Home ANTIHERO27) இளமை 😍

27) இளமை 😍

by sreejanovels
15 views

அத்தியாயம் 27

சென்னையின் நள்ளிரவு அமைதி அதிரவனின் பங்களாவிற்குள் ஒரு தகிக்கும் அனலைக் கொண்டு வந்திருந்தது. பிசினஸில் ஏற்பட்ட அந்தப் பாரிய சரிவு, அதிரவனை இன்று நிலைகுலையச் செய்திருந்தது. இளமாறனின் காய்நகர்த்தல்கள் அவனைப் பொருளாதார ரீதியாகக் கட்டிப்போட்டிருந்தன. எப்போதும் சிம்மாசனத்தில் அமர்ந்து கட்டளையிடும் அந்தச் சிங்கம், இன்று ஒரு இருட்டு அறைக்குள் மதுக்கோப்பையுடனும், மௌனத்துடனும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.

மீனாட்சி அறைக்குள் நுழைந்தபோது, அதிரவன் அவளை ஒரு வெறித்த பார்வையுடன் பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன.

“வெளியில இருக்குறவன் என் சாம்ராஜ்யத்தை அழிக்கப் பார்க்கிறான்… உள்ள இருக்குற நீ என் நிம்மதியை அழிக்கப் பார்க்கிற. உங்களுக்கு எல்லாம் நான் தோத்துப்போறது அவ்வளவு சந்தோஷமா?” என்று அதிரவன் ஒருவிதமான விரக்தியுடன் கேட்டான்.

மீனாட்சி அவனை நெருங்கிச் சென்று, மேசையிலிருந்த மதுக்கோப்பையை ஓரம் தள்ளினாள். “உங்க தோல்விக்கு நான் காரணம் இல்லை அதிரவன். உங்க அதீத நம்பிக்கையும், மத்தவங்களை துச்சமா நினைச்ச உங்க குணமும் தான் காரணம். நான் உங்க நிம்மதியை அழிக்கல… நீங்க செதுக்கி வச்சிருந்த அந்த ஆணாதிக்கக் கோட்டை இப்போ சரிய ஆரம்பிச்சிருக்கு. அதைத் தாங்க முடியாமத்தான் நீங்க தடுமாறுறீங்க,” என்று அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு முதிர்ச்சியான தெளிவு இருந்தது.

“மீனாட்சி!” என்று அதிரவன் கத்தினான். ஆனால், அந்தச் சத்தத்தில் பழைய வேகம் இல்லை.

“கத்தாதீங்க அதிரவன்… உங்க சத்தம் என்னை அசைக்காது. உங்களுக்குத் தேவைப்படுறப்போ நான் உங்க கால்ல கிடக்கணும், ஆனா உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பேசாம இருக்கணும்னு நினைக்குறீங்க பாத்தீங்களா… அங்கதான் நீங்க தோக்குறீங்க,” என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதிரவன் அவளைத் தன் பக்கம் இழுத்தான். அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, “நான் யாருன்னு உனக்குத் தெரியும்ல? இந்த அதிரவன் இவ்வளவு சீக்கிரம் விழுந்துட மாட்டான். உன்னையும் விடமாட்டான்,” என்று அவள் கழுத்தோரம் தன் முகத்தைப் புதைத்தான். அந்தத் தொடுதலில் ஒரு ஆக்ரோஷமான ஆசையும், அவளை இழந்துவிடுவோமோ என்ற பயமும் கலந்திருந்தது.

அதே வேளையில் – இளமாறனின் சொகுசு அறை

அங்கே சூழலே வேறுவிதமாக இருந்தது. மெல்லிய வெளிச்சம், விலையுயர்ந்த மது, மற்றும் காமத்தின் நெடி அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது. இளமாறன் சோபாவில் சாய்ந்திருக்க, சுருதி அவனது மார்பில் சாய்ந்து மோகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தாள். அவர்கள் இருவரின் உடல்களும் இன்னும் அந்த நெருக்கத்தின் வெப்பத்திலிருந்து மீளவில்லை.

சுருதி இளமாறனின் இதழ்களை வருடியபடி, “அதிரவனை பிசினஸ்ல காலி பண்ணியாச்சு… அடுத்து என்ன? அந்த மீனாட்சியை என்ன செய்யப் போறீங்க?” என்று கிசுகிசுத்தாள்.

இளமாறன் ஒரு கொடூரமான புன்னகையுடன் அவளது கூந்தலை அழுத்திப் பிடித்தான். “மீனாட்சி மட்டும் இல்லை சுருதி… பிளான் ரொம்பப் பெருசு. நான் பாம்பேல இருக்குற ஒரு பெரிய ஆள் கூடப் பேசி முடிச்சுட்டேன். மீனாட்சி பேரழகிதான், அவ என் கண்ணுக்குள்ள தான் இருக்கா. ஆனா, அவளோட சிநேகிதியா கள்ளிக்காட்டுல ஒருத்தி இருக்காளே அந்த வைஷ்ணவி… அவ அழகுல பேரழகி! ” என்று கண்கள் மின்னச் சொன்னான்.

சுருதி சற்றே பொறாமையுடன் அவனைப் பார்த்தாள்.

இளமாறன் அவளைத் தன்பக்கம் இழுத்து, “பொறாமைப்படாதே… அவங்களை நான் வச்சுக்கப் போறது இல்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வியாபாரம் பண்ணினா, பல கோடி ரூபாய் என் கால் கீழே வந்து விழும். இந்த அதிரவன் தன் சாம்ராஜ்யம் சரிஞ்சு போயிருக்கற வருத்தத்துல இருக்கும்போது, அவன் ஆசை நாயகி மீனாட்சி யையும் அந்த வைஷ்ணவி பொண்ணையும் நான் காணாம போக வைப்பேன். அதிரவனுக்கு பிசினஸும் போச்சு, கௌரவமும் போச்சுன்னு தெருவுல அலைய விடுவேன்,” என்று சொல்லிவிட்டுச் சுருதியின் கழுத்தில் முத்தமிட்டான்.

“அந்தக் கள்ளிக்காட்டுத் தென்னரசு சும்மா இருப்பானா?” என்று சுருதி கேட்டாள்.

“அவன் வெறும் முரடன்… கத்தி எடுக்கத் தான் அவனுக்குத் தெரியும். மூளை கிடையாது. இந்த அதிரவனும் தென்னரசுவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டு அடிச்சுக்கிட்டு இருக்கும்போதே, என் வேலை முடிஞ்சுடும். பாம்பே பார்ட்டி ரெடியா இருக்காங்க… ஒரு பெரிய டீல் முடியப் போகுது,” என்று இளமாறன் அந்த மோகத் தருணத்திலும் தனது லாபத்தைப் பற்றிக் கணக்குப் போட்டான்.

சென்னையில் அதிரவன் மீனாட்சியிடம் தன் அதிகாரத்தை மெல்ல இழந்து காதலில் சரணடையத் தொடங்க, மறுபுறம் இளமாறன் அந்த இரண்டு பெண்களின் வாழ்வையும் சிதைக்க ஒரு கொடூரமான வலையை விரித்துக் கொண்டிருந்தான்.


சென்னையின் நள்ளிரவு அமைதி அந்தப் பங்களாவை ஆக்கிரமித்திருந்தது. அதிரவன் தன் அறையில் மதுக்கோப்பையைத் தொடாமல், ஜன்னல் வழி தெரியும் இருளை வெறித்துக் கொண்டிருந்தான். பிசினஸ் ரீதியாக இளமாறன் கொடுத்த நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும், மீனாட்சியின் அந்த மௌனமான புறக்கணிப்பு அவனைத் தின்று கொண்டிருந்தது.

மீனாட்சி மெல்ல அறைக்குள் நுழைந்தாள். அவள் முகம் சற்று வெளிறிப் போய், கண்கள் களைப்பால் சொருகிக் கிடந்தன. அதிரவன் அவளை ஒரு அதிகாரப் பார்வையோடு பார்க்க நினைத்தான், ஆனால் அவளது தளர்ந்த நடை அவனுக்குள் ஏதோ ஒரு பயத்தை உண்டாக்கியது.

“மீனாட்சி… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அதிரவன் எழுந்து அவளருகே வந்தான்.

மீனாட்சி பதில் சொல்லாமல் சோபாவில் சாய்ந்தாள். அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அதிரவன் அவளது கைகளைப் பற்றினான். “சொல்லு மீனாட்சி… உடம்புக்கு என்ன செய்யுது?”

மீனாட்சி மெல்லத் தலைநிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. “அதிரவன்… நம்ம மௌனப் போருக்கு நடுவுல… ஒரு சின்ன உயிர் துடிக்க ஆரம்பிச்சிருக்கு. நான்… நான் பிரக்னண்டா இருக்கேன்,” என்று அவள் தழுதழுத்த குரலில் சொன்னபோது, அந்த அறையே ஒரு நிமிடம் சுழல்வது போல அதிரவனுக்குத் தோன்றியது.

அதிரவன் அப்படியே உறைந்து நின்றான். அவனது பிடியில் இருந்த அவளது கைகள் இப்போது அவனுக்கு ஒரு தெய்வத்தின் சிலையாகத் தெரிந்தன. அவன் மெல்ல அவளது மடியில் தலைசாய்த்தான. அவனது முரட்டு இதயம் முதன்முறையாக ஒரு பயங்கரமான நடுக்கத்தைச் சந்தித்தது.

“மீனாட்சி… நிஜமாவா?” என்று அவன் கேட்க, அவள் மென்மையாகத் தலையசைத்தாள்.

அதிரவன் அவளது வயிற்றின் மேல் தன் காதுகளை வைத்தான். அங்கே எந்தச் சத்தமும் கேட்காது என்று தெரிந்தும், அந்த உயிரின் இருப்பை உணர அவன் துடித்தான். அவனது கண்கள் தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தின. “என்னை மன்னிச்சுடு மீனாட்சி… உன்னையும் இந்த உயிரையும் சுமக்கத் தெரியாம, ஆணாதிக்கப் பித்து பிடிச்சு அலைஞ்சுட்டேன். இனிமே உனக்கு ஒரு சின்னக் கஷ்டம் கூட வராம நான் பார்த்துப்பேன்,” என்று அவள் கைகளை முத்தமிட்டான். அந்த முரட்டு அதிரவன் இன்று ஒரு குழந்தையின் மென்மையோடு அவள் மடியில் கிடந்தான்.

இதே நேரம் கள்ளிக்காட்டு மலையில்

மலையின் கடும் குளிரில் தென்னரசு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். வைஷ்ணவி விளக்கை அணைக்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு எழுந்தான். “என்னடி வைஷு… இன்னும் தூங்காம என்ன பண்ற?” என்று சற்றே அதட்டலாகக் கேட்டான்.

வைஷ்ணவி மெல்ல அவன் அருகே வந்து அமர்ந்தாள். “மாமா… நான் ஒன்னு சொல்லணும்… கோபப்பட மாட்டீங்களே?”

“சொல்லுடி… என்ன புதுசா பெர்மிஷன்லாம் கேக்குற?”

வைஷ்ணவி அவன் கையை எடுத்துத் தன் வயிற்றின் மேல் வைத்தாள். “மாமா… இங்க நம்மளோட வாரிசு வளர ஆரம்பிச்சிருக்கு. நான் விசேஷமா இருக்கேன்,” என்று அவள் சொல்ல, தென்னரசு அப்படியே சிலையாக நின்றான்.

அடுத்த நொடி, அந்த முரட்டுத் தென்னரசு அவளை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான். “வைஷு! நிஜமாவா சொல்ற? எனக்கு… எனக்கு ஒரு புள்ள பொறக்கப் போகுதா?” என்று அவன் அவளைச் சுற்றிக் கூத்தாடினான். எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும் அவன், அன்று இரவு முழுவதும் தூங்காமல் அவள் காலடியில் அமர்ந்து, “உனக்கு என்ன வேணும் வைஷு? உனக்கு என்ன பிடிக்கும்? காலையிலயே டவுனுக்குப் போய் உனக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு வர்றேன்,” என்று ஒரு சிறுபிள்ளையைப் போலப் பேசிக் கொண்டிருந்தான்.

கணவன் மனைவி அந்தோனியம் மேலும் தங்கள் குலத்திற்கு வழி வகுக்க வாரிசு வருகிறது என்று பார்த்த தென்னரசுவின் அம்மா ராக்காயி இறைவனிடம் வேண்டிக் கொண்ட தன் மகன் இப்படியே நல்லவிதமாக இருக்க வேண்டும் என்று.

மறுநாள் காலை, தென்னரசுவின் மனம் பொங்கியது. தனக்குள் இருக்கும் இந்தச் சந்தோஷத்தை யாரிடம் பகிர்வது என்று நினைத்தபோது அவனுக்கு அதிரவனின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் உடனே போன் செய்தான்.

“அதிரவன்… நான் தென்னரசு பேசுறேன். பிசினஸ் கோபம் எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம். நான் அப்பா ஆகப்போறேன்டா! வைஷு விசேஷமா இருக்கா,” என்று அவன் சொன்னபோது, மறுமுனையில் அதிரவன் சிரித்தான்.

“தென்னரசு… எனக்கும் அதேதான். மீனாட்சியும் விசேஷமா இருக்கா. நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அப்பாவாகப் போறோம்!” என்றான் அதிரவன்.

அதே சமயம் அதிரவன் தனது திட்டத்தைச் சொன்னான். “தென்னரசு, குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி நானும் மீனாட்சியும் சட்டபடியா கல்யாணம் பண்ணிக்கணும். நீ அம்மாவையும், மீனாட்சியோட அம்மா அப்பாவையும் அழைச்சிட்டு மெட்ராஸ் வந்துடு. சிம்பிளா நம்ம குடும்பம் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு கல்யாணத்தை முடிப்போம்,” என்றான்.

தென்னரசுவும் உற்சாகமாகச் சம்மதித்தான். அடுத்த சில நாட்களில் மீனாட்சியின் பெற்றோரும், தென்னரசுவின் குடும்பமும் சென்னை பங்களாவிற்கு வந்து சேர்ந்தனர்.

மகள் தாங்கள் கட்டி கொடுத்தால் கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார் பெரிய வீடு சந்தோஷமாக இருக்கிறாள். இந்த காலத்தில் நடக்காதடா என்பது போல் மீனாட்சி அம்மா அப்பா கௌரவத்தை விட்டு தள்ளி தங்கள் மகளை பார்க்க வந்துவிட்டார்கள்.

அதே சமயம் வைஷ்ணவி அம்மா ரத்தினவள்ளியும் அங்கே வந்து சேர்ந்தார். அனைவருக்கும் விருந்து உபதேசம் ராஜமரியாதையோடு நடந்தது…

அதிரவனுக்கு இவ்வளவு ஆஸ்தி அந்தஸ்தா என்று அனைவரும் வாய்ப்பு இழந்து விட்டார்கள்.

பல நாட்கள் கழித்து தன் பெற்றோரை பார்த்த மகிழ்ச்சியில் மீனாட்சி அவர்களை கட்டிக் கொண்டு மன்னிப்பும் கேட்டாள்.

பெற்றவர்கள் தங்கள் மகள் காதல் தானே செய்தால் என்று எந்த ஒரு கோபம் காட்டாமல் அவளுக்கு பிடித்ததெல்லாம் செய்து கொடுத்தார்கள்.

அந்த வீடே ஒரு திருவிழா கோலம் பூண்டது. அதிரவன் மீனாட்சியிடம் காட்டும் அதீத காதலும், தென்னரசு வைஷ்ணவியிடம் காட்டும் கவனிப்பும் அந்தப் பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தன.

ஆனால், இந்தச் சந்தோஷங்களை ஒரு திரையின் பின்னால் இருந்து இளமாறன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் சுருதியுடன் தனது அந்தரங்க அறையில் மிக நெருக்கமாக இருந்தபடி,

“சுருதி… அவங்க இப்போ எமோஷனல் உச்சத்துல இருக்காங்க. இதுதான் அவங்களோட பெரிய பலவீனம். மெஹந்தி வைக்க வர்றவங்க மாதிரி நம்ம ஆளுங்களை உள்ள அனுப்பணும். அந்த மயக்க மருந்து ஸ்ப்ரே ரெடியா இருக்குல்ல? அந்த ரெண்டு பொண்ணுங்களையும் தூக்கி பாம்பேக்கு பார்சல் பண்ணிடுவேன்,” என்று கொடூரமான வக்கிரத்துடன் சிரித்தான்.


You may also like

Leave a Comment

About Me

Featured