அத்தியாயம் 16
நீங்க பிளாஷ்பேக் படிக்கிறதுக்கு முன்னாடி ‘ஆனந்த மோகனம் வேணுகானம்’ கதையைப் படிச்சிட்டு வந்தீங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும். அது படிக்காமல் நான் இந்தக் கதைதான் டைரக்டா படிக்கிறேன் அப்படின்னு சொல்ற உங்களுக்கு ஒரு சின்ன முன் கதைச் சுருக்கம்.
நம்ம விஜய்யோட முழு பெயர் விமல் விஜய். அவங்க அம்மா ராதா ஹோட்டல் வெச்சு நடத்திட்டு இருந்தாங்க. அவங்க அம்மா, அவங்க அப்பாவால ஏமாற்றப்பட்டு கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தையோட சிங்கிள் மதரா இருக்காங்க. அப்புறம் அவங்க அப்பா யாருன்னு தெரிஞ்சது. அதுக்கு அப்புறம் குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டிருக்கும்போது விமலுக்கு ஒரு லவ்வர் இருந்தாங்க. அவங்க பேரு வினுஷா, ரொம்ப சென்சிட்டிவ் பர்சன். அவங்களுக்கு அம்மா அப்பா அப்படின்னு யாரும் கிடையாது.
அதே சமயம் ஸ்ரீனிவாசன் அப்படின்னு விஜய் குடும்பத்துக்கு ஆகாத எதிரி ஒருத்தர் இருந்தாரு. அவரோட மகள் தான் கீதாஞ்சலி. ஆந்திராவில் பிறந்ததால் அவளைச் செல்லமா அம்முலு அப்படின்னு கூப்பிடுவாங்க.
ஒரு பெரிய பஞ்சாயத்து நடந்து ஸ்ரீனிவாசனுக்கு மேல ஒரு மிகப்பெரிய விரோதி, வினுஷா, அம்முலு, விஜய்யோட அக்கா தங்கைகள் அதாவது ஆனந்த மோகனம் கதை நாயகிகள் எல்லாரும் கடத்தி வைக்கும் பொழுது, அம்முலு என்கிற அஞ்சலியைப் காப்பாத்தப் போய் நம்ம வினுஷா முதலில் தன்னோட குழந்தையை இழந்து விடுறாங்க. கொஞ்ச நாள் கழிச்சு விஜய்யைச் சூட் பண்ண வந்த துப்பாக்கிக்குக் குறுக்க நின்னு புல்லட் அவ மேல பாஞ்சி, ஏற்கனவே வீக்கா இருக்குற வினுஷா ரொம்ப மோசமான நிலைமைக்கு போய் இறந்து போறாங்க. அதுக்குப் பிறகு விஜய் எட்டு வருஷம் குடும்பத்தோட காண்டாக்ட் வச்சுக்கல. தன்னோட குழந்தை, மனைவி ரெண்டு பேரும் இறந்து போன துக்கத்தில் இருந்தவன் பல வருஷம் கழிச்சு வர்றான். ஆனால் வினுஷா இறந்து போகும்போது ஹார்ட் பேஷண்டா இருந்த அம்முலுக்கு மிகப்பெரிய பிராப்ளம் ஏற்பட்டு, இறந்து போன வினுஷாவோட இதயத்தை எடுத்து நம்ம அஞ்சலிக்கு தான் வைக்கிறாங்க. அந்த விஷயம் நடந்த பிறகு விஜய் வெளிநாட்டுக்கு போறான். அதன் பிறகு தன்னுடைய தங்கையோட பிறந்தநாளுக்குத் தான் வர்றான். அப்போ அஞ்சலியைப் பார்க்கிறான். இப்போ கதை ஆரம்பிக்கலாம்.
குடும்பத்தார்கள் விஜய்யின் வருகையை மிக விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் குழந்தைகள் எல்லாரும் பர்த்டே பார்ட்டிக்கு ஒரு முக்கிய கெஸ்ட் வரவேண்டும் என்று பிடிவாதமாக இருக்க, பெரியவர்களுக்குத் தெரியும் என்பதால் சிரித்துக் கொண்டு காத்திருந்தனர். விஜய்க்குத் தன்னைவிட யார் முக்கியமானவர்களாக இருக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, சிகப்பு நிற அனார்கலி, துப்பட்டா காற்றில் பறக்க, பறந்த கூந்தலை ஒதுக்கிக்கொண்டு கையில் ஒரு பரிசுப் பொருளை எடுத்துக் கொண்டு தேவலோக மங்கையாக 21 வயது பருவ குமாரியாக வந்து நின்றாள் அம்முலு என்கிற கீதாஞ்சலி.
அஞ்சலி அக்கா என்று அனைவரும் ஓடிச் சென்று அவளைப் பிடித்துக் கொண்டனர்.
விஜய் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டான். தன்னை அசர வைத்த அழகி வினுஷாவுக்குப் பிறகு, இத்தனை வருடங்கள் கழித்துத் தன்னைச் சலனத்தில் இழுத்த அழகி இவள் தான் என்று. வெளிநாட்டில் இருக்கும் போது எத்தனையோ பெண்கள் தன்னை வேறு வகையில் அழைத்துப் பார்த்தாலும் மனம் தளராமல் இருந்தவன், இவள் நடந்து வந்த அழகைப் பார்த்து மயங்கி விட்ட தன் மனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அதே சமயம் அஞ்சலி அவனை ஓரக்கண்ணால் தழுவிக்கொண்டு பார்ட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றாள். அனைவரும் அவளை ஆரவாரத்துடன் வரவேற்க, தனது தங்கை இசையிடம் இவள் யார் என்று கேட்க,
“இவளைத் தெரியலையா? அதான் அந்த ஸ்ரீனிவாசன் இருக்கான் இல்ல, அவரோட பொண்ணு தான். பாவம் அந்த அம்மா, ‘என் பொண்ணு எங்க கூட இருக்க வேண்டாம், என் புருஷன் என்ன பண்ணுவான்னு தெரியாது’ அப்படின்னு சொல்லிட்டு பொண்ண மட்டும் நம்ம கண்காணிப்புல விட்டுட்டு அவங்க அவங்க ஊருக்குப் போய்ட்டாங்க. அந்த ஆள் இப்ப என்ன பண்றான்னு தெரியல. இவளே அம்மா அப்பா கூட காண்டாக்ட் இல்லாம தான் இருக்கா. முழுக்க முழுக்க சித்தப்பா தான் எல்லாமே பார்த்திருக்கிறார். இப்போ எம்பிஏ ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா. இங்க எப்பவுமே வந்துகிட்டு தான் இருப்பா. நீ ரொம்ப வருஷம் கழிச்சு வர இல்லையா அதனால உனக்கு புதுசா இருக்கு. அஞ்சலி நமக்கு பழக்கப்பட்ட செல்லம். ஆனா நம்ம வீட்ல இருக்க மாட்டேன் அப்படின்னு பிடிவாதமா இருந்தா. ஆனா நாங்க 18 வயசு வரைக்கும் நம்ம வீட்ல வச்சு தான் பாத்துக்கிட்டோம். அதன் பிறகு ‘நான் தனியாவே இருக்கேன்’ அப்படின்னு ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சுக்கிட்டு இருக்கா. லீவுக்கு மட்டும் வருவா. பசங்களுக்கு வீக் எண்டு இவ கூட தான்” என்று அனைத்து விவரங்களும் சொல்லி முடித்து இறுதியாக ஞாபகம் வந்து,
“வினு அண்ணியோட இதயம் இந்த பொண்ணுக்குத் தான் பொருத்தப்பட்டு இருக்கு. உன்னோட வினுஷா இந்த உலகத்தை விட்டுப் போகல. அவங்களுடைய இதயம் முழுக்க அழகிய தருணங்களோடவும், அவங்க நல்ல மனசும் இந்த பொண்ணுக்குள்ள துடிச்சிட்டு இருக்கு. அவங்க கூட இருக்கிற மாதிரி ஒரு பீல் எங்களுக்கு” என்று எக்ஸ்ட்ரா பிட் ஒன்று சேர்த்து விட்டுப் போக,
விஜய்க்கு அவளைப் பற்றிச் சொல்லும் போதே தெரிந்து போனது இவள் யார் என்று. ஏற்கனவே தன்னை அசர வைத்தவள், போதாக்குறைக்குத் தன்னுடைய மனைவியின் இதயத்தை வைத்துக்கொண்டு இருப்பவள், சும்மா இருப்பானா? பிறந்தநாள் விழா முடியும் வரை அவளைத் தான் ஒரு மார்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பார்ட்டி முடிந்த பிறகு இவள் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது தடுக்கி விழப் போக, அவளை அப்படியே தாங்கிப் பிடிக்க, இருவர் கண்ணும் ஒரு நேர்கோட்டில் சந்திக்க, குடும்பத்தார்கள் அனைவரும் ‘என்னடா இது’ என்பது போல் பார்க்க, அஞ்சலிக்கு முதலில் வெட்கம் வந்து அவனை விட்டு ஓரமாக நிற்க, ‘பார்த்துப் பத்திரமாக போ’ என்று சொல்லி அவன் சென்று விட்டான்.
மறுநாள் சனிக்கிழமை, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் லீவ் என்பதால், அஞ்சலி தனக்கான அறைக்குச் சென்று ஓய்வெடுக்கச் சென்றாள். அந்த அறையில் தான் வினுஷா அப்பொழுது இருந்தாள், இப்போது இவள் இருக்கிறாள். அந்த அறைக்கு பக்கத்தில் தான் விஜய்யின் அறை இருக்கிறது.
இரவு உணவு முடித்துவிட்டு உறக்கத்தைத் தழுவும் பொழுது விஜய்க்குச் சுத்தமாக உறக்கம் வரவில்லை. ஏனோ வினுஷாவுக்குப் பிறகு இந்தக் கீதாஞ்சலியின் உருவம் அவனை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருந்தது. வெறுப்பாக்கிக் கொண்டவன் அறை பக்கம் இருக்கும் பால்கனி வழியாக நின்று சற்று நேரம் காற்றுவாக நடந்து கொண்டிருக்கும்போது, அருகில் இருக்கும் பால்கனியில் இருந்து சத்தம் வர, என்னவென்று திரும்பிப் பார்க்க ஒரு புத்தகத்தை வைத்து கீதாஞ்சலி படித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த நேரத்துல எதுக்கு படிச்சிக்கிட்டு இருக்க? பரவாயில்ல, இந்த டைம்ல கூட இந்த பொண்ணு படிக்குது அப்படின்னு நல்ல பேர் எடுக்கவா?” என்று அவன் நக்கலாக கேட்டான். அவள் கோபத்தில் ஏதாவது பேசுவாள், அப்படி வம்பு இழுக்கலாம் என்று நினைக்க, ஆனால் அதற்கு எதிர்மறையாக அவனைப் பார்த்து எழுந்து நின்று புத்தகத்தை ஓரமாக வைத்தவள் தன் துப்பட்டா நுனியைப் பிடித்துக் கொண்டு,
“அதெல்லாம் இல்ல, மண்டே டெஸ்ட் இருக்குன்னு மேடம் சொன்னாங்க. அதுல நல்ல மார்க் எடுத்தா தான் இன்டெர்னல் மார்க் இன்க்ரீஸ் பண்ணுவேன் அப்படின்னு சொன்னாங்க. இது கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட். இதுல நான் கொஞ்சம் வீக் ஸ்டுடென்ட். காசுக்கட்டி படிக்க வைக்கிறாங்க, ஒழுங்கா படிக்கணும் இல்ல? அதான் வேற ஒன்னும் இல்ல. நான் ஒரு ஆவெரேஜ் ஸ்டூடண்ட், அதனால கொஞ்சம் எபெக்ட் போட்டு படிக்கலாம்னு இருக்கேன். நாளைக்கு சாட்டர்டே பசங்க என்னைச் சுத்தமா விட மாட்டாங்க. சண்டே நானே ஒழுங்கா படிக்க மாட்டேன். அதான் கொஞ்சமாச்சும் இன்னைக்கு படிக்கலாம்னு” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, அவன் சரி என்று தலை அசைத்து என்ன சப்ஜெக்ட் என்று கேட்க,
“மேனேஜ்ரியல் எக்கனாமிக்ஸ்”
“இந்த சப்ஜெக்ட் வீக் அப்படின்னு சொல்றியே? நீ எல்லாம் என்ன… இது தியரி. நீயா கரண்ட் சிட்டுவேஷன் வச்சு நீ கெஸ் பண்ணி ஆன்சர் எழுதணும். டெஃபனிஷன் நல்லா படிச்சுக்கோ, டிஃப்ரன்ஸ் பிட்வீன் கண்டிப்பா கேட்பாங்க. அந்த மாதிரி கொஸ்டின் மார்க் பண்ணிட்டு மத்தது எல்லாம் நீயே ஈஸியா தெரிஞ்சுக்கலாம் இல்ல? இப்பதான் யூடியூப் அது இதுன்னு நிறைய வசதி வந்திருச்சு. ஈஸியா நீ எங்கேயும் கிளாஸ் பாக்காம டெமோ போன்லயே பார்த்து படிச்சுக்கலாம் இல்ல?”
“அப்படி இல்ல, எனக்கு இது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அது மட்டும் தான், வேற ஒன்னும் கிடையாது” என்று அவள் சொன்னதைச் சொல்ல, படிப்பு என்று வந்துவிட்டால் தாராள தொண்டியாகி விடுவான். அதனால் பழைய கதை எல்லாம் மறந்து சிறுவன் போல் அந்தப் பால்கனிக்குத் தாவி குதிக்க, அஞ்சலி பயத்தில் பின்னால் இரண்டடி வைத்தாள்.
“பயப்படாத, இந்த சப்ஜெக்ட்ல நான் கில்லி. உனக்குச் சொல்லித் தரேன் வா” என்று அவளுக்கு ஒவ்வொரு முக்கியமான கொஸ்டின் அனைத்தையும் சொல்லி விளக்க உரை கொடுக்க, மீண்டும் அவளிடம் கேள்வி கேட்க, அவளும் தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்ல, அவள் பேசும் தமிழ் புரிந்தது, பாதி தெலுங்கு கலந்த வேறு இருக்கிறது.
“நீ பக்கா ஆந்திராவா??”
“ஆமாம், நான் அங்கதான் இருந்தேன். வசதி கம்மி என்கிறதால அம்மா தெலுங்கு மீடியம் படிக்க வச்சாங்க. ஆனா அங்கத் தமிழ்க்காரங்க கூட நிறைய பேர் இருப்பாங்க. அவங்க கிட்ட நல்ல தமிழ் கத்துக்கிட்டேன். ஃபர்ஸ்ட் பேசத் தான் தெரியும். அப்புறம் ஒரு பிரண்ட் எனக்கு எழுதப் படிக்கக் கத்துக் கொடுத்தா. ரொம்ப ஈஸியா இருந்துச்சு. தமிழ் வாய்ப்பாடு எல்லாம் இருக்கு இல்லையா அதெல்லாம் வைத்து நானே வீட்ல படிச்சு தெரிஞ்சுகிட்டேன். ஆனா தமிழ் எந்த நேரத்துல கத்துக்கிட்டேன் அப்படின்னு தெரியல. இப்போ தமிழ்நாட்டுல செட்டில் ஆக வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு. அதனால கொஞ்சம் கொஞ்சமா தமிழ் நல்லா கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா ஒன்னு, இங்கிலீஷ் தான் கொஞ்சம் தகராறு” என்று தலை சொரிய,
“மத்தவங்க மாதிரி லாங்குவேஜ் வரும் அப்படின்னு சொல்ல மாட்டேன். நல்லா படிச்சா வெட்கத்தை விட்டு நீயே கண்ணாடி பார்த்து கொஞ்சம் கொஞ்சமாப் பேச ஆரம்பிச்சு வச்சுக்கோயேன். உன் முகத்தைப் பார்த்து உனக்கே பயம் வரும், அப்புறம் ஆட்டோமேட்டிக்கா இங்கிலீஷ் வரும். ஆனா நீ பிளஸ் ஒன் பிளஸ் டூ எல்லாம் இங்கிலீஷ் மீடியம் தான் படிச்ச?”
“ஆமாம், ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. எப்படியும் முட்டி மோதி ஒரு வழியா படிச்சிட்டேன். இப்ப நீங்க சொல்லிக் கொடுத்ததுல இந்த சப்ஜெக்ட் எனக்கு ஈஸியா இருக்கு. நான் நோட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிறேன். தேங்க்யூ” என்று புத்தகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்து நன்றி சொல்ல, அவன் மெதுவாகச் சிரித்துக்கொண்டே மீண்டும் அந்தப் பால்கனிக்குத் தாவித் தன் அறை நோக்கிச் செல்லும் பொழுது ஏதோ ஒரு உந்துதலில் திரும்பிப் பார்க்க, அவனைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தாள். அவன் இப்படித் திரும்பியவுடன் அப்படியே புத்தகத்தை எடுத்துத் தன் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள் அஞ்சலி.
“சில்லி கேர்ள்” என்று சொல்லித் தன்னறை நோக்கிச் சென்றான் விஜய்.