பண்ணப்போற? மெட்ராஸ்க்குத் திரும்பிப் போற ஐடியாவா, இல்ல இங்கேயே தங்குற எண்ணமா?”
ரோஜா அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். “என் அப்பா இந்த மண்ணை நேசிச்சாரு. அவருக்கு இங்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னு தான் நான் அவரை இங்க அழைச்சுட்டு வந்தேன். இப்போ அவருக்கு அது கிடைச்சுடுச்சு. எனக்கும் இந்த மண் பிடிச்சிருக்கு. ஆனா…” என்று இழுத்தாள்.
“ஆனா என்ன?” – ராஜனின் புருவங்கள் உயர்ந்தன.
“ஆனா இங்க சில பேரோட மனசுல இன்னும் பகை இருக்கு. அந்தப் பகை மறையுற வரைக்கும் நான் இங்க இருக்கிறது சரியான்னு தெரியல” என்றாள் ரோஜா.
ராஜன் ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தினான். “பகை அவ்வளவு சீக்கிரம் மறையாது ரோஜா. ஆனா, ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ… உன்னை இந்த ஊர்ல எவனாவது தப்பாப் பார்த்தாலோ, இல்ல உனக்கு ஒரு கஷ்டம்னாவோ, முதல்ல வந்து நிக்கிறது இந்த ராஜனா தான் இருக்கும். அது உறவுக்காக இல்ல… என் ரத்தத்துக்காக!”
அவன் சொல்லிவிட்டு விறுவிறுவெனத் தன் எஸ்.யூ.வி காரை நோக்கி நடந்தான். ரோஜா அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பாறையான மனிதனுக்குள் ஒரு நீரூற்று இருப்பதை அவள் இன்று கண்டுகொண்டாள். அந்தப் பகைக்கு நடுவே ஒரு மெல்லிய காதல் அரும்பு அங்கே துளிர்விடத் தொடங்கியது.
அத்தியாயம் 3
சென்னையின் அந்தப் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில், 22-வது மாடியில் இருந்த சங்கரின் வீடு எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். அன்று மாலை, அந்த வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டிருந்தது. சங்கர் – அமுதா தம்பதியரின் 25-வது திருமண நாள்.
“அமுதா… இந்தச் சேலையில நீ அப்படியே அந்தச் செண்பகநல்லூர் இளவரசி மாதிரியே இருக்க!” என்று சங்கர் தன் மனைவியின் தோளில் கைபோட்டுச் சொல்ல, அமுதா வெட்கத்தோடு சிரித்தார்.
“விடுங்கம்மா… 25 வருஷம் ஆகியும் உங்க அப்பாவுக்கு இந்த ரொமான்ஸ் மட்டும் குறையவே இல்ல” என்று அமுதா சொல்ல, ரோஜா ஓடி வந்து இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
“அப்பா… நீங்க ரெண்டு பேரும் இப்படியே நூறு வருஷம் சந்தோஷமா இருக்கணும். உங்களைப் பார்க்குறப்போ எனக்கும் உங்களைப் போலவே ஒருத்தர் கிடைக்கணும்னு ஆசையா இருக்குப்பா” என்று ரோஜா சொல்ல, சங்கர் அவளது நெற்றியில் முத்தமிட்டார்.
“கண்டிப்பா ரோஜா… என் பொண்ணை ஒரு மகாராணி மாதிரி தாங்குற ஒருத்தன் உனக்குக் கிடைப்பான். சரி, நாங்க அந்தப் பெரிய ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு வரோம். நீ கேக் ரெடி பண்ணி வை” என்று சொல்லிவிட்டு சங்கர் காரை எடுத்தார். அமுதா ஜன்னல் வழியாகப் பனி மூடிய சாலையைப் பார்த்தபடி, “ஏங்க… ஏனோ மனசு படபடக்குது, பேசாம வீட்டுக்கே போயிடலாமா?” என்றார். சங்கர் அவர் கையைப் பிடித்து அழுத்தி, “பயப்படாத அமுதா… நான் இருக்கேன்ல” என்றார். அதுதான் அவர் சொன்ன கடைசி வார்த்தை.
மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த அந்த இரவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் கார் வளைந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி மலையெனச் சரிந்து சங்கரின் கார் மீது மோதியது.
வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு, கேக் வெட்டக் காத்திருந்த ரோஜாவுக்குத் தொலைபேசி அடித்தது. மறுமுனையில் பேசிய போலீஸ்காரரின் குரல் அவளது உலகத்தையே சுக்குநூறாக உடைத்தது. மருத்துவமனைக்கு ஓடிச் சென்றவள், அங்கே வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட இரண்டு உடல்களைப் பார்த்தாள்.
“அப்பா! அம்மா!” – அந்த அலறல் அந்த மருத்துவமனை முழுவதையும் அதிர வைத்தது.
ரோஜா தன் அப்பாவின் சில்லிட்டுப் போன கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினாள். “அப்பா… ‘ரோஜா’ன்னு ஒரு தரம் கூப்பிடுங்கப்பா… அம்மா… காலையில கூடத் தலை வாரி விட்டீங்களேம்மா… இப்போ இப்படிப் பேச்சில்லாம கிடக்கீங்களே! இனி நான் யாருக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைப்பேன்? யார்கிட்ட போய் அடம் பிடிப்பேன்?”
அவளது தேவதை முகம் கண்ணீரால் நனைந்து, கண்கள் வீங்கிப் போயிருந்தன. ஒரு சில மணி நேரத்திற்கு முன்னால் சிரிப்பும் கலகலப்புமாக இருந்த அந்த வாழ்க்கை, இப்போது வெறும் பிணங்களாக அவளுக்கு முன்னால் கிடந்தது. சென்னையில் அவர்களுக்குச் சொந்தம் என்று யாரும் இல்லை; சங்கரின் கம்பெனி ஆட்கள் சிலரைத் தவிர ரோஜாவுக்குத் துணையாக நிற்க ஒரு ஆள் கூட இல்லை.
…..
சென்னையின் அந்தப் பெய்யாத மழையில், தனது சாம்ராஜ்யம் சரிந்து கிடப்பதை அறியாமல் ரோஜா மருத்துவமனையின் பிணவறை வாசலில் சிலையாக நின்றிருந்தாள். உள்ளே அவளது உலகம் – அவளது அப்பாவும் அம்மாவும் – அசைவற்று கிடந்தனர்.
“அப்பா… எப்போவும் ‘ரோஜாக்குட்டி’ன்னு கூப்பிடுவீங்களே… இப்போ ஏன் இப்படிப் பேசாம இருக்கீங்க? அம்மா… காலையில கூட மதுரைக்காரிங்க தைரியமானவங்கன்னு எனக்குப் பாடம் எடுத்தீங்களே… இப்போ இப்படி என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டீங்களே!” என்று ரோஜா அலறினாள். அந்தப் பெரிய கம்பெனியின் வாரிசு, இன்று ஒரு அனாதையாகத் தன் பெற்றோரின் சடலங்களுக்கு முன்னால் தவித்த தவிப்பு, அந்த மருத்துவமனை ஊழியர்களின் கண்களையே கசிய வைத்தது.
சங்கரின் பிசினஸ் பார்ட்னெஸ் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் விஷயம் கேள்விப்பட்டு பதறி அடித்து வந்தனர்..
அரசு மருத்துவமனை வளாகம்… பிணவறைக்கு (Mortuary) வெளியே இருந்த அந்த நீண்ட வராண்டாவில், ரோஜா ஒரு உடைந்த சிலையாக அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றிச் சங்கரின் கம்பெனி ஊழியர்களும், சில நண்பர்களும் நின்றிருந்தாலும், யாருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ரோஜா… எதுக்கும் உங்க சொந்தக்காரங்களுக்கு ஒரு தகவல் சொல்லிடுவோமா?” என்று சங்கரின் நண்பர் கேட்க, ரோஜா கலங்கிய கண்களோடு மெல்லத் தலையசைத்தாள். அவளுக்குத் தெரிந்த ஒரே ஒரு எண், அவளது அப்பா அடிக்கடி ரகசியமாகப் பார்த்துப் பெருமூச்சு விடும் அந்தச் செண்பகநல்லூர் பங்காளி ஒருவரின் எண் தான்.
அவருக்கு தகவல் சொல்லி முடித்து ரோஜா அமைதியாக காத்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம், மதுரையின் செண்பகநல்லூர் கிராமத்தில் ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டது.
அரண்மனை வீட்டின் பெரிய கேட்டைத் திறந்து கொண்டு, சங்கரின் பங்காளி உறவுகள் நாலைந்து பேர் பதறி அடித்துக்கொண்டு உள்ளே ஓடி வந்தனர். திண்ணையில் ராஜன் கம்பீரமாக அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க, சக்திவேலும் தேவராஜும் அவனருகே நின்றனர்.
“ராஜன்! ராஜன்! ஒரு பெரிய அனர்த்தம் நடந்து போச்சுப்பா!” என்று வந்தவர்கள் மூச்சிரைக்கக் கத்தினர்.
ஆறுமுகம் தாத்தாவும், தெய்வானையும் பதற்றத்தோடு வெளியே வந்தனர். “என்னப்பா? என்னாச்சு? எதுக்கு இப்படிப் பதறுறீங்க?” என்று தெய்வானை கேட்க, வந்தவர்களில் ஒருவர் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
“தெய்வானை அக்கா… நம்ம சங்கரும், அவங்க பெண்டாட்டி அமுதாவும் மெட்ராஸ்ல ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்களாம். அந்தப் பொண்ணு ரோஜா மட்டும் தான் இப்போ அங்க தனியா அழுதுட்டு இருக்காம். விஷயத்தைக் கேட்டதும் நாங்க பதறிக்கிட்டு ஓடி வரோம்!”
இந்தச் செய்தியைக் கேட்டதும் தெய்வானை அப்படியே நிலைகுலைந்து சுவரில் சாய்ந்தார். பல வருடங்களாகத் தன் தம்பியை வெறுத்தாலும், அவன் இல்லை என்ற செய்தி அவர் வயிற்றைப் பிசைந்தது. கௌரி ஓடி வந்து, “ஐயோ… என் தாய்மாமன் போயிட்டாரா? அந்த மகராசன் இப்படிப் பாதியில போவாரேன்னு நினைக்கலையே!” என்று அழுதுகொண்டே தன் தாலியற்ற கழுத்தைப் பார்த்தாள். அவளது வாழ்க்கையைச் சிதைத்தவர் என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், தன் ரத்தமான மாமன் மறைந்தது அவளைப் பிழிந்தது.
சக்திவேலும் தேவராஜும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களுக்குத் சங்கர் பற்றித் தெரிந்ததெல்லாம் அந்தப் பழைய பகைக் கதைகள் தான். ஆனால் இப்போது அந்த மனிதர் இறந்துவிட்டார் என்பது அவர்களைப் பாதித்தது.
ராஜன் மெல்ல எழுந்து நின்றான். அவன் முகம் இறுகிக் கல்லானது. ஊர் மக்கள் மெல்ல மெல்ல அரண்மனை வாசலில் திரளத் தொடங்கினர். “சங்கர் தம்பி இறந்துட்டாராமே!” என்ற செய்தி ஊர் முழுக்கப் பரவி, ஒரு பெரிய கூட்டமே அங்கே கூடியது.
“ராஜன்… இப்போ என்ன பண்றது? அவன் தான் நம்மளை வேண்டான்னு போயிட்டானே…” என்று ஆறுமுகம் தாத்தா தயக்கத்தோடு கேட்க, ராஜன் ஊர் மக்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்.
“அவன் நம்மளை வேண்டான்னு போனது உண்மைதான். ஆனா, செண்பகக் கோட்டைப் பாரம்பரியப்படி, இந்த மண்ணோட ரத்தம் இந்த மண்ணுல தான் அடங்கணும். அதுதான் விதி. அந்தப் பொண்ணு ரோஜாகிட்ட சொல்லுங்க… சடலங்களைச் செண்பகநல்லூருக்கே கொண்டு வரச் சொல்லுங்க. அவங்க அந்தத் தோட்டத்து வீட்டுக்குப் பின்னாடியே அடக்கம் செய்யப்படட்டும். இது நம்ம குடும்பப் பெருமை!” என்று ராஜன் தன் அதிகாரக் குரலில் சொன்னான்.
அவன் பேச்சில் இருந்த அந்த கறாரானத் தன்மைக்குப் பின்னால், ஒரு சின்ன ஈரம் மறைந்திருந்தது. “தேவராஜ்! சக்திவேல்! இப்போவே மெட்ராஸ் கிளம்புங்க. தேவராஜ் நீ ஒரு அண்ணன் முறையில இருந்து அந்தப் பொண்ணுக்குத் துணையா நின்னு, உடல்களைப் பத்திரமா இங்கே அழைச்சுட்டு வாங்க. இது அரண்மனை உத்தரவு!”
ஊரே கூடிப் பேசிக்கொண்டிருக்க, ராஜன் மட்டும் மாளிகையின் உச்சாணிக் கோபுரத்தைப் பார்த்தபடி நின்றான். அவனுக்குத் தெரியும், வரப்போவது வெறும் சடலங்கள் மட்டுமல்ல; அந்தப் பகையின் மிச்சமான ரோஜாவும் தான் என்று!
தேவராஜ் மற்றும் சக்திவேல் இருவரும் சென்னை செல்லும் விமானத்தில் பயணித்து துரிதமாக அந்த மருத்துவமனை நோக்கி சென்றனர்.
விபத்து நடந்து சில மணி நேரங்கள் கடந்திருக்கும்…
மார்ச்சுவரி வாசலில் ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து இரு இளைஞர்கள் பதற்றத்தோடு இறங்கினர். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்த அந்த இருவரின் முகத்திலும் அந்த மதுரை மண்ணின் கறாரான கம்பீரமும், அதே சமயம் ஒரு தவிப்பும் தெரிந்தது.
அவர்கள் நேராக ரோஜாவின் அருகில் வந்தனர். ரோஜா நிமிர்ந்து பார்த்தாள். இவர்களை இதற்கு முன் அவள் பார்த்ததே இல்லை, ஆனால் பார்த்த உடனே ரத்தப் பாசம் அவளுக்கு அடையாளம் காட்டியது.
“நீங்க… ரோஜா தான?” என்று அந்த உயரமான இளைஞன் கேட்க, ரோஜா மெல்ல எழுந்தாள்.
“நான் தான்… நீங்க?” என்று கேட்ட ரோஜாவின் குரல் கரகரத்தது.
“நான் தேவராஜ்… இவன் சக்திவேல். செண்பகக் கோட்டையில இருந்து வாரோம்” என்று சொன்ன அடுத்த நொடி, ரோஜாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
யாருமே எதிர்பார்க்காத விதமாக, ரோஜா ஓடிச் சென்று தேவராஜின் கைகளைப் பற்றிக் கொண்டாள். “தேவராஜ் அண்ணா! அப்பா உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவாரு. சக்திவேல் அப்புறம் ராஜன் மாமா எல்லாரும் பத்தியும் சொல்லுவாரு. நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்கன்னு அப்பாவுக்கு அத்தனையுமே தெரியும். ஆனா நீங்க யாருமே அவரைத் தேடி வரலையேன்னு மட்டும் தான் வருத்தப்படுவாரு. இன்னைக்கு இப்படி அவரைப் பார்க்க வருவீங்கன்னு நான் நினைக்கலையே அண்ணா!” என்று சொல்லித் தேவராஜின் தோளில் சாய்ந்து கதறத் தொடங்கினாள்.
தேவராஜும் சக்திவேலும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போயினர். இதுவரைக்கும் அந்த மாளிகையில் சங்கரைப் பற்றி ஒரு துரோகியாகவும், பகையாளியாகவும் தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனுஷன் மதுரையை விட்டு வந்தாலும், தன் தம்பிகளைப் பற்றியும், மருமகன்களைப் பற்றியும் தனது மகளிடம் அணு அணுவாகச் சொல்லி வளர்த்திருப்பார் என்பதை அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
“இப்ப தான் அண்ணா முதல்முறையா உங்களை நேர்ல பார்க்கிறேன். ஆனா அப்பா வழியா உங்களை எனக்கு ரொம்ப வருஷமாவே தெரியும்” என்று ரோஜா சொல்லச் சொல்ல, தேவராஜின் நெஞ்சம் பிழிந்தது. ஒரு நிமிடம் தன் வைராக்கியத்தை மறந்து, அந்தத் தங்கையின் தலையை வருடினான் தேவராஜ்.
“அழாதே ரோஜா… நாங்க வந்துட்டோம்ல. இனிமே நீ அனாதை இல்ல. உனக்கு சொந்தம் சொல்லி நாங்க இருக்கோம்” என்று சக்திவேல் சொல்லும் போது அவன் கண்களும் கலங்கியிருந்தன.
மார்ச்சுவரிக்கு உள்ளே சென்று சங்கர் மற்றும் அமுதாவின் உடல்களைப் பார்த்த போது, அந்த இரு வாலிபர்களும் நிலைகுலைந்து போயினர். அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்தத் தாத்தா முறையுள்ள மனிதரைப் பார்க்கும் போது, எதற்கெடுத்தாலும் ‘வன்மம்’ பேசும் தங்களின் வளர்ப்பு எவ்வளவு தவறானது என்பது அவர்களுக்குப் புரிந்தது.
“ரோஜா… இனி இங்க இருக்க வேண்டாம். அப்பாவுக்கு ஊர் மேல ரொம்பப் பாசம் உண்டு. அவரை அங்கேயே அழைச்சுட்டுப் போயிடலாம். அங்க தான் அவருக்குச் சரியான மரியாதை நடக்கும். நீ தைரியமா இரு, நாங்க இருக்கோம்” என்று தேவராஜ் அவளுக்கு ஆறுதல் சொல்லி, அந்த இரு உடல்களையும் மதுரைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.
அதுவரை அனாதையாக நின்ற ரோஜாவுக்கு, இப்போது தன் அப்பா சொன்ன அந்த ‘ரத்தச் சொந்தங்கள்’ பக்கபலமாக வந்து நின்றது ஒரு பெரிய பலத்தைத் தந்தது. ஆனால், செண்பகநல்லூரில் காத்துக் கொண்டிருக்கும் அந்த ‘சிங்கம்’ ராஜன், இந்த அன்பைப் பார்த்து எப்படி எதிர்கொள்ள போகிறான் என்பது தான் அந்த ஊருக்கே ஒரு மர்மமாக இருந்தது.
அத்தியாயம் 30
இளமாறனின் அந்தப் பயங்கரமான சதி முறியடிக்கப்பட்டு, சுருதியும் அவளது வினைப்பயனை அனுபவிக்க அந்தப் பாதாள உலக வண்டியில் ஏற்றப்பட்ட பிறகு, பங்களாவில் ஒரு நிம்மதியான அமைதி நிலவியது. மருத்துவமனையில் இருந்து மீனாட்சியும் வைஷ்ணவியும் வீடு திரும்பியபோது, அந்த வீடே அவர்களுக்கு ஒரு புதிய கோவிலாகத் தெரிந்தது.
அதிரவனும் தென்னரசுவும் தங்களது பழைய கௌரவத்தையும், ஆணாதிக்கச் சிந்தனைகளையும் அந்த ரத்தக் கரைகளோடே வீசி எறிந்துவிட்டு வந்திருந்தனர். இப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது தங்களது மனைவிகளின் பாதுகாப்பும், அவர்களின் புன்னகையும் மட்டுமே.
திருமண நாள் அதிகாலை…
வைஷ்ணவி உடல்நலம் தேரட்டும் சற்று மனக்கசப்புகள் நீங்கும் என்று இரண்டு மாதம் கழித்து தான் திருமணம் தேதியே மீண்டும் குறித்தார்கள் இந்த முறை பிரச்சினை வரக்கூடாது என்று பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்தார்கள்.
அதிரவன் பங்களாவின் ஒரு பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டு, உறவினர்கள் யாரும் இன்றி மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் முன்னிலையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதிரவன் பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவனது கண்களில் எப்போதும் இருக்கும் அந்த அதிகாரக் கோடு மறைந்து, ஒருவிதமான பணிவு குடியேறியிருந்தது.
மீனாட்சி மெல்லத் தட்டுத் தடுமாறி நடந்து மேடைக்கு வந்தாள். அவளது கர்ப்பம் இப்போது சற்று மேலோங்கித் தெரிய, சிவப்பு நிறப் பட்டுப் புடவையில் அவள் ஒரு தேவதையாகத் தெரிந்தாள். அவளது முகம் அந்தப் போராட்டங்களுக்குப் பிறகு ஒரு புதிய பொலிவைப் பெற்றிருந்தது.
தென்னரசுவும் வைஷ்ணவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். வைஷ்ணவிக்கு ஏற்பட்ட அந்த ரத்தப்போக்கு இப்போது நின்றிருந்தது, அவள் மெல்லத் தேறி வந்தாள். தென்னரசு அவளை ஒரு நிமிடம் கூடக் கண் அசையாமல் கவனித்துக் கொண்டான்.
ஐயர் மந்திரங்களை ஓத, மங்கல இசை முழங்கியது. அதிரவன் அந்த மஞ்சள் கயிற்றை கையில் எடுத்தான். மீனாட்சியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். அந்தப் பார்வையில், “இனிமே நீ என் அடிமையோ அல்லது என் அதிகாரத்துக்கு உட்பட்டவளோ இல்லை… என் வாழ்வின் சரிபாதி” என்ற உறுதி தெரிந்தது.
அதிரவன் மீனாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான். அந்த ஒவ்வொரு முடிச்சும் அவனது ஆணாதிக்கத்தின் கடைசி மிச்சங்களை உடைத்து எறிவது போல இருந்தது. மீனாட்சியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து அவளது கன்னங்களை நனைத்தது.
மேளதாளங்கள் அதிர, பெரியவர்கள் அட்சதை தூவி ஆசீர்வதித்தனர். தாலி கட்டிய அடுத்த நொடி, அதிரவன் மீனாட்சியின் கைகளைப் பற்றிக் கொண்டு, “இனிமே உன்னை யாரும் தொட முடியாது மீனாட்சி. இந்த அதிரவன் உனக்காகவும், நம்ம பாப்பாவுக்காகவும் எதையும் செய்வான்,” என்று அவளது காதோரம் முணுமுணுத்தான்.
தென்னரசு ஓடி வந்து அதிரவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். “மகிழ்ச்சிடா மாப்பிள்ளை! இன்னைக்குத் தான் உன் வாழ்க்கை முழுமையடைஞ்சிருக்கு. உன்னோட இந்தத் தாலி உன் அதிகாரத்தை அல்ல, உன் அன்பைப் பறைசாற்றுது,” என்று உணர்ச்சிவசப்பட்டான்.
திருமண விருந்து முடிந்து, மாலையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இளமாறனைப் பற்றியோ, அந்தப் பயங்கரமான கடத்தல் சம்பவத்தைப் பற்றியோ யாரும் பேசவில்லை. ஆனால், அந்தச் சம்பவம் அந்த இரண்டு ஆண்களையும் எவ்வளவு மாற்றியிருக்கிறது என்பது அவர்கள் தங்கள் மனைவிகளிடம் காட்டும் கனிவிலேயே தெரிந்தது.
மீனாட்சி மெல்ல அதிரவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். “இவ்வளவு கஷ்டங்களுக்கு அப்புறம் இந்தக் கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை அதிரவன். நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்,” என்றாள்.
அதிரவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். “நானும் தான் மீனாட்சி… ஆனா அதைச் சொல்ல எனக்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கு. இனிமே நம்ம வாழ்க்கையில சந்தோஷம் மட்டும்தான்,” என்றான்.
இரவு நிலவொளியில் அந்தப் பங்களா ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால், இன்னும் ஒரு பெரிய கடமை பாக்கியிருந்தது. அந்த இரண்டு உயிர்களும் இந்தப் பூமிக்கு வரும் அந்தத் தருணம். அதுவே இந்த மாற்றத்தின் முழுமையான வெற்றியாக அமையும்.
எவ்வளவு நேரம் தான் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது என்று கூச்சத்தை மறந்து மறந்து தென்னரசு தன் மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டார்கள்..
“இப்படி எல்லாரும் முன்னாடியும் என்னை கைய புடிச்சு இழுத்துட்டு வரிங்களே மாமா இப்போ உங்க கௌரவம் எங்க போச்சு?”.
இன்று வைஷ்ணவி அவனை பார்த்து கிண்டல் அடிக்க..
“அடி போடி பொண்டாட்டி கூட சரசம் பண்ண நான் எதுக்கு கவுரவம் பாக்கணும்??”.
என்று அவளை வாரி தழுவிக் கொண்டான்.
எப்போது ஆக்ரோஷமாக நாடும் அவனது வேகம் இன்று ,அவளைப் பூவை விட மென்மையாக ஆள சொன்னது .
வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது .
அப்பா ஆகிவிட்டால் தன் பிள்ளைகளுக்காக என்ன வேணாலும் செய்வார்கள் இந்த ஆண்கள்.
,,,,,,,,,,
இங்கே ஏற்கனவே அதிரவை மீனாட்சிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டதால் அதிரவன் தனக்காக காத்திருக்கும் மீனாட்சி காக தன் அறை நோக்கி சென்றான்.
திருமண சடங்குகள் முடிந்து, ஆரவாரம் அடங்கிய நள்ளிரவு வேளையில், அந்தப் பிரம்மாண்டமான அறைக்குள் மல்லிகைப்பூக்களின் நறுமணம் பாரமாக நிறைந்திருந்தது. அதிரவன் அறைக்குள் நுழைந்ததும், ஜன்னல் ஓரம் வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்த மீனாட்சியை நோக்கினான். அவளது பட்டுப்புடவையின் தலைப்பு காற்றில் லேசாக அசைந்தாட, அவள் ஒரு ஓவியம் போல நின்றிருந்தாள்.
அதிரவன் மெல்ல அவளருகே சென்றான். அவனது வருகையை உணர்ந்த மீனாட்சி சட்டெனத் திரும்பினாள். அவளது கண்களில் ஒருவிதமான தவிப்பும், அதே சமயம் ஒரு புதிய நம்பிக்கையும் கலந்திருந்தது. அதிரவன் அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தினான். அவனது கட்டைவிரல்கள் அவளது கன்னங்களை மென்மையாக வருடின. அவனது பார்வையில் இருந்த அந்த ஆழமான காதல், மீனாட்சியின் அத்தனை பயத்தையும் போக்கியது.
அவன் மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தான். அது ஒரு நீண்ட, புனிதமான முத்தமாக இருந்தது. மீனாட்சி கண்களை மூடிக்கொண்டு அந்த உணர்வில் திளைத்தாள். அதிரவன் அவளது கழுத்தோரம் சரிந்து, அங்கே தனது முகத்தைப் புதைத்தான். அவளது கூந்தலின் வாசனையும், அந்தத் தாய்மைக்கே உரிய மென்மையான நறுமணமும் அவனை நிலைகுலையச் செய்தது.
மீனாட்சி அவனது சட்டையைத் தனது பலவீனமான கைகளால் பற்றிக்கொண்டாள். அவளது மூச்சுக்காற்று வேகமானது. அதிரவன் அவளை அப்படியே அள்ளித் தூக்கிக் கட்டிலில் கிடத்தினான். அவனது அசைவுகளில் முன்னிருந்த அந்த முரட்டுத்தனம் மறைந்து, ஒரு மென்மையான கவனிப்பு இருந்தது.
அவன் அவளது புடவையின் முந்தானையை மெல்ல விலக்கினான். அவளது 5 மாத கர்ப்பம் அவளுக்கு ஒரு புதிய அழகைத் தந்திருந்தது. அதிரவன் மண்டியிட்டு அமர்ந்து, அவளது வயிற்றின் மேல் தனது முகத்தை வைத்து, அந்த உயிரின் துடிப்பை உணரத் துடித்தான். அவனது கைகள் அவளது மேனியில் படர்ந்தபோது, மீனாட்சி ஒரு சிலிர்ப்புடன் அவனைத் தன்பக்கம் இழுத்தாள்.
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக முத்தமிட்டனர். அந்த முத்தத்தில் அத்தனை கால வலியும், பிரிவும், காதலும் கலந்திருந்தது. அதிரவன் அவளது உடலோடு உடலாக இணைந்து, அவளது அத்தனை அசைவுகளுக்கும் மதிப்பளித்து, அவளை ஒரு மகாராணி போல நடத்தினான். அந்த அறையில் நிலவிய மௌனம், அவர்களின் மூச்சுக்காற்றின் வேகத்தாலும், இதயத்துடிப்பின் சத்தத்தாலும் மட்டுமே கலைந்தது.
ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்த அந்த முரட்டு இதயம், இன்று காதலின் ஈரத்தால் கரைந்து, தனது துணைவியின் சாம்ராஜ்யத்தில் சரணடைந்தது. அந்த இரவு, அவர்களின் உடல்கள் மட்டுமின்றி, ஆத்மாக்களும் ஒன்றிணைந்த ஒரு உன்னதமான இரவாக மாறியது.
—….
அதிரவன் – மீனாட்சியின் திருமணத்திற்குப் பிறகு, இரண்டு குடும்பங்களும் தங்களுக்குரிய வாழ்விடங்களைத் தேடிப் பிரிந்தன. சென்னை மாநகரத்தின் இரைச்சலுக்கு நடுவே அதிரவனின் பங்களா ஒரு அமைதித் தீவாக மாறியிருக்க, தென்னரசு தனது வேர்களைத் தேடி கள்ளிக்காட்டு கிராமத்திற்கே தனது மனைவியுடன் திரும்பினான்.
கள்ளிக்காட்டு கிராமம் – தென்னரசுவின் உலகம்
மலையடிவாரத்தில் இருந்த அந்த ஓட்டு வீட்டைத் தென்னரசு வைஷ்ணவிக்காகவே ஒரு சொர்க்கமாக மாற்றியிருந்தான்.
கர்ப்பமாக இருக்கும் பெண் மலை கிராமத்தில் என்ன செய்வான் என்று அய்யா செய்த ஏற்பாடு தான் இது.
அதிகாலையில் சேவல் கூவும் முன்பே எழுந்து, வைஷ்ணவிக்குத் தேவையான பால் மற்றும் பழங்களை அவனே நேரில் சென்று சேகரித்து வருவான். பழையபடி வேலைக்காரர்களிடம் கத்துவதும், ஆணாதிக்கம் பேசுவதும் இப்போது அவனிடம் இல்லை.
வாரம் ஐந்து நாட்கள் பேக்டரியில் உழைப்பவன் வார இறுதி நாட்களில் அருகில் இருக்கும் ஒரு தோட்டத்தில் சும்மா இருக்க பிடிக்காமல் வேலை செய்து கூலி வாங்கிக் கொண்டு வருவான்.
ஒரு மதிய நேரம், வைஷ்ணவி வீட்டின் திண்ணையில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது எட்டாவது மாதக் கர்ப்பம் அவளது அசைவுகளைக் குறைத்திருந்தது. தென்னரசு வயல் வேலைகளை முடித்துவிட்டு வந்தவன், கையில் ஒரு கட்டு கரும்பை வைத்திருந்தான்.
“வைஷு! உனக்குக் கரும்பு பிடிக்கும்னு தோட்டத்துல இருந்து வெட்டிட்டு வந்தேன்டி,” என்று சொல்லி அவள் அருகே அமர்ந்தான். அவளது கால்கள் வீங்கியிருப்பதைப் பார்த்ததும், கரும்பை ஓரம் வைத்துவிட்டு, அவளது பாதங்களைத் தன் மடியில் தூக்கி வைத்தான்.
“மாமா… என்ன பண்றீங்க? யாராவது பார்க்கப் போறாங்க,” என்று வைஷ்ணவி பதறினாள்.
“பார்த்தா பார்க்கட்டும் வைஷு. இந்த ஊர்ல இருக்குற அத்தனை ஆம்பளைங்களுக்கும் தெரியட்டும்… பொண்டாட்டி காலடியில உட்காருறது அடிமைத்தனம் இல்லை, அதுதான் உண்மையான அன்புன்னு! உனக்கு ஒரு வலி வந்தா எனக்கு இங்க துடிக்குதுடி,” என்று உருக்கமாகச் சொன்னான். ஒரு காலத்தில் ‘பெண்கள் அடுப்படியில் கிடக்க வேண்டியவர்கள்’ என்று கர்ஜித்த தென்னரசு, இன்று தன் மனைவியின் காலடியையே தனது கோவிலாகக் கருதினான்.
சென்னை – அதிரவனின் சாம்ராஜ்யம்
அதிரவன் இப்போது பிசினஸில் புதிய உத்திகளைக் கையாண்டான். ஆனால் முன்னைப் போலப் பணத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டான். மீனாட்சியின் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, அவன் ஒரு நிமிடம் கூட அவளை விட்டுப் பிரியவில்லை.
அன்றிரவு, அதிரவன் தனது பிரம்மாண்ட பெட்ரூமில் மீனாட்சியுடன் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். மீனாட்சி அவனது தோளில் சாய்ந்து மெல்ல மூச்சு விடுவதையே அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.
“மீனாட்சி… நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?” என்று கேட்டான்.
“பெண் குழந்தையா இருந்தா என் அம்மாவோட பேர் வைக்கலாம் அதிரவன்,” என்றாள் மீனாட்சி.
அதிரவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்து, அவளது வயிற்றின் மேல் மென்மையாக வருடினான். “நிச்சயமா! ஆனா எனக்குத் தோணுது… உன்னைப் போலவே ஒரு தைரியமான பொண்ணா அவ வளரணும். இனிமே இந்த அதிரவன் யாரையும் அடிமைப்படுத்த மாட்டான். உனக்கு நான் கொடுத்த ஒவ்வொரு வலியையும், நம்ம பாப்பாவுக்கு நான் கொடுக்கப்போற அன்பால ஈடுகட்டுவேன்,” என்று கூறி அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான். அவனது விரல்கள் அவளது மேனியில் படர்ந்தபோது, அந்தச் சூழலே ஒரு மென்மையான காமத்தின் ஈரத்தால் நிறைந்திருந்தது.
சில வாரங்கள் கழித்து…
முதலில் மீனாட்சிக்குத்தான் பிரசவ வலி தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு உயர்தர மருத்துவமனையில் அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கியபோது அதிரவன் ஒரு குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான். “மீனாட்சி… இவன் என் வாரிசு மட்டும் இல்லை… என்னைத் திருத்தின உன்னோட அடையாளமும் கூட!” என்று அவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.
இந்தச் செய்தி கள்ளிக்காட்டு கிராமத்திற்குச் சென்ற அடுத்த வாரம், அங்கே வைஷ்ணவிக்கு வலி எடுத்தது. தென்னரசு அவளைத் தனது ஜீப்பில் ஏற்றி டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்குள் அவனது மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. அங்கே வைஷ்ணவிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் குழந்தையை கையில் ஏந்திய தென்னரசு, ஊர் மக்களே வியக்கும் வண்ணம் ஒரு பெரிய விருந்தை அளித்தான். “பெண் குழந்தை பிறந்தா எதுக்குக் கவலைப்படணும்? என் மகள்தான் இந்தக் கள்ளிக்காட்டுக்கு மகாராணி!” என்று அவன் பறைசாற்றினான். வைஷ்ணவி பிரசவ வார்டில் வலியால் துடித்ததைப் பார்த்த தென்னரசு, “டாக்டர்… இனிமே ஒரு குழந்தை கூட வேண்டாம். வைஷு படுற கஷ்டத்தைப் பார்க்க எனக்குத் தைரியம் இல்லை,” என்று பயந்து போய் நின்றது வைஷ்ணவியின் இதயத்தை நெகிழச் செய்தது.
நிறைவுப் பகுதி
இரண்டு வருடங்கள் கழித்து, தென்னரசு தனது குடும்பத்தோடு அதிரவனின் பங்களாவிற்கு வந்தான். அங்கே இரண்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
அதிரவன் தனது மகனைத் தூக்கிக் கொண்டு, தென்னரசுவின் மகளை “தங்கச்சி” என்று அழைக்கச் செய்தான்.
“பார்த்தியா தென்னரசு… நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு, பொண்டாட்டிகளை அடிமைப்படுத்தி என்ன சாதிச்சோம்? கடைசியில இந்த அன்பு தான் நம்மளை மனுஷனா மாத்திருக்கு,” என்றான் அதிரவன்.
“ஆமா அதிரவன்… அன்னைக்கு அந்த இளமாறன் கையில என் வைஷுவை இழந்திருந்தா, இன்னைக்கு என் கையில இந்த அழகான தேவதை இருந்திருக்க மாட்டா. பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்காத எந்த ஆணும் முழுமையான ஆண் கிடையாதுன்னு இப்பதான் புரியுது,” என்று தென்னரசு வைஷ்ணவியின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
………
அன்று அதிரவன் மகனுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் அதற்காக தான் அனைவரும் கூடி இருந்தார்கள்..
பிறந்தநாள் விழா முடிந்தவுடன் குழந்தைகள் இரண்டும் பெரியவர்கள் அடைக்கலத்தில் இருக்க ஜோடிகள் இருவரும் அடுத்த குழந்தைகளுக்கான முயற்சியை மேற்கொள்ள தனித்தனி அறையில் தஞ்சம் புகுந்து விட்டார்கள்..
இங்கே தென்னரசு வைஷ்ணவி மடியில் படுத்துக்கொண்டு
“வைஷ்ணவி எனக்கு பயமா இருக்கு டி மறுபடியும் உனக்கு இன்னொரு புள்ள வேணுமா??”
என்று பாவமாக கேட்க
“அட என்ன மாமா நீங்க எல்லாரும் குழந்தை பிறந்து ரெண்டு மாசம் கழிச்சு கருப்பு ஆகுறாங்க நான் ரெண்டு வருஷம் கழிச்சு கர்ப்பமாகி இருக்கேன் பிரக்னன்சி இருக்கட்டும் எனக்கு இன்னொரு குழந்தை வேணும்னு ஆசையா இருக்கு என்ன மாதிரி ஒத்த பிள்ளையாய் என் குழந்தை இருக்க கூடாது அவளுக்கு துணை இருக்கணும்”.
என்று சொல்ல
“என்னவோ சொல்றடி ஆனா எனக்கு பயமா இருக்குது இந்த வாட்டி இன்னும் உன்ன பத்திரமா பாத்துக்கணும் ஆனா ஒன்னு இந்த குழந்தைக்கு அப்புறம் நானா போய் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்குவேன் அது பண்ணா கூட வலிக்கும் ஆமே உனக்கு உடம்புல கத்திய படாம நான் பாத்துக்குறேன்”.
என்று அவன் அவளை விட அதிகமாக பிரசவ பயத்தில் இருக்க.
“சண்டிவீரன் மாதிரி இருந்த என் மாமா இப்படி ஆயிட்டாரே”.
என்று வைஷ்ணவி அவனைப் பார்த்து கிண்டல் செய்ய
“எல்லாம் நீ தாண்டி காரணம் நீதான் என்னை மொத்தமா மாத்திட்டேன் எப்படி இருந்த நான் எந்த காரணத்துக்காக சென்னைக்கு வந்தாலும் அது நடக்கல மாயக்காரி குறுக்கல நீ வந்து என்கிட்ட மாட்டிக்கிட்ட அப்புறம் எல்லாம் புரியுது நான் தான் உன்கிட்ட மாட்டிக்கிட்டேன் அப்படின்னு எங்க அக்கா மேல இருக்க கோவத்தை உன் மேல காட்டி இருப்பேன் ஆனா நீ உண்மையாக பார்த்தியா அங்க நிக்கிற புள்ள.”
என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க
அவள் இதழை சுட்டிக்காட்ட இதழ் முத்தம் கொடுத்தால் அடுத்து என்ன நடக்கும் என்று பயந்தவன்
“இப்பதான் இரண்டாவது மாசம் வெச்சிருக்கு அப்படின்னு சொல்ற இப்ப எதுவும் வேணாம் அமைதியா படு”
என்று அவளை தன் நெஞ்சின் மீது படுக்க வைக்க வைஷ்ணவி நிம்மதியாக கண்ணுறங்கினாள்.
“எப்படி காதல் வந்தது இருவருக்கும் அதற்கு பதில் இல்லை ஆனால் இனி எப்படி இருக்கும் இவர்கள் காதல் அதற்கான பதில் அவர்கள் வாழும் அழகே வாழ்க்கை தான்”.
இங்கே அதிரவன் அறையில்
நிலவிய அந்த அமைதி மிகவும் சுகமானதாக இருந்தது. ஜன்னல் வழி வந்த நிலவொளி மீனாட்சியின் முகத்தில் பட்டுத் தெறிக்க, அதிரவன் அவளைத் தனது மார்போடு அணைத்தபடி கட்டிலில் சாய்ந்திருந்தான். அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நீண்ட மௌனம் நிலவியது. அது வார்த்தைகள் தீர்ந்து போன மௌனம் அல்ல; ஒருவரை ஒருவர் முழுமையாக உணர்ந்த மௌனம்.
“மீனாட்சி…” அதிரவன் மெல்ல அவளது தோளில் முத்தமிட்டபடி அழைத்தான். “நம்ம இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கோம்னு நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. ஆரம்பத்துல நான் உன்கிட்ட நடந்துகிட்ட விதம்… அந்த முரட்டுத்தனம்… இப்போ நினைச்சாலும் என் மனசை உறுத்துது.”
மீனாட்சி அவனது கைகளைத் தன் கைகளால் கோர்த்துக்கொண்டாள். “அதிரவன், அந்த வலிகள் இல்லைன்னா இந்த அன்போட மதிப்பு நமக்குத் தெரிஞ்சிருக்காது. ஆணாதிக்கத்தோட உச்சியில இருந்த நீங்க, இப்போ என் மடியில ஒரு குழந்தையா கிடக்குறீங்களே… இதுதான் நான் பெத்த வெற்றி,” என்று அவனது கண்களை ஆழமாகப் பார்த்தாள்.
அதிரவன் அவளது முகத்தை வருடினான். “உன்னை அடிமைப்படுத்தணும்னு நினைச்சேன், ஆனா உன்னோட அன்பால என்னை நீயே உனக்கு அடிமையாக்கிட்ட. இனிமே என் ஒவ்வொரு மூச்சும் உனக்காகவும், நம்ம வாரிசுக்காகவும் தான்,” என்று கூறி அவளது இதழ்களில் ஒரு மென்மையான முத்தத்தைப் பதித்தான்.
அவனது கைகள் அவளது மேனியில் ஒரு மெல்லிய தாளத்தைப் போலப் படர்ந்தன. மீனாட்சி அவனது அணைப்பின் கதகதப்பில் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள். ஒரு காலத்தில் பயத்தால் நடுங்கிய அந்த உடல், இன்று அவனது தொடுதலுக்காக ஏங்கியது. அதிரவன் அவளது கழுத்தோரம் தனது முகத்தைப் புதைத்து ஆழமாக மூச்சை இழுத்தான். அவளது வாசனை அவனுக்கு ஒரு போதையைத் தந்தது.
மெல்ல அவளது புடவைச் சரிவை விலக்கியவன், அவளது வளைவுகளில் தனது முத்திரையைப் பதித்தான். அந்த அறையின் வெளிச்சம் குறைந்து, அவர்களின் இதயத் துடிப்பின் சத்தம் மட்டும் எதிரொலித்தது. அதிகாரத்தால் தொடங்கப்பட்ட அவர்களின் பயணம், இன்று ஈடுஇணையற்ற காதலில் சங்கமித்தது. அந்த இரவு, அவர்களின் கடந்த கால காயங்களுக்கு மருந்தாகவும், வருங்காலத்தின் தொடக்கமாகவும் அமைந்தது.
—
அதிகாரத் திமிரில் ஆடிய வேங்கை,
பெண்மை என்னும் பேரன்பில் வீழ்ந்ததே!
கல்லாய் இருந்த இதயத்தின் ஓரம்,
காதல் என்னும் கவிதை பூத்ததே!
விலங்கெனத் துடித்த ஆணாதிக்கப் பித்து,
வாரிசின் துடிப்பில் மண்டியிட்டதே!
தாலி தந்த உரிமையில் தொடங்கி,
தோள் தந்த துணையில் முடிந்ததே!
அடிமை என நினைத்தவள் – இன்று
ஆயுள் வரை ஆளும் அரசி!
காதல் என்னும் சாம்ராஜ்யத்தில் – இனி
அன்பே என்றும் மகுடம் சூடும்!
அந்தப் பிரம்மாண்ட பங்களாவின் தோட்டத்தில், நிலவொளியின் கீழ், பழைய கசப்புகளை மறந்து அந்த இரண்டு குடும்பங்களும் ஒரு புதிய சரித்திரத்தை எழுதத் தொடங்கின. அங்கே ஆணாதிக்கம் எனும் இருள் கலைந்து, சமத்துவம் எனும் ஒளி நிரந்தரமாகக் குடியேறியது.
சுபம்..
அத்தியாயம் 29
நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தப் பாழடைந்த கிடங்கிற்கு அருகே கண்டைனர் லாரி நின்றிருந்தது. இளமாறனின் ஆட்கள் ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்க, அதிரவனின் கார் டயர்கள் அலற அந்த இடத்திற்குள் வந்து நின்றது. கார் முழுமையாக நிற்பதற்கு முன்பே, அதிரவனும் தென்னரசுவும் கீழே குதித்தனர்.
“இளமாறா! வெளிய வாடா கோழையே!” என்று அதிரவன் கர்ஜித்தான். அவனது கண்கள் ரத்த நாளங்கள் புடைக்கச் சிவந்திருந்தன.
இளமாறன் கண்டைனரின் மேலிருந்து கீழே குதித்து, ஒரு வக்கிரமான புன்னகையுடன் அவர்களைப் பார்த்தான். “வா அதிரவன்… வா தென்னரசு! உங்க ரெண்டு பேரோட வாரிசும், அந்த ரெண்டு அழகிகளும் இதோ இந்தப் பெட்டிக்குள்ள தான் இருக்காங்க. ஆனா இன்னும் அரை மணி நேரத்துல இவங்க பாம்பே பார்ட்டியோட கைக்கு மாறிடுவாங்க. அப்புறம் உங்க கௌரவம் என்ன ஆகும்னு யோசிச்சு பாரு,” என்று சொல்லிவிட்டுச் சைகை காட்டினான்.
இளமாறனின் அடியாட்கள் சுமார் இருபது பேர் கத்திகளுடனும், இரும்புக் கம்பிகளுடனும் அவர்களைச் சூழ்ந்தனர். அதிரவன் மின்னல் வேகத்தில் ஒருவனைத் தாக்கி அவனிடமிருந்த கம்பியைப் பறித்தான். தென்னரசு தனது கையில் இருந்த நீண்ட கத்தியைச் சுழற்றி வேட்டையாடத் தொடங்கினான்.
அதிரவனின் ஒவ்வொரு அடியிலும் ஒரு தந்தையின் ஆக்ரோஷம் தெரிந்தது. “என் மனைவியையும் குழந்தையையும் தொட நினைக்கிற எவனும் உயிரோட இருக்கக் கூடாது!” என்று கத்தினான். தென்னரசு ஒருவனின் கழுத்தை அப்படியே நெரித்துக் கீழே தள்ளினான். இளமாறனின் ஆட்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
அதிரவன் கண்டைனரின் பூட்டை உடைக்க முயன்றபோது, இளமாறன் தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து அதிரவனை நோக்கி நீட்டினான். “போதும் அதிரவன்… இதோட முடிச்சுக்கலாம்!”
ஆனால் தென்னரசு எங்கிருந்தோ பாய்ந்து வந்து இளமாறனின் கையைப் பிடித்தான். துப்பாக்கிச் சத்தம் அந்தப் பகுதியையே அதிரச் செய்தது. குண்டு அந்தரத்தில் பாய்ந்தது. இளமாறனைத் தென்னரசு வெறிபிடித்தது போல் அடிக்கத் தொடங்கினான். “என் தங்கச்சியையும், என் பொண்டாட்டியையும் ஏலம் போடப் பார்த்தியாடா?” என்று அவன் முகத்தைச் சிதைத்தான்.
அந்தச் சத்தங்களுக்கு நடுவே, கண்டைனர் லாரியின் உள்ளே மீனாட்சியும் வைஷ்ணவியும் மயக்கம் தெளிந்து ஒருவரையொருவர் கட்டிக் கொண்டிருந்தனர். அந்த இரும்புப் பெட்டியின் வெப்பமும், ஆக்சிஜன் குறைவும் அவர்களைத் தவிக்க வைத்தது.
“மீனு… எனக்கு ரொம்ப வலிக்குது… ஏதோ கீழே ஓடுற மாதிரி இருக்கு,” என்று வைஷ்ணவி கேவினாள்.
மீனாட்சி இருட்டில் துழவிப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். வைஷ்ணவியின் கால்களில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. “மாமா! அதிரவன்! யாராவது காப்பாத்துங்க! வைஷுவுக்கு பிளீடிங் ஆகுது!” என்று மீனாட்சி கதறினாள். அவளது அலறல் சத்தம் அதிரவனின் காதில் விழுந்தது.
அதிரவன் வெறிபிடித்தவன் போல் ஒரு பெரிய கல்லைத் தூக்கி கண்டைனரின் பூட்டை உடைத்தான். கதவுகள் திறந்தபோது, அங்கே மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வைஷ்ணவியையும், அவளைத் தாங்கிப் பிடித்து அழுதுகொண்டிருந்த மீனாட்சியையும் பார்த்தான்.
“வைஷு!” என்று தென்னரசு ஓடி வந்து அவளைத் தூக்கினான். அவனது முரட்டு இதயம் அந்த ரத்தத்தைப் பார்த்ததும் அப்படியே உடைந்து போனது.
“அதிரவன்… குழந்தை… என் குழந்தை…” என்று தென்னரசு அழத் தொடங்கினான்.
அதிரவன் அவனை சமாதானம் செய்த, “தென்னரசு, அழாதே! வண்டியில ஏத்து… உடனே ஹாஸ்பிடல் போகணும். இளமாறனை அப்புறம் பார்த்துக்கலாம்,” என்று கத்தினான்.
அவர்கள் இரு பெண்களையும் காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு விரைந்தனர். வழியில் இளமாறன் தப்பிக்க முயன்றபோது, அதிரவனுக்குத் தெரிந்த போலீஸ் டீம் அந்த இடத்தை முற்றுகையிட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வைஷ்ணவியின் நிலைமை மோசமானது. தென்னரசு அவளது கையைத் தன் முகத்தில் ஒற்றிக் கொண்டு, “மன்னிச்சுடுடி வைஷு… நான் உங்க கூடவே இருந்து இருக்கணும். தக்க சமயம் பார்த்து பழிவாங்கறதுக்காக இவ்வளவு கேவலமான புத்திய காட்டிட்டான் அந்தப் பாவி. உனக்கு எதுவும் ஆகாதுடி,” என்று கதறினான். மீனாட்சி அவனது தோளைத் தொட்டு ஆறுதல் கூறினாள், ஆனால் அவளது கண்களிலும் ஒரு இனம்புரியாத பயம் இருந்தது.
மருத்துவமனைக்குள் வைஷ்ணவியை ஸ்ட்ரக்சரில் ஏற்றியபோது, தென்னரசு அந்த இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தான்.
தாயும் குழந்தை ஆபத்தில் இருக்கிறார்கள் ஒருவரை காப்பதே பெரிய விஷயம் என்று சொல்லிவிட்டு போக.
தென்னரசு சுக்குநூறாக உடைந்து விட்டான்.
“எனக்கு குழந்தை கூட வேண்டாம் கடவுளே… என் பொண்டாட்டி மட்டும் எனக்கு வேணும்,” என்று ஒரு சிறுபிள்ளையைப் போல அவன் அழுத அந்த நிமிடம், அவனது அத்தனை ஆணாதிக்கமும் அந்த ரத்தக் கரைகளில் கரைந்து போனது.
……
மருத்துவமனையின் அந்த நீண்ட வராண்டாவில் நிலவிய நிசப்தம், அதிரவன் மற்றும் தென்னரசுவின் இதயத் துடிப்பை விட அதிகச் சத்தமாக இருந்தது.
மருத்துவர்கள் வைஷ்ணவிக்கு டிரீட்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. தென்னரசு சுவரில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தான். அவனது கைகளில் இன்னும் வைஷ்ணவியின் ரத்தக் கறைகள் காய்ந்து போய் அப்படியே இருந்தன. அதிரவன் அங்கும் இங்கும் நடைபயின்றபடி, மீனாட்சியின் உடல்நிலை குறித்தும், வைஷ்ணவியின் கருவிலுள்ள குழந்தையின் நிலை குறித்தும் பெரும் பதற்றத்தில் இருந்தான்.
அதே சமயம் மீனாட்சிக்கு சில பல காயங்கள் இருந்தது அவளும் தனியாக ஒரு வார்டில் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொண்டிருந்தாள்.
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, டாக்டர் வெளியே வந்தார். தென்னரசு பாய்ந்து சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டான். “டாக்டர்… என் வைஷு… பாப்பா…” என்று வார்த்தைகள் வராமல் தவித்தான்.
டாக்டர் ஒரு மெல்லிய புன்னகையுடன், “பயப்பட ஒன்னும் இல்லை தென்னரசு. ரத்தப்போக்கு அதிகமா இருந்தது உண்மைதான், ஆனா சரியான நேரத்துல கூட்டிட்டு வந்துட்டீங்க. குழந்தைக்கும் தாய்க்கும் இப்போ எந்த ஆபத்தும் இல்லை. வைஷ்ணவி ரொம்ப தைரியமான பொண்ணு. மீனாட்சி மேடமும் இப்போ நார்மலா இருக்காங்க. ரெண்டு பேரையும் ரூமுக்கு ஷிப்ட் பண்றோம்,” என்றார்.
அந்த ஒரு வார்த்தை, இரண்டு ஆண்களின் நுரையீரலுக்குள் ஆக்சிஜனைப் பாய்ச்சியது. தென்னரசு அப்படியே தரையில் விழுந்து கடவுளுக்கு நன்றி சொன்னான். அதிரவன் தென்னரசுவின் தோளைப் பிடித்துத் தூக்கி, “முடிஞ்சதுடா… இனிமே அவங்களை நாம ஒரு பூ மாதிரி பார்த்துக்கணும்,” என்றான்.
அதே இரவு – ஒரு பாழடைந்த கிடங்கு
மருத்துவமனையில் மனைவிகள் தேறிய செய்தி கிடைத்ததும், அதிரவன் மற்றும் தென்னரசுவின் கண்களில் ஒரு கொடூரமான வேட்டை உணர்வு எழுந்தது. இளமாறனும் சுருதியும் அதிரவனின் ஆட்களால் ஒரு ரகசிய இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அதிரவன் அங்கே நுழைந்தபோது, அவனது கையில் ஒரு நீண்ட கயிறு இருந்தது.
இளமாறன் ரத்தக் காயங்களுடன் சுவரில் சாய்ந்திருந்தான். சுருதி பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள். “அதிரவன்… என்னை விட்ரு… இதெல்லாம் இளமாறன் சொன்னதுனாலதான் நான் செஞ்சேன்,” என்று அவள் கதறினாள்.
அதிரவன் இளமாறனின் முன்னால் வந்து நின்றான். “என் பொண்டாட்டியையும், வைஷ்ணவியை ஏலம் போடப் பார்த்தியாடா? அவங்க வயித்துல இருக்குற அந்தச் சின்ன உயிரைக்கூடப் பார்க்காம வண்டியில ஏத்தினியே… அந்தத் துடிப்பு இப்போ உன் உடம்புல இருக்கக் கூடாது,” என்று சொல்லிவிட்டு, அவனது ஆட்கள் மூலம் இளமாறனை ஒரு லாரியின் பின்புறம் கட்டச் செய்தான்.
அந்த லாரி, அதே பாம்பே செல்லும் கண்டைனர் லாரி. இளமாறனின் இறுதிப் பயணம் அங்கேயே முடிந்தது. அவன் ஒரு விபத்தாகச் சித்திரிக்கப்பட்டுத் தீர்த்துக்கட்டப்பட்டான். அவனது அத்தனை கிரிமினல் ஆதாரங்களும் அதிரவனால் அழிக்கப்பட்டன.
அடுத்து சுருதியின் பக்கம் திரும்பினான் தென்னரசு. “ஏய்! ஒரு பொண்ணா இருந்துட்டு இன்னொரு பொண்ணை விக்கத் துணிஞ்சியே… நீ இங்க இருந்தா மறுபடியும் விஷத்தைக் கக்குவ. உனக்கு எது சரியான இடமோ, அங்கேயே உன்னை அனுப்பி வைக்கிறேன்,” என்றான். சுருதிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதே பாம்பே செல்லும் ரெட் லைட் ஏரியா வண்டியில் அவளே ஒரு சரக்காக ஏற்றப்பட்டாள். அவளது கடந்த காலமும், எதிர்காலமும் அந்த இருட்டில் காணாமல் போனது.
….
அத்தியாயம் 28
பங்களா முழுவதும் மல்லிகைச் சரங்களின் வாசமும், சந்தனத்தின் மணமும் நிறைந்திருந்தது. அதிரவன் – மீனாட்சி திருமணத்திற்காக வீடு ஒரு மணப்பெண்ணைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மீனாட்சியின் பெற்றோர் வந்த பிறகு, பங்களாவில் ஒரு புதிய நிம்மதி குடியேறியது. அதிரவன் இப்போது பழைய பிசினஸ் மேக்னட் அல்ல; அவன் மீனாட்சியின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் ஒரு காதலனாக மாறியிருந்தான். மீனாட்சிக்கு அடிக்கடி ஏற்படும் சோர்வையும், அந்த விசித்திரமான தலைசுற்றலையும் பார்த்து அவன் பதறிப்போனான். ஒரு மாலை நேரம், அவள் சோபாவில் தளர்ந்து அமர்ந்திருக்க, அவளது பாதங்களை மெல்லத் தன் மடியில் தூக்கி வைத்துப் பிடித்துவிட்டான்.
“அதிரவன்… என்ன பண்றீங்க? அம்மா பாக்க போறாங்க,” என்று மீனாட்சி பதறினாள்.
“பாக்கட்டுமே… என் பொண்டாட்டிக்கும், என் வாரிசுக்கும் செய்றதுல எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை மீனாட்சி. இத்தனை நாள் உன்னை ஒரு அதிகாரம் பண்ற பொருளா பார்த்த என் கண்ணுக்கெல்லாம் இது ஒரு பெரிய தண்டனை தான்,” என்று அவன் உருகினான். அவனது கைகள் அவள் பாதங்களை மென்மையாக வருட, மீனாட்சியின் கண்கள் கசிந்தன. ஆணாதிக்கம் மண்டியிட்ட இடம் இதுதான்.
மறுபுறம், தென்னரசுவின் நிலைமை இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வைஷ்ணவிக்கு ஒரு சின்னக் குமட்டல் வந்தாலும் அவன் “வைஷு!” என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். அவளுக்குப் பிடித்தமான உணவுகளைச் சென்னையில் தேடித் தேடி அலைந்து வாங்கி வந்தான். “வைஷு, உனக்கு எதுக்குடி வேலை? நீ அங்கேயே உட்காரு,” என்று அவளை ஒரு மகாராணி போல நடத்தினான்.
இதையெல்லாம் பார்த்து பெரியவர்களுக்கு தங்களுக்கென்று வாரிசு வரும் பொழுது தான், மனைவி மீது அக்கறை .
என்று அனைவரும் கிண்டல் செய்ய ஆண்கள் இருவருக்கும் ஒரே வெட்கமாகி போனது.
அதன் பிறகு மீனாட்சி அதிரவன் இருவரும் சந்திக்கக் கூடாது திருமணமாகும் வரை என்று கட்டளை போட ,
அவன் சும்மா இருப்பானா?? இரவு நேரத்தில் ரகசியமாக அவள் அறைக்குள் புகுந்து அவளோடு சில்மிஷம் செய்வதுடன் அவனுக்கு பெரும் வேலையாக இருந்தது.
“இன்னும் ரெண்டு நாளில் நம்ம கல்யாணம். இப்பவே வயித்துல உங்க குழந்தை ரெண்டு மாசம் உயிர். எது புதுசா பண்ற மாதிரி என்கிட்ட கொஞ்சிட்டு இருக்கீங்க??”.
என்று மீனாட்சி அவனைப் பார்த்து சினுங்க..
“அதெல்லாம் இல்ல எனக்கு எப்பவுமே நீ புது பொண்டாட்டி தான்”. என்று இன்னும் அவளை சூறையாடிக்கொண்டான்.
அவனுக்குள் இருக்கும் காமமும் குறையவில்லை காதலும் குறையவில்லை இரண்டும் சமநிலையில் அவளிடம் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தான்.
,,,,,,
கல்யாணத்திற்கு முந்தைய நாள் மாலை… மெஹந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்தன. உறவினர்கள் யாரும் இல்லாததால், வீட்டில் வேலை செய்பவர்களும், சில முக்கியத் நண்பர்கள் மட்டுமே இருந்தனர். இளமாறனின் திட்டப்படி, மெஹந்தி போடும் கலைஞர்கள் போல அவனது ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.
மீனாட்சியும் வைஷ்ணவியும் மேடையில் அமர்ந்திருக்க, இரண்டு பெண்கள் அவர்களுக்கு மெஹந்தி போடத் தொடங்கினர்.
“மேடம், இது ஒரு ஸ்பெஷல் ஆர்கானிக் மெஹந்தி. இதோட வாசனை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்று அந்தப் பெண் ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலை எடுத்தாள்.
மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்கள் ரகசியமாக ஒரு மயக்க மருந்து கலந்த ஸ்ப்ரேவை அவர்கள் மூக்கிற்கு அருகே அடித்தனர். மீனாட்சிக்கும் வைஷ்ணவிக்கும் ஒரு நிமிடம் தலை சுற்றியது.
“வைஷு… எனக்கு ஒரு மாதிரி இருக்கு,” என்று மீனாட்சி சொல்லும்போதே அவளது கண்கள் செருகின. அடுத்த சில நொடிகளில் இருவரும் மயக்கத்தின் பிடிக்குள் விழுந்தனர்.
வெளியே அதிரவனும் தென்னரசுவும் கல்யாணப் பந்தலில் சில வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெஹந்தி மீனாட்சி இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்ததால் அந்த அரை பக்கம் அவளை தொந்தரவு செய்ய வேலையாட்கள் யாரும் அந்த பக்கம் வரவில்லை இது இவர்களுக்கு சாதகமாகிப்போனது.
ஒரு மிகப்பெரிய துணி மூட்டைக்குள் இருவரையும் சுருட்டி உணவு சப்ளை செய்ய வந்த வேலைக்காரர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு வந்த இளம் மரணி நாட்கள் இரு பெண்களையும் தூக்கி சென்றனர்.
பங்களாவின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பெரிய பார்சல் கண்டைனர் லாரியில் இருவரையும் ஏற்றினர். இளமாறன் தூரத்தில் நின்று கொண்டு இதைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தான்.
“சுருதி… பறவைகள் கூண்டுல மாட்டிக்கிச்சு. அடுத்த ஸ்டாப் பாம்பே தான்!” என்றான் வக்கிரத்துடன்.
சிறிது நேரம் கழித்து அதிரவன் உள்ளே வந்தான். “மீனாட்சி! வைஷு! எங்க போயிட்டீங்க?” என்று அவன் கத்தியபோது அங்கே அமைதி மட்டுமே நிலவியது. ஹாலில் மீனாட்சியின் செருப்பு மட்டும் அனாதையாகக் கிடந்தது.
அதிரவனின் இதயம் துடிக்க மறந்தது. “தென்னரசு! தென்னரசு! இங்க வாடா… பொண்ணுங்களைக் காணோம்!” என்று அவன் அலற, பங்களாவே ஒரு மரணப் பயத்தில் உறைந்தது. இளமாறனின் கொடூரமான வேட்டை தொடங்கிவிட்டது.
பங்களாவே மரண அமைதியில் உறைந்திருந்தது. மீனாட்சி மற்றும் வைஷ்ணவியின் அறைகளில் அவர்கள் பயன்படுத்திய மெஹந்தி வாசனை இன்னும் மிச்சமிருந்தது, ஆனால் அவர்கள் அங்கில்லை. அதிரவன் பைத்தியம் பிடித்தவன் போல் ஒவ்வொரு அறையாகத் தேடினான். தென்னரசுவின் கண்கள் சிவந்து, ஆத்திரத்தில் கைகள் நடுங்கின.
“அதிரவன்… இது சாதாரணக் காணாமல் போதல் இல்லைடா. யாரோ திட்டமிட்டுத் தூக்கியிருக்காங்க!” என்று தென்னரசு கத்த, பங்களாவின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மெல்ல உள்ளே வந்தான்.
“அங்கிள்… அந்தப் பெரிய பெட்டியைத் தூக்கிட்டுப் போனவங்க, பின்னாடி நின்ன ஒரு பெரிய லாரியில ஏத்திட்டுப் போனாங்க. அந்த லாரி மேல ‘பாம்பே பார்சல் சர்வீஸ்’னு எழுதியிருந்தது,” என்று அவன் பயத்துடன் சொன்னான்.
“டேய் குட்டி பையா உனக்கு அந்த வண்டியோட நம்பர் ஞாபகம் இருக்கா??”.
என்று தென்னரசு கேட்க..
“ஞாபகம் இருக்கும் ஞாபகம் இருக்கு நம்பர் ரொம்ப பேன்சியா இருந்தது”. என்று சொல்லி, ஒரு மும்பை பின்கோடு கொண்ட வண்டி என் நம்பரை சொல்லிவிட
அதிரவன் உடனே பங்களாவின் சிசிடிவி கேமராக்களைச் சோதித்தான். மெஹந்தி கலைஞர்கள் என்ற போர்வையில் வந்தவர்கள், மயங்கிய நிலையில் இருந்த மீனாட்சியையும் வைஷ்ணவியையும் ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் வைத்து லாரியில் ஏற்றும் காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது. லாரியின் நம்பர் பிளேட்டைப் பார்த்த அதிரவன், தன் நண்பனான கமிஷனருக்குப் போன் செய்தான்.
“சார்… நான் ஒரு நம்பர் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். என்னடா பியான்சி மீனாட்சி அவ பிரண்ட் வைஷ்ணவி இரண்டு பேரையும் கிட்னா பன்னி அந்த லாரில தான் அனுப்பி இருக்காங்க.
அந்த லாரி இப்போ எந்தத் திசையில போகுதுன்னு எனக்கு உடனே தெரியணும்!” என்று கர்ஜித்துவிட்டுத் தனது எஸ்யுவி (SUV) காரை எடுத்தான். தென்னரசு கையில் ஒரு நீண்ட கத்தியுடன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் அந்த லாரி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. லாரியின் உள்ளே, கண்டைனருக்குள் மீனாட்சியும் வைஷ்ணவியும் மயக்க நிலையில் ஒரு மூலையில் கிடந்தனர். அவர்களுக்குத் தங்களது உயிருக்கு நேரிடப் போகும் ஆபத்தோ, தங்களது வயிற்றில் வளரும் கருவுக்கு ஏற்படப் போகும் பாதிப்போ தெரியவில்லை.
அதே சமயம், இளமாறன் தனது காரில் அந்த லாரியைத் தொடர்ந்தபடி சுருதியிடம் பேசினான். “அதிரவன் இப்போ என்னைத் தேடி வருவான். ஆனா அவன் வர்றதுக்குள்ள இந்த வண்டி பார்டரைத் தாண்டிடும். வழியில என் ஆளுங்க நிப்பாங்க. அதிரவனையும் தென்னரசுவையும் அங்கேயே முடிச்சிடணும்,” என்று வக்கிரத்துடன் சிரித்தான்.
நெடுஞ்சாலையில் அதிரவனின் கார் லாரியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு கார்கள் அதிரவனின் காரை வழிமறித்தன. இளமாறனின் அடியாட்கள் கையில் இரும்புக் கம்பிகளுடன் கீழே இறங்கினர்.
“தென்னரசு… இறங்கு! இன்னைக்கு இவங்க யாரும் உயிரோட இருக்கக் கூடாது!” என்று அதிரவன் கதவைத் திறந்து கீழே குதித்தான்.
அதிரவனும் தென்னரசுவும் வெறிபிடித்த வேங்கைகளாக மாறினர். தன் மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்காகப் போராடும் ஒரு ஆணின் பலம் அங்கே தெரிந்தது. தென்னரசு ஒருவனைத் தூக்கி அப்படியே தரையில் அடித்தான். அதிரவன் தனது பலமான முஷ்டிகளால் இளமாறனின் ஆட்களை ரத்த வெள்ளத்தில் நனைய வைத்தான். ஆணாதிக்கம் சிதைந்து, தன் குடும்பத்தைக் காக்கும் வீரமாக அது மாறியிருந்தது.
அடிதடிக்கு நடுவே, லாரி தூரத்தில் மறைவதைப் பார்த்த அதிரவன், “தென்னரசு! வண்டியில ஏறு!” என்று கத்தினான். காயம்பட்ட நிலையிலும் அவர்கள் காரை விரட்டினர்.
சில மைல்கள் தொலைவில், அந்த லாரியை ஒரு மறைவான இடத்தில் இளமாறன் நிறுத்தச் சொன்னான். பாம்பே பார்ட்டியின் ஆட்கள் அங்கே கண்டைனரை மாற்றத் தயாராக இருந்தனர்.
வைஷ்ணவி மெல்லக் கண் விழிக்க முயன்றனர். வைஷ்ணவிக்கு அடிவயிற்றில் ஒரு மெல்லிய வலி எடுக்கத் தொடங்கியது.
“ஆஆஆ.. என் வயிறு ரொம்ப வலிக்குது மீனு மீனு நம்மள யாரும் கடத்திட்டு போயிட்டாங்க கண்ணை திறந்து பாரு மீனு”.
என்று மயக்கம் தெளிந்த வைஷ்ணவி சுயநிலவு இல்லாமல் இருக்கும் மீனாட்சி எழுப்ப பார்த்து மறுபுறம் வலித்துக் கொண்டிருக்கும் தன் வயிறு பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள்.
அதிரவனின் கார் அந்த இடத்தை நெருங்கியபோது, இளமாறன் அதிர்ச்சியடைந்தான். “இவங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாங்க? சுடுங்கடா அவங்களை!” என்று கத்தினான். துப்பாக்கிச் சத்தங்கள் அந்தப் பகுதியையே அதிரச் செய்தன.
அத்தியாயம் 27
சென்னையின் நள்ளிரவு அமைதி அதிரவனின் பங்களாவிற்குள் ஒரு தகிக்கும் அனலைக் கொண்டு வந்திருந்தது. பிசினஸில் ஏற்பட்ட அந்தப் பாரிய சரிவு, அதிரவனை இன்று நிலைகுலையச் செய்திருந்தது. இளமாறனின் காய்நகர்த்தல்கள் அவனைப் பொருளாதார ரீதியாகக் கட்டிப்போட்டிருந்தன. எப்போதும் சிம்மாசனத்தில் அமர்ந்து கட்டளையிடும் அந்தச் சிங்கம், இன்று ஒரு இருட்டு அறைக்குள் மதுக்கோப்பையுடனும், மௌனத்துடனும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.
மீனாட்சி அறைக்குள் நுழைந்தபோது, அதிரவன் அவளை ஒரு வெறித்த பார்வையுடன் பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன.
“வெளியில இருக்குறவன் என் சாம்ராஜ்யத்தை அழிக்கப் பார்க்கிறான்… உள்ள இருக்குற நீ என் நிம்மதியை அழிக்கப் பார்க்கிற. உங்களுக்கு எல்லாம் நான் தோத்துப்போறது அவ்வளவு சந்தோஷமா?” என்று அதிரவன் ஒருவிதமான விரக்தியுடன் கேட்டான்.
மீனாட்சி அவனை நெருங்கிச் சென்று, மேசையிலிருந்த மதுக்கோப்பையை ஓரம் தள்ளினாள். “உங்க தோல்விக்கு நான் காரணம் இல்லை அதிரவன். உங்க அதீத நம்பிக்கையும், மத்தவங்களை துச்சமா நினைச்ச உங்க குணமும் தான் காரணம். நான் உங்க நிம்மதியை அழிக்கல… நீங்க செதுக்கி வச்சிருந்த அந்த ஆணாதிக்கக் கோட்டை இப்போ சரிய ஆரம்பிச்சிருக்கு. அதைத் தாங்க முடியாமத்தான் நீங்க தடுமாறுறீங்க,” என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு முதிர்ச்சியான தெளிவு இருந்தது.
“மீனாட்சி!” என்று அதிரவன் கத்தினான். ஆனால், அந்தச் சத்தத்தில் பழைய வேகம் இல்லை.
“கத்தாதீங்க அதிரவன்… உங்க சத்தம் என்னை அசைக்காது. உங்களுக்குத் தேவைப்படுறப்போ நான் உங்க கால்ல கிடக்கணும், ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பேசாம இருக்கணும்னு நினைக்குறீங்க பாத்தீங்களா… அங்கதான் நீங்க தோக்குறீங்க,” என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதிரவன் அவளைத் தன் பக்கம் இழுத்தான். அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, “நான் யாருன்னு உனக்குத் தெரியும்ல? இந்த அதிரவன் இவ்வளவு சீக்கிரம் விழுந்துட மாட்டான். உன்னையும் விடமாட்டான்,” என்று அவள் கழுத்தோரம் தன் முகத்தைப் புதைத்தான். அந்தத் தொடுதலில் ஒரு ஆக்ரோஷமான ஆசையும், அவளை இழந்துவிடுவோமோ என்ற பயமும் கலந்திருந்தது.
அதே வேளையில் – இளமாறனின் சொகுசு அறை
அங்கே சூழலே வேறுவிதமாக இருந்தது. மெல்லிய வெளிச்சம், விலையுயர்ந்த மது, மற்றும் காமத்தின் நெடி அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது. இளமாறன் சோபாவில் சாய்ந்திருக்க, சுருதி அவனது மார்பில் சாய்ந்து மோகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் உடல்களும் இன்னும் அந்த நெருக்கத்தின் வெப்பத்திலிருந்து மீளவில்லை.
சுருதி இளமாறனின் இதழ்களை வருடியபடி, “அதிரவனை பிசினஸ்ல காலி பண்ணியாச்சு… அடுத்து என்ன? அந்த மீனாட்சியை என்ன செய்யப் போறீங்க?” என்று கிசுகிசுத்தாள்.
இளமாறன் ஒரு கொடூரமான புன்னகையுடன் அவளது கூந்தலை அழுத்திப் பிடித்தான். “மீனாட்சி மட்டும் இல்லை சுருதி… பிளான் ரொம்பப் பெருசு. நான் பாம்பேல இருக்குற ஒரு பெரிய ஆள் கூடப் பேசி முடிச்சுட்டேன். மீனாட்சி பேரழகிதான், அவ என் கண்ணுக்குள்ள தான் இருக்கா. ஆனா, அவளோட சிநேகிதியா கள்ளிக்காட்டுல ஒருத்தி இருக்காளே அந்த வைஷ்ணவி… அவ அழகுல பேரழகி! ” என்று கண்கள் மின்னச் சொன்னான்.
சுருதி சற்றே பொறாமையுடன் அவனைப் பார்த்தாள்.
இளமாறன் அவளைத் தன்பக்கம் இழுத்து, “பொறாமைப்படாதே… அவங்களை நான் வச்சுக்கப் போறது இல்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வியாபாரம் பண்ணினா, பல கோடி ரூபாய் என் கால் கீழே வந்து விழும். இந்த அதிரவன் தன் சாம்ராஜ்யம் சரிஞ்சு போயிருக்கற வருத்தத்துல இருக்கும்போது, அவன் ஆசை நாயகி மீனாட்சி யையும் அந்த வைஷ்ணவி பொண்ணையும் நான் காணாம போக வைப்பேன். அதிரவனுக்கு பிசினஸும் போச்சு, கௌரவமும் போச்சுன்னு தெருவுல அலைய விடுவேன்,” என்று சொல்லிவிட்டுச் சுருதியின் கழுத்தில் முத்தமிட்டான்.
“அந்தக் கள்ளிக்காட்டுத் தென்னரசு சும்மா இருப்பானா?” என்று சுருதி கேட்டாள்.
“அவன் வெறும் முரடன்… கத்தி எடுக்கத் தான் அவனுக்குத் தெரியும். மூளை கிடையாது. இந்த அதிரவனும் தென்னரசுவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டு அடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, என் வேலை முடிஞ்சுடும். பாம்பே பார்ட்டி ரெடியா இருக்காங்க… ஒரு பெரிய டீல் முடியப் போகுது,” என்று இளமாறன் அந்த மோகத் தருணத்திலும் தனது லாபத்தைப் பற்றிக் கணக்குப் போட்டான்.
சென்னையில் அதிரவன் மீனாட்சியிடம் தன் அதிகாரத்தை மெல்ல இழந்து காதலில் சரணடையத் தொடங்க, மறுபுறம் இளமாறன் அந்த இரண்டு பெண்களின் வாழ்வையும் சிதைக்க ஒரு கொடூரமான வலையை விரித்துக் கொண்டிருந்தான்.
சென்னையின் நள்ளிரவு அமைதி அந்தப் பங்களாவை ஆக்கிரமித்திருந்தது. அதிரவன் தன் அறையில் மதுக்கோப்பையைத் தொடாமல், ஜன்னல் வழி தெரியும் இருளை வெறித்துக் கொண்டிருந்தான். பிசினஸ் ரீதியாக இளமாறன் கொடுத்த நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், மீனாட்சியின் அந்த மௌனமான புறக்கணிப்பு அவனைத் தின்று கொண்டிருந்தது.
மீனாட்சி மெல்ல அறைக்குள் நுழைந்தாள். அவள் முகம் சற்று வெளிறிப் போய், கண்கள் களைப்பால் சொருகிக் கிடந்தன. அதிரவன் அவளை ஒரு அதிகாரப் பார்வையோடு பார்க்க நினைத்தான், ஆனால் அவளது தளர்ந்த நடை அவனுக்குள் ஏதோ ஒரு பயத்தை உண்டாக்கியது.
“மீனாட்சி… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அதிரவன் எழுந்து அவளருகே வந்தான்.
மீனாட்சி பதில் சொல்லாமல் சோபாவில் சாய்ந்தாள். அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அதிரவன் அவளது கைகளைப் பற்றினான். “சொல்லு மீனாட்சி… உடம்புக்கு என்ன செய்யுது?”
மீனாட்சி மெல்லத் தலைநிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. “அதிரவன்… நம்ம மௌனப் போருக்கு நடுவுல… ஒரு சின்ன உயிர் துடிக்க ஆரம்பிச்சிருக்கு. நான்… நான் பிரக்னண்டா இருக்கேன்,” என்று அவள் தழுதழுத்த குரலில் சொன்னபோது, அந்த அறையே ஒரு நிமிடம் சுழல்வது போல அதிரவனுக்குத் தோன்றியது.
அதிரவன் அப்படியே உறைந்து நின்றான். அவனது பிடியில் இருந்த அவளது கைகள் இப்போது அவனுக்கு ஒரு தெய்வத்தின் சிலையாகத் தெரிந்தன. அவன் மெல்ல அவளது மடியில் தலைசாய்த்தான. அவனது முரட்டு இதயம் முதன்முறையாக ஒரு பயங்கரமான நடுக்கத்தைச் சந்தித்தது.
“மீனாட்சி… நிஜமாவா?” என்று அவன் கேட்க, அவள் மென்மையாகத் தலையசைத்தாள்.
அதிரவன் அவளது வயிற்றின் மேல் தன் காதுகளை வைத்தான். அங்கே எந்தச் சத்தமும் கேட்காது என்று தெரிந்தும், அந்த உயிரின் இருப்பை உணர அவன் துடித்தான். அவனது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தின. “என்னை மன்னிச்சுடு மீனாட்சி… உன்னையும் இந்த உயிரையும் சுமக்கத் தெரியாம, ஆணாதிக்கப் பித்து பிடிச்சு அலைஞ்சுட்டேன். இனிமே உனக்கு ஒரு சின்னக் கஷ்டம் கூட வராம நான் பார்த்துப்பேன்,” என்று அவள் கைகளை முத்தமிட்டான். அந்த முரட்டு அதிரவன் இன்று ஒரு குழந்தையின் மென்மையோடு அவள் மடியில் கிடந்தான்.
இதே நேரம் கள்ளிக்காட்டு மலையில்
மலையின் கடும் குளிரில் தென்னரசு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். வைஷ்ணவி விளக்கை அணைக்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு எழுந்தான். “என்னடி வைஷு… இன்னும் தூங்காம என்ன பண்ற?” என்று சற்றே அதட்டலாகக் கேட்டான்.
வைஷ்ணவி மெல்ல அவன் அருகே வந்து அமர்ந்தாள். “மாமா… நான் ஒன்னு சொல்லணும்… கோபப்பட மாட்டீங்களே?”
“சொல்லுடி… என்ன புதுசா பெர்மிஷன்லாம் கேக்குற?”
வைஷ்ணவி அவன் கையை எடுத்துத் தன் வயிற்றின் மேல் வைத்தாள். “மாமா… இங்க நம்மளோட வாரிசு வளர ஆரம்பிச்சிருக்கு. நான் விசேஷமா இருக்கேன்,” என்று அவள் சொல்ல, தென்னரசு அப்படியே சிலையாக நின்றான்.
அடுத்த நொடி, அந்த முரட்டுத் தென்னரசு அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான். “வைஷு! நிஜமாவா சொல்ற? எனக்கு… எனக்கு ஒரு புள்ள பொறக்கப் போகுதா?” என்று அவன் அவளைச் சுற்றிக் கூத்தாடினான். எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும் அவன், அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவள் காலடியில் அமர்ந்து, “உனக்கு என்ன வேணும் வைஷு? உனக்கு என்ன பிடிக்கும்? காலையிலயே டவுனுக்குப் போய் உனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு வர்றேன்,” என்று ஒரு சிறுபிள்ளையைப் போலப் பேசிக் கொண்டிருந்தான்.
கணவன் மனைவி அந்தோனியம் மேலும் தங்கள் குலத்திற்கு வழி வகுக்க வாரிசு வருகிறது என்று பார்த்த தென்னரசுவின் அம்மா ராக்காயி இறைவனிடம் வேண்டிக் கொண்ட தன் மகன் இப்படியே நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று.
மறுநாள் காலை, தென்னரசுவின் மனம் பொங்கியது. தனக்குள் இருக்கும் இந்தச் சந்தோஷத்தை யாரிடம் பகிர்வது என்று நினைத்தபோது அவனுக்கு அதிரவனின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் உடனே போன் செய்தான்.
“அதிரவன்… நான் தென்னரசு பேசுறேன். பிசினஸ் கோபம் எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். நான் அப்பா ஆகப்போறேன்டா! வைஷு விசேஷமா இருக்கா,” என்று அவன் சொன்னபோது, மறுமுனையில் அதிரவன் சிரித்தான்.
“தென்னரசு… எனக்கும் அதேதான். மீனாட்சியும் விசேஷமா இருக்கா. நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அப்பாவாகப் போறோம்!” என்றான் அதிரவன்.
அதே சமயம் அதிரவன் தனது திட்டத்தைச் சொன்னான். “தென்னரசு, குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி நானும் மீனாட்சியும் சட்டபடியா கல்யாணம் பண்ணிக்கணும். நீ அம்மாவையும், மீனாட்சியோட அம்மா அப்பாவையும் அழைச்சிட்டு மெட்ராஸ் வந்துடு. சிம்பிளா நம்ம குடும்பம் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு கல்யாணத்தை முடிப்போம்,” என்றான்.
தென்னரசுவும் உற்சாகமாகச் சம்மதித்தான். அடுத்த சில நாட்களில் மீனாட்சியின் பெற்றோரும், தென்னரசுவின் குடும்பமும் சென்னை பங்களாவிற்கு வந்து சேர்ந்தனர்.
மகள் தாங்கள் கட்டி கொடுத்தால் கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார் பெரிய வீடு சந்தோஷமாக இருக்கிறாள். இந்த காலத்தில் நடக்காதடா என்பது போல் மீனாட்சி அம்மா அப்பா கௌரவத்தை விட்டு தள்ளி தங்கள் மகளை பார்க்க வந்துவிட்டார்கள்.
அதே சமயம் வைஷ்ணவி அம்மா ரத்தினவள்ளியும் அங்கே வந்து சேர்ந்தார். அனைவருக்கும் விருந்து உபதேசம் ராஜமரியாதையோடு நடந்தது…
அதிரவனுக்கு இவ்வளவு ஆஸ்தி அந்தஸ்தா என்று அனைவரும் வாய்ப்பு இழந்து விட்டார்கள்.
பல நாட்கள் கழித்து தன் பெற்றோரை பார்த்த மகிழ்ச்சியில் மீனாட்சி அவர்களை கட்டிக் கொண்டு மன்னிப்பும் கேட்டாள்.
பெற்றவர்கள் தங்கள் மகள் காதல் தானே செய்தால் என்று எந்த ஒரு கோபம் காட்டாமல் அவளுக்கு பிடித்ததெல்லாம் செய்து கொடுத்தார்கள்.
அந்த வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டது. அதிரவன் மீனாட்சியிடம் காட்டும் அதீத காதலும், தென்னரசு வைஷ்ணவியிடம் காட்டும் கவனிப்பும் அந்தப் பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தன.
ஆனால், இந்தச் சந்தோஷங்களை ஒரு திரையின் பின்னால் இருந்து இளமாறன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் சுருதியுடன் தனது அந்தரங்க அறையில் மிக நெருக்கமாக இருந்தபடி,
“சுருதி… அவங்க இப்போ எமோஷனல் உச்சத்துல இருக்காங்க. இதுதான் அவங்களோட பெரிய பலவீனம். மெஹந்தி வைக்க வர்றவங்க மாதிரி நம்ம ஆளுங்களை உள்ள அனுப்பணும். அந்த மயக்க மருந்து ஸ்ப்ரே ரெடியா இருக்குல்ல? அந்த ரெண்டு பொண்ணுங்களையும் தூக்கி பாம்பேக்கு பார்சல் பண்ணிடுவேன்,” என்று கொடூரமான வக்கிரத்துடன் சிரித்தான்.
அத்தியாயம் 26
நிச்சயமாக, 34-வது அத்தியாயத்தில் இந்த இரண்டு பெண்களின் மன உறுதியையும், அந்த முரட்டு ஆண்களின் அதிகாரக் கோட்டை எப்படி ஒரு மௌனத்தால் சரிந்து விழுகிறது என்பதையும் மிக ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
சென்னை பங்களாவிற்குள் நுழைந்தபோது அதிரவனுக்கு ஒரு கணம் உடல் நடுங்கியது. எப்போதுமே விளக்குகளின் ஒளியாலும், அவனது கட்டளைகளாலும் பரபரப்பாக இருக்கும் அந்த வீடு, இன்று ஒரு சுடுகாட்டின் அமைதியைத் தத்தெடுத்திருந்தது. அவன் சமையலறைக்குச் சென்றான். அங்கே அடுப்பு அணைந்து கிடந்தது. எப்போதாவது அவன் வீட்டுக்கு வரும்போது மீனாட்சி அங்கே ஏதோ ஒரு புது டிஷ் செய்துகொண்டு இருப்பாள், அந்த மணம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். இன்று அந்த மணம் இல்லை. வெறும் பாத்திரங்களின் மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது.
அதிரவன் தட்டுக்களைத் தேடினான். எதுவும் கிடைக்கவில்லை. பசியை விட அவனது கௌரவம் அவமானத்தால் குறுகிப் போயிருந்தது. ஹாலில் மீனாட்சி அமைதியாக அமர்ந்து, எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அதிரவன் அவள் அருகில் சென்று நின்றான். “மீனாட்சி, நான் பசியோட வந்திருக்கேன்… ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாயா? நீ சமைக்கலன்னா கூடப் பரவாயில்லை, என்கிட்ட ஒரு பார்வை கூடவா உனக்கு இல்லை?” என்று அவன் குரலில் முதன்முறையாக ஒரு கெஞ்சல் தொனி இழைந்தோடியது.
மீனாட்சி மெல்லத் தலை நிமிர்ந்தாள். அவளது கண்கள் அவனைக் கடந்து எங்கோ பார்த்தன. “உங்க பசியைத் தீர்க்க உங்களுக்குத் தகுதி இருக்கு அதிரவன்… ஆனா என் மனசுல இருக்குற அந்தப் பசியை, அந்தத் தவிப்பை எப்போதாவது கவனிச்சீங்களா? உங்களுக்கு நான் ஒரு வேலைக்காரி, இல்லையென்றால் ஒரு பொம்மை. நான் பேசுறப்போ நீங்க கேட்டதே இல்லை, இப்போ நான் பேசாதப்போ மட்டும் ஏன் பதறுறீங்க?” என்று தண்மையாகக் கேட்டாள்.
அதிரவன் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான். அவனது பிசினஸ் சாம்ராஜ்யம் அவனுக்கு உணவிடவில்லை. அவனது ஈகோ அவனுக்கு நிம்மதி தரவில்லை. அன்று இரவு அவன் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டுப் படுத்தான். பசி அவனது வயிற்றைக் கிள்ளியதை விட, மீனாட்சியின் புறக்கணிப்பு அவனது ஆன்மாவைச் சிதைத்தது.
அதே வேளையில் – கள்ளிக்காட்டு வீடு
தென்னரசுவின் நிலைமை இன்னும் கொடுமையாக இருந்தது. அவன் கோபப்பட்டு எதையாவது உடைத்தால் வைஷ்ணவி வந்து தடுப்பாள் அல்லது அழுதுகொண்டே அதைச் சுத்தம் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அன்று அவன் ஒரு கண்ணாடிக் குவளையைத் தூக்கி எறிந்தபோது, வைஷ்ணவி அதன் பக்கமே திரும்பவில்லை. அவள் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தென்னரசுவின் முரட்டுத்தனம் அவளுக்கு முன்னால் ஒரு கோமாளித்தனமாகத் தெரிந்தது. அவன் அவள் அருகில் வந்து, “வைஷு! என்னைக் கவனிடி… நான் உடைச்சுட்டு இருக்கேன், உனக்குக் கோபமே வரலையா?” என்று கத்தினான்.
வைஷ்ணவி நிமிர்ந்து பார்த்தாள். “கோபம் வர்றதுக்கு அங்க மனுஷங்க இருக்கணும் மாமா… நீங்க வெறும் ஒரு முரட்டுச் சிலையா தான் எனக்குத் தெரியுறீங்க. நீங்க எதை வேணா உடைங்க, எதைக் கூட எரிச்சுடுங்க… ஆனா என்னோட இந்த மௌனத்தை உங்களால உடைக்க முடியாது,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
தென்னரசு தரையில் அமர்ந்து கதறி அழுதான். அவனது வீரம் ஒரு பெண்ணின் அமைதியிடம் தோற்றுப் போனது. ‘தன் பலம் என்று நினைத்த அந்த அதிகாரம் தான், தனக்கு இவ்வளவு பெரிய தனிமையைத் தந்திருக்கிறது’ என்பதை அவன் உணரத் தொடங்கினான்.
இரு ஆண்களும் அந்த இரவில் ஒரு பெரிய உண்மையைச் சந்தித்தனர். அன்பை அதிகாரத்தால் பெற முடியாது; ஒரு பெண்ணின் மனதை மௌனத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்று அவர்கள் உணர ஆரம்பித்த அந்தத் தருணம் தான், அவர்கள் திருந்துவதற்கான முதல் படி.
…….
தென்னரசு ஒரு கடின உழைப்பாளி அவன் உழைப்பை பார்த்து ஒரு கணம் அதிரவன் ஆடிப் போய் விட்டான் .
சாதாரண மலை கிராமத்தில் பிறந்தவன் ஒரு பாக்டரில், இவ்வளவு உழைப்பதா…? என்று .
அதனால், தன்னுடைய கம்பெனி சார்ந்த ஒரு ப்ராடக்ட்டில் மேல் அட்டை கவர் தென்னரசு கம்பெனியில் இருந்து ஆர்டர் செய்யலாம் என்று அவனுக்காக சப்ளை ஆர்டர் செய்து இருந்தான்..
தென்னரசு தனக்கு நல்ல லாபம் வருகிறது எது தன் கம்பெனி மேனேஜரிடம் பேசி முடித்து அதிரவனுடன் டீலிங் போட்டு வைத்தான் . இதனால், தென்னரசு நல்ல பெயர் கிடைத்தது ஆனால்
இதெல்லாம்..
பிரிந்த தங்கள் துணைகள் சேர்ந்த குதுகலத்தில் செய்தது.
அதன் பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் ,இரு ஆண்களும் தங்கள் ஆணாதிக்க குணத்தை காட்ட ஆரம்பிக்க இப்பொழுது அதிர்ஷ்ட தேவதை அவர்களை கைவிட ஆரம்பித்தது
…….
சென்னையின் கார்ப்பரேட் உலகில் அதிரவனின் சாம்ராஜ்யம் இன்று பலத்த அடி வாங்கியிருந்தது. இளமாறன் மறைமுகமாகச் செய்த சூழ்ச்சியால், அதிரவனின் முக்கிய ஒப்பந்தம் என்று கருதப்பட்ட தென்னரசு கம்பெனியோட போட்ட டீலிங் ரத்தானது. அலுவலகத்தில் ஏற்பட்ட அந்த அவமானம் அதிரவனை ஒரு காயம்பட்ட சிங்கமாக மாற்றியிருந்தது. அவன் வழக்கமாகச் செலுத்தும் அதிகாரம் இன்று அவனிடமே பலவீனமாகத் தெரிந்தது.
அதிரவன் பங்களாவிற்குள் நுழைந்தபோது அவனது முகம் சிவந்து, நரம்புகள் புடைத்திருந்தன. வழக்கமாக மீனாட்சி முன்னால் வந்து நின்றால் அவளிடம் தன் அதிகாரத்தைக் காட்டி ஆசுவாசப்படுத்திக்கொள்வான். ஆனால் இன்று, மீனாட்சி ஹாலில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அவனது வருகையை அவள் கவனித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
அதிரவன் தன் கையில் இருந்த கோப்புகளை மேசையில் ஓங்கி எறிந்தான். “மீனாட்சி! நான் இங்க வந்து நிக்கிறேன், உனக்கு ஒரு வார்த்தை கூடப் பேசத் தோணலையா? வெளியில பிசினஸ்ல ஆயிரம் பிரச்சனை… இங்க வந்தா நீ இப்படி ஒரு அந்நியப் பெண் மாதிரி நடந்துக்கிற!” என்று கத்தினான்.
மீனாட்சி மெல்லப் புத்தகத்தை மூடிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் பயமில்லை, ஒருவிதமான பரிதாபம் மட்டுமே இருந்தது. “வெளியில உங்க அதிகாரம் செல்லலங்கிற கோபத்தை என்கிட்ட ஏன் காட்டுறீங்க அதிரவன்? பிசினஸ்ல நீங்க தோற்கலாம், ஆனா மனுஷனா நீங்க என்கிட்ட என்னைக்குத் தோத்தீங்களோ… அன்னைக்கே இந்த வீட்ல உங்க அதிகாரம் முடிஞ்சு போச்சு,” என்று மிகத் தண்மையாகச் சொன்னாள்.
“ஏய்! என்னைத் தரம் தாழ்த்திப் பேசாதே! நான் நினைச்சா…” என்று அவன் கையை ஓங்கினான்.
மீனாட்சி பின்வாங்கவில்லை. “நினைச்சா என்ன பண்ணுவீங்க? அடிப்பீங்களா? இல்ல கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்களா? அதெல்லாம் செஞ்சு நீங்க எதையும் சாதிக்க முடியாது. உங்களுக்கு வெளியில ஒருத்தன் குழி பறிக்கிறான்ல… அவன்கிட்ட காட்டுங்க உங்க வீரத்தை. ஒரு பொண்ணை வீட்டுக்குள்ள வச்சு மிரட்டுறது வீரமில்லை, அது கோழைத்தனம்,” என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அதிரவனின் முகத்தில் அறையப்பட்டது போல இருந்தது.
அதிரவன் அப்படியே சோபாவில் சரிந்தான். அவனது பிசினஸ் சறுக்கலை விட, மீனாட்சியின் இந்தத் தெளிவான பேச்சு அவனை நிலைகுலையச் செய்தது. அவனால் அவளைத் தடுத்தும் நிறுத்த முடியவில்லை, அவளிடம் சண்டையிடவும் முடியவில்லை.
……
இங்கே
தென்னரசுவுக்கும் அதிரவனுடன் அவன் சேர்ந்து செய்யவிருந்த ஒரு பெரிய சப்ளை ஆர்டர், அதிரவனின் பிசினஸ் வீழ்ச்சியால் தடைபட்டிருந்தது. தென்னரசுவுக்கு அது பெரிய பொருளாதார அடி. அவன் தன் கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் வீட்டுக்குள் வந்தான்.
வைஷ்ணவி அங்கே துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். தென்னரசு அவளருகில் வந்து, “வைஷு… அந்த அதிரவன் ஏதோ தப்பு பண்ணிருக்கான், அதனால எனக்கு வரவேண்டிய பணம் நி நின்னு போச்சு. இதெல்லாம் உன்னால தான்… உன்னோட ராசி அப்படி!” என்று தேவையில்லாமல் அவளைக் குறை கூறினான்.
வைஷ்ணவி அமைதியாக எழுந்து அவனைப் பார்த்தாள். “மாமா… நீங்க ஒரு ஆம்பளையா உங்க தப்பை ஒத்துக்க மாட்டீங்களா? பிசினஸ்ல லாப நஷ்டம் வரும். அதுக்கு என்னை ஏன் குறை சொல்றீங்க? நீங்க உண்மையாவே மாறிட்டீங்கன்னு நான் நம்புனேன். ஆனா ஒரு சின்ன பிரச்சனை வந்த உடனே உங்களோட அந்தப் பழைய குணம் வெளிய வந்துடுச்சு பாத்தீங்களா… இதுதான் நீங்க!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகரப் போனாள்.
தென்னரசு அவளது கையைப் பற்றினான். ஆனால் முன்பிருந்த அந்த வேகம் அவனிடம் இல்லை. “வைஷு… நான்… நான் பதற்றத்துல சொல்லிட்டேன்,” என்று தழுதழுத்தான்.
“பதற்றத்துல வர்றதுதான் உண்மையான குணம் மாமா. உங்களுக்கு நான் ஒரு வடிகால், அவ்வளவுதான்,” என்று சொல்லிவிட்டு அவள் கையை விடுவித்துக் கொண்டாள்.
சென்னையில் இளமாறன் தனது வெற்றியைச் சிலாகித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அதிரவன் வீட்டின் உள்விவகாரங்கள் தெரியாது, ஆனால் அதிரவன் அலுவலகத்தில் காட்டிய பதற்றம் அவனுக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்தது. “சுருதி… அதிரவன் இப்போ நிலைகுலைஞ்சு இருக்கான். அடுத்து ஒரு பெரிய அடி கொடுத்தா அவன் பிசினஸ் மொத்தமா காலி. அதுக்கப்புறம் அவன் பொண்டாட்டியைக் காப்பாத்தக் கூட அவன்கிட்ட பலம் இருக்காது,” என்று தனது அடுத்த கட்டத் திட்டத்தைத் தீட்டினான்.
இரண்டு ஹீரோக்களும் இன்று தங்கள் ஈகோவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையே சிக்கித் தவித்தனர். அவர்களுக்குப் பெண்களின் ஆதரவு தேவைப்பட்டது, ஆனால் அதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தங்களது ஆணாதிக்கக் கூண்டுக்குள் சிக்கித் தவித்தனர்.
அத்தியாயம் 2
செண்பகநல்லூர் கிராமத்தின் அதிகாலைப் பொழுது, அந்த ஊர் மாரியம்மன் கோவில் மணியோசையோடு விழித்துக் கொண்டது. பனி மூடிய அந்த வைகை நதிக்கரையோரம், ஊரே இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருக்க, ‘செண்பகக் கோட்டை’ மட்டும் தன் பிரம்மாண்டமான கதவுகளைத் திறந்து கம்பீரமாக நின்றது. அந்த அரண்மனை வீட்டின் முற்றத்தில் நின்றிருந்த நூறு வருடப் பழமையான வேப்பமரம், அதிகாலைக் காற்றில் ஒருவித கௌரவத்தோடு அசைந்து கொண்டிருந்தது.
திடீரென்று அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு, ஒரு கறுப்பு நிற எஸ்.யூ.வி கார் புழுதியைக் கிளப்பியபடி கோட்டையின் முகப்பில் வந்து நின்றது. காரின் கதவு திறக்கப்பட, முதலில் தரையில் பதிந்தது அந்த ராஜபாட்டைக்கே உரித்தான கால். மடிப்பு கலையாத கரை வேட்டி, முழங்கை வரை மடிக்கப்பட்ட கறுப்பு நிறப் பட்டுச் சட்டை, மணிக்கட்டில் மின்னும் தங்கக் கடிகாரம். நிமிர்ந்து நின்ற அந்த உருவம் – அதுதான் ராஜன்.
33 வயதின் முதிர்ச்சி அவன் முகத்தில் ஒரு கறாரான அழகைத் தந்திருந்தது. அடர்த்தியான மீசை, எதையும் ஊடுருவிப் பார்க்கும் தீட்சண்யமான கண்கள், அகலமான மார்பு என அவன் நடந்து வரும் தோரணையில் ஒரு காட்டுச் சிங்கத்தின் நிதானம் இருந்தது. அவன் மாளிகையின் படிகளில் ஏறும் போது, அங்கே வரிசையாக நின்றிருந்த வேலையாட்கள் தலைகுனிந்து ஒதுங்கி நின்றனர். அந்த ஊரின் பஞ்சாயத்து முதல் பள்ளிக்கூடம் வரை ராஜனின் ஒற்றை விரல் அசைவில் தான் இயங்கிக் கொண்டிருந்தது.
ராஜன் திண்ணைக்கு வந்து, தன் கையில் இருந்த அந்தப் பஞ்சாயத்துக் கோப்பைப் படாரென்று மேஜை மேல் வைத்தான். “சக்தி! தேவராஜ்! எங்கடா இருக்கீங்க?” – அந்த மாளிகையின் சுவர்கள் அதிரும்படி ஒலித்தது அவன் குரல்.
உள்ளிருந்து 30 வயது இளவட்டங்களாக சக்திவேலும் தேவராஜும் பதற்றத்தோடு ஓடி வந்தனர். ராஜனின் அதிகாரத்திற்கு முன்னால் அவர்கள் இருவரும் கட்டுப்பட்டு நின்றாலும், அவன் மீது அவர்களுக்கு ஒரு தனி விசுவாசமும் மரியாதையும் உண்டு.
“என்ன சித்தப்பா? விடியறதுக்கு முன்னாடியே கிளம்பிட்டீங்க?” – சக்திவேல் தயக்கத்தோடு கேட்க, ராஜன் தன் இருக்கையில் அமர்ந்தான். “வடக்குத் தோப்புப் பஞ்சாயத்து இன்னைக்கு முடியணும் சக்தி. செண்பகக் கோட்டை சும்மா இருக்குன்னு எவனாவது நினைச்சா, அவனுக்குக் கோட்டைச் சட்டத்தை இன்னைக்குப் புரிய வைக்கணும்” என்று ராஜன் சொல்லும் போது, அவன் கண்கள் சிவந்திருந்தன. அந்த வீரத்திற்கும் கோபத்திற்கும் பின்னால், தன் அக்கா கௌரியின் இழந்த வாழ்க்கையை எண்ணி எரியும் ஒரு வன்மக் கனல் எப்போதும் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
…………
அதே நேரம், மதுரையில் இருந்து பல மைல்கள் தள்ளி இருக்கும் சென்னையில்… ஒரு அழகான அபார்ட்மெண்ட்டில் சிரிப்புச் சத்தம் எதிரொலித்தது. அது சங்கர் மற்றும் அமுதாவின் வீடு.
சமையலறையில் அமுதா ஆவி பறக்கக் காபி போட்டுக் கொண்டிருக்க, பின்னால் இருந்து வந்த சங்கர், அவளது தோளில் கை போட்டு, “என்ன அமுதா… இன்னைக்குக் காபி வாசனையே உன்னோட பாசத்தைச் சொல்லுதே?” என்று நக்கலாகக் கேட்டார். பல வருடங்கள் கடந்தும், அமுதாவுக்காக ஊரையும் உறவையும் விட்டு வந்த அந்தச் சங்கர், இன்றும் அவளைத் தன் உயிராகவே காதலித்து வந்தார்.
சரியாக அந்த நேரம், தன் படுக்கை அறையில் இருந்து தூக்கக் கலக்கத்தோடு வெளியே வந்தாள் ரோஜா. 22 வயதின் தேவதை போன்ற அழகு, துள்ளலான பேச்சு. தன் அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் காட்டும் அந்தப் பாசத்தைப் பார்த்து அவளுக்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டது.
“அப்பா… காலையிலேயே உங்க ரொமான்ஸைத் தாங்க முடியல! நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்குறதைப் பார்த்தா எனக்கே பொறாமையா இருக்குப்பா” என்று ரோஜா கிண்டலாகக் கேட்டபடி அமுதாவைக் கட்டிக் கொண்டாள்.
சங்கர் ரோஜாவின் தலையைக் கோதிவிட்டு, “ரோஜா… உலகத்துல ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறது தான் பெரிய விஷயம். உங்க அம்மாவுக்காகத் தான் நான் எல்லாத்தையும் இழந்தேன். ஆனா அவ கிடைச்சதால, எனக்கு உலகமே கிடைச்ச மாதிரி இருக்கு. உனக்கும் உன்னை உயிராவே நேசிக்கிற ஒருத்தன் கண்டிப்பா கிடைப்பான்” என்றார் உருக்கமாக.
ரோஜா ஜன்னல் வழியாகப் பெய்யும் மழையைப் பார்த்தபடி மெல்லப் புன்னகைத்தாள். “நிஜமாவாப்பா? எனக்கும் உங்களைப் போல, என்னை மட்டும் உலகமா நினைக்கிற ஒரு ஜீவன் கிடைக்குமா?” என்று அவள் ஆசைப்பட்டாள்.
சென்னையில் ஒரு தேவதை பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்க, மதுரையில் அந்தச் சிங்கமோ தன் குடும்பப் பகையைத் தீர்க்கக் காத்துக் கொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இரு துருவங்களாக இவர்கள் இருந்தாலும், இவர்களை இணைக்க விதி தன் ஆட்டத்தை மெல்லத் தொடங்கியது.
சென்னையின் பரபரப்பான காலை வேளையில், சங்கரின் வீட்டில் ஒரு நேர்த்தியான ஒழுங்கு இருந்தது. ஒரு பக்கம் சங்கர் தனது சொந்தக் கட்டுமான நிறுவனத்தின் (Construction Company) அவசரக் கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் அமுதா தனது ஆசிரியர் பணிக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.
“அமுதா, இன்னைக்கு ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ் ஏதும் இருக்கா? ஈவினிங் நான் கம்பெனியில இருந்து வர்றப்போ உன்னை பிக்கப் பண்ணிக்கவா?” என்று சங்கர் கேட்க, அமுதா தனது சேலையைச் சரிசெய்தபடி புன்னகைத்தார்.
“இன்னைக்குத் தலைமை ஆசிரியர் மீட்டிங் இருக்குங்க. நீங்க லேட்டாவே வாங்க. அப்புறம், ரோஜா இன்னைக்கு அவளோட டீச்சர் ட்ரைனிங் சர்டிபிகேட் வாங்கப் போறா… அவளையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க” என்றார் அமுதா. பல ஆண்டுகளாக ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பாடம் எடுத்தாலும், தனது மகளைப் பொறுத்தவரை அவர் இன்னும் ஒரு மென்மையான தாயாகவே இருந்தார்.
சங்கர் தனது கம்பெனியை ஒரு சாம்ராஜ்யமாக வளர்த்திருந்தாலும், அந்த வெற்றியின் பின்னணியில் அமுதாவின் உறுதுணையும், அவர் அரசு வேலையில் இருந்தபோது கொடுத்த மனவலிமையும் தான் காரணம் என்பதை எப்போதும் மறந்ததில்லை.
அப்போது ஹாலுக்கு வந்த ரோஜா, “அப்பா… நீங்க கம்பெனி பிசினஸை விடலாம், அம்மா ஸ்கூல் வேலையை விடலாம்… ஆனா இந்த ஒருத்தரை ஒருத்தர் கவனிக்கிற வேலையை மட்டும் விடவே மாட்டீங்க போல!” என்று சிரித்தாள்.
“அது எப்படிம்மா விடுவோம்? உங்க அம்மா இந்த கவர்மெண்ட் வேலையில இருந்துகிட்டு எனக்குக் கொடுத்த தைரியம் தான், இன்னைக்கு நான் இவ்வளவு பெரிய கம்பெனி நடத்தக் காரணம்” என்றார் சங்கர் பெருமையாக.
ரோஜா அவர்கள் இருவரையும் வியப்போடு பார்த்தாள். தன் அம்மா ஒரு கௌரவமான அரசுப் பணியில் இருந்துகொண்டு குடும்பத்தை வழிநடத்துவதும், அப்பா ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிப்பதும் அவளுக்குப் பெருமையாக இருந்தது. ஆனால், இவ்வளவு வசதிகளுக்கு இடையிலும் தன் அப்பாவின் கண்களில் ஒரு ஏக்கம் அவ்வப்போது மின்னி மறைவதை அவள் கவனித்திருக்கிறாள். அது தன் சொந்த ஊரான செண்பகநல்லூரைப் பற்றிய ஏக்கம் என்று அவளுக்குத் தெரியும்.
அதே நேரம், மதுரையில்…
செண்பகக் கோட்டையின் முற்றத்தில் நின்றிருந்த ராஜன், தனது உதவியாளர் கொண்டு வந்த பருத்திப் பேக்டரியின் வரவு-செலவு கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அவனது கறாரான நிர்வாகத்தால் அந்த ஊரின் பொருளாதாரம் உயர்ந்து நின்றாலும், அவனது முகம் எப்போதும் ஒரு இறுக்கத்துடனேயே இருக்கும்.
சக்திவேல் மெல்ல ராஜனின் அருகில் வந்து, “சித்தப்பா, நம்ம டெக்ஸ்டைல் பிசினஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக சென்னை கம்பெனிகளோட டை-அப் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுக்கு நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.
ராஜன் நிமிர்ந்து அவனைப் பார்த்தான். “சென்னை கம்பெனிகளா? அங்க இருக்கிறவங்க எல்லாரும் லாபத்தை மட்டும் தான் பார்ப்பாங்க சக்தி. நமக்கு நம்பிக்கை தான் முக்கியம். அதுவும் முக்கியமா… அங்கிருந்து வர்ற எதையும் நான் அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டேன்” என்றான் கறாராக.
ராஜனின் மனதில் சென்னை என்பது வெறும் ஊர் மட்டுமல்ல; தன் அக்காவுக்குத் துரோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்ற சங்கர் வாழும் இடம். அங்கிருந்து வர்ற எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அவன் பகையாகவே பார்த்தான்.
சக்திவேலும் தேவராஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சித்தப்பாவின் பிடிவாதம் அவர்களுக்குத் தெரியும். ஜமீன் கோட்டையின் வாரிசான ராஜன், மதுரையின் மண்ணையும் கௌரவத்தையும் காப்பதாக நினைத்துக்கொண்டு, தனக்குள் ஒரு பெரிய தடுப்புச் சுவரைக் கட்டி வைத்திருந்தான். அந்தச் சுவரை உடைக்க ஒரு மென்மையான ரோஜா மலர் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது அந்தச் சிங்கத்திற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
……………