Home ANTIHEROராட்சசியின் ரட்சகன்-15

ராட்சசியின் ரட்சகன்-15

by romaakeerthi
90 views

” நீ இப்ப என்னதான் சொல்ல வர….
      நீ சந்தேகப்பட்ட ஆள் சிவா கிடையாது .
     அதே நேரத்துல நம்ம தேடுற ஆள் யாருன்னு தெரியாதுன்னு சொல்ற  .
     ஆனா அந்த ரெண்டு பசங்க கடத்தப்பட்டது சிவா கட்டுர பில்டிங் தான் அப்படி னு சொல்ற ….
      கரெக்டா அந்த பசங்களோட மொபைல் நம்பர் கட்டாகற நேரத்துல சிவாவோட மொபைல் சிக்னாலும் அங்க தான் காட்டுது…

ஒரு வேளை அவங்க இடத்தில இருக்கலாம் இல்லையா …?   எப்படி அவன் இல்லவே இல்லை னு நீ சொல்ற ….

நிச்சயமா அவன் இல்ல நானும் அவனோட எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் இந்த கேஸ்ல  இன்வால்வாகாமல் தான் இருந்தேன் .  கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவன பத்தின ஃபுல் டீடைல்ஸ் நான் கலெக்ட் பண்ணிட்டேன் .
     அப்ப தான் எனக்கு இந்த பில்டிங் ல ரெண்டு பசங்க மிஸ் ஆன கேசும் எனக்கு தெரிஞ்சுச்சு  .
     அந்த கேசும் கரெக்டா என் கைக்கு வந்துச்சு .
     ஆனா அப்ப கூட இவனோட கால் ஹிஸ்டரியை நான் செக் பண்ணாம விட்டுட்டேன் .
      ஆனா அந்த பசங்க கடத்தப்பட்ட நேரத்துல தான் இவனோட மொபைல் சிக்னல்  இங்க காட்டுது  .

    வெறும் மொபைல் சிக்னல வச்சு மட்டும் அவன்தான் கடத்திருப்பாங்கன்னு சொல்ல  முடியாது …
      அதே நேரத்துல கடத்தலுக்கு துணை போயிருப்பா னு சொல்ல முடியாது  .
      ஃபர்ஸ்ட் அவன் ஏன் அந்த ரெண்டு பசங்கள கடத்தனும் …?
     அவனுக்கு கடத்தி எதுவும் ஆகப்போறது கிடையாது  .
    நானும் அப்படித்தான் நினைச்சேன் ஒருவேளை அந்த கடத்தல் கும்பலோட தலைவன் இவனாக இருக்குமோ அப்படின்னு ….
      ஆனா அவனோட வேலை பில்டிங் கட்றது மட்டும் தான்  .
    அது மட்டும் இல்லாம அது எம்எல்ஏ ஓட வீடு .
      இப்போ அந்த கடத்தல் நடந்ததுக்கப்புறமா அந்த காப்பு மட்டும் தான் அவன் கைக்கு கிடைச்சிருக்கு  .

     அத வச்சு தான் அவன் இந்த வீட்டையும் சீக்கிரமா முடிக்கணும் அப்படி னு சொல்லிட்டு வேக வேகமா வேலையை செஞ்சுக்கிட்டு இருந்தான் .
     ஆனா அந்த நேரத்துல போலீஸ் வந்து  அரெஸ்ட் பண்ணிடுச்சு  .

     எப்படியும் லாயர் வைத்து அவனை வெளியே எடுத்துட்டாலும் அன்னைக்கு அவனோட சேர்ந்து நான் அந்த இடத்துல போய் பார்த்தேன்  .
    அப்ப தான் எனக்கு தெரிஞ்சுச்சு .

       அங்க இருந்த ஒரு சித்தாள் சொன்னாங்க .
      கரெக்டா அந்த ரெண்டு பசங்களும் கடத்தப்பட்டு ஒரு வாரம் இருக்கும்  .

     ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஞாயிற்றுக்கிழமை ல அங்க வேலை நடந்துச்சு  னு  ….
   அந்த வேலைக்கு சிவா வந்து இருந்தான் .

      அவன் வந்துட்டு திரும்ப ஏதோ ஒரு மீட்டிங் அப்படி னு சொல்லிட்டு போற அவசரத்துல ஃபோன இங்கேயே வச்சுட்டு போனதாகவும் மறுநாள் தான் அந்த கொத்தனார் அவன் கிட்ட ஃபோன கொடுத்ததாகவும் என்கிட்ட சொன்னாரு  . அப்ப தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் .

     நிச்சயமா நம்ம தேடுற ஆளா அவன் கிடையாது னு …

     அது மட்டும் இல்லாம நம்ம நினைக்கிற அளவுக்கு அவ்வளவு ஒர்த்தான கேங்ஸ்டர் எல்லாம் அவன் கிடையாது  . அவனே ஒரு முட்டா பீசு …. ” என்று அவள் பேசி முடிக்கவும் சரியாக அவளது வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்தது .

யார இவன் முட்டா  பீசு னு சொல்றா….
     ஒருவேளை நம்மள தான் சொல்லியிருப்பாளோ…? என்ற ரீதியில் பாதியை மட்டும் காதில் வாங்கி விட்டு வந்தவனால் ஒரு முடிவுக்கு வரவில்லை .

      அவளை ஒரு முறை பார்த்தவாறு காலை உணவு சாப்பிட்டு கை கழுவு வந்தவனுக்கு அப்படியே சிங்கிள் கையையும் கழுவி விட்டு அங்கிருந்த சென்று விட்டான் .

அன்று போலீசால் கைது செய்யப்பட்டு அதன் பிறகு சைட்டுக்கு  அவளை அழைத்து சென்றவுடன் அங்குள்ள சித்தாள் மற்றும் கொத்தனாரியிடம் பேசி அவனது மொபைல் சிக்னல் எவ்வாறு அங்கு இருந்தது என்பதை பற்றியும் தெரிந்து கொண்டவளுக்கு ஒரு முடிவும் கிடைத்துவிட்டது .

       அதே நேரத்தில் முழுதாக இந்த கேஸிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் அந்த கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் .
      அவர்களது நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் அவளது யோசனை முழுக்க இருந்தது .

      அதன் பிறகு இரண்டு நாட்கள் அவன் வேலைக்கு செல்ல மதியம் அவள் தானே உணவை எடுத்து சென்றவாறு இருந்தாள் .

       அப்படியே அந்த இரு நாட்களும் கழிய அவன் சென்னை புறப்பட வேண்டிய நாளும் வந்தது  .

     இன்று தான் கிளம்ப வேண்டும் அதே நேரத்தில் போலீஸ் வேறு ஒரு பக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைப்போம் ஊரை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று எச்சரித்ததும் அவனது நினைவிற்கு வந்தது  .

     அதையும் அவன் பொறுப்பெடுத்தாமல் தவறு என் மீது இல்லை என்ற ரீதியில் நான் ஏன் அவர்களுக்கு பயந்து எனது தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களில்  ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றவாறு சென்னைக்கு இன்று ஏற்கனவே மகேஷிடம் பேசிய விடயமாக கிளம்பி கொண்டிருந்தான் . 

      மகேஷ் இன்று தான் சாராவின் தந்தை இடம் தனது திருமண விடயத்தை பற்றி பேசுவதாக இருப்பதால் தனது நண்பனிடம்  ஏதேதோ பொய் கூறி நீ முன்னே செல் நான் எனது வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்ற ரீதியில் கூறி இருந்தான். தனக்கு தெரியாமலா போகப் போகிறது என்ற ரீதியில் அவனும் விட்டுவிட்டான்.

      ஏற்கனவே ஜெயாவிடம் இந்த விடயத்தை பற்றி கூற அவர் தான் தற்பொழுது செல்ல வேண்டாம் என்று கூறியும் ,  அவன் கேட்காமல் நிச்சயம் அங்கு தான் கட்டப் போகும் பில்டிங் விடயத்தை பற்றி பேசுவதற்காகவே செல்வதாக கூறியிருந்தான் .

     இப்பொழுது மகேஷ் வேறு  வராததன் காரணமாக ஜெயா ஷர்வானியை அழைத்து செல்லுமாறு கூறியிருந்தார் . அவனுக்கு அவனை அழைத்து செல்வது துளி கூட விருப்பமில்லை அதையும் தாண்டி தனது தாய் கூறுகிறாரே என்ற ரீதியில் அறைக்குள் சென்று தனது உடைகளை எடுத்துக் கொண்டிருந்தான் .
    அங்கு வந்த ஷர்வானி அவனிடம் பேசினாள் .

” நீங்க இந்த கேஸ்ல சம்மந்தப்படலன்றது எனக்கு நல்லாவே தெரியும்  .
      அதே நேரத்துல உங்க மேல போலீசுக்கு சந்தேகம் இருக்கு தான் . 
   வெறும் மொபைல் சிக்னல் வச்சுக்கிட்டு அவங்க பேசுறது எனக்கே முட்டாள் தனமா தோனலாம் .
     இருந்தாலும் அவங்க  டுயூட்டியை அவங்க பாக்குறாங்க .
     இந்த நேரத்துல நீங்க வெளியூர் போறது எனக்கு சரி னு தோனல  .
    அங்க வந்து ஏதாவது பிரச்சனை அப்படின்னா அது உங்க கெரியாருக்கே ஆபத்து……!

என்ன பெரிய ஆபத்தாக போகுது…?
     எந்த ஆபத்தாக இருந்தாலும் நான் தனியாவே சமாளிச்சுக்குவேன் .
     நீ என்கூட வரதா இருந்தா வா …

    அப்படி இல்லன்னா பேசாம இங்கேயே இரு ,
     அங்கேயும்  வந்து எனக்கு இதே மாதிரி அட்வைஸ் பண்ணாத !

       நீ வந்து என்  கிட்ட ஏதாவது அட்வைஸ் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல .  ஏதோ அம்மா சொன்னாங்க என்ற காரணத்துக்காக தான் உன்னையும் கூட்டிட்டு போறேன்…

     உன்னை கூட்டிட்டு போகலைன்னா நமக்குள்ள என்ன டீலிங் போகுது அப்படின்னு அம்மாக்கு தெரிஞ்சா அம்மா தான் வருத்தப்படுவாங்க  .
     கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே நமக்குள்ள இருக்கிறது அவர்களுக்கு காட்டிக்க வேண்டாம்  என்று நான் நினைக்கிறேன் …. ” என்று கூறியவன் தனது உடைகளையும் தனக்கு தேவையான உடைமைகளையும் தனது பேக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு அவளும் அவனோடு கிளம்பி போவது தான் சரி என்று அழைக்கப்பட்டது இனிமேல் அங்கு ஏதாவது பிரச்சனை என்றால் நிச்சயமாக அதை தீர்க்க வேண்டும் என்று ரீதியில் அவளும் அவனோடு தனது உடைகளை எடுத்து வைத்தவாறு மாடியில் இருந்து கீழே இறங்கினர் இருவரும் …..

ஜெயாவிற்கும் தனது மகனைப் பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் . 
      அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தனியாக போவது சரி இருக்காது என்ற காரணத்தினாலே இந்த பயணமாவது அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை உண்டாக்கட்டும் என்ற ரீதியிலேயே அவளையும் அழைத்துச் செல்லுமாறு கூறி வைத்திருந்தார் .
       அதற்கும் அவன் முடியாது என்று மறுக்க மாட்டான் என்பது அவருக்கும் தெரிந்தது.
       தனது பேச்சிருக்கு இவ்வளவு மரியாதை தருபவன் தனது எண்ணத்திற்கு ஈடு கொடுக்காமல் இவ்வாறு செய்து கொண்டிருப்பது தான் அவருக்கு வருத்தத்தை கொடுத்தது  .
     எனினும் அவர்கள் நிச்சயமாக ஒன்றாக சேர்ந்து வாழும் காலமும் கூடிய சீக்கிரம் வரும் .
       அதற்கு அடிப்படையாகவே இந்த தனிமையான பயணம் அமையப் போகிறது என்றவாறு மாடியில் இருந்து இறங்கி வரும் தனது மகனையும் மருமகளையும் நிறைவாக பார்த்துக் கொண்டிருந்தார் .

     இருவரும் கீழே வந்த உடன் சிவா தனது தாயிடம் பத்திரமாக இருக்குமாறும் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுமாறும் கூறினான் .

” அம்மா நாங்க அங்க வேலை முடிஞ்ச உடனே சீக்கிரமா வந்திருவோம் .
     நீங்க ஒழுங்கா டேப்லெட் போட்டுக்கோங்க .
     உங்களுக்கு தனியா இருக்க ஓகே இல்லைன்னா மகேஷ் அம்மாவ வேணா கூட துணைக்கு கூப்பிட்டுக்கோங்க சரியா …. “என்று கூறியவாறு வர்வாணி அவரை கட்டியணைத்து விடை பெற்றாள் . தனது அம்மாவிடம் இவள் இவ்வாறு உரிமையாக பேசுவதும் கட்டியணைப்பதும்  சிவாவிற்கு தான் கடுப்பாகி போனது  .

     அவரிடம் பேசி விட்டு காரில் சென்று தனது பேக்கை வைக்க சென்றவன் மறுபடி வீட்டிற்குள் வரும் போது அவர்கள் இருவரும் அணைத்து பிரிந்ததை பார்த்தபோது அவனுக்கு தான் நீ மட்டுமா தனது தாயை  கட்டியணைப்பாய் …!

      நானும் தான் அணைத்து விடுவேன் என்ற ரீதியில் அவள் விலகிய அடுத்த நிமிடமே அவனும் தனது தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவாறு விடை பெற்றான் .

       இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஷர்வானி தான் கடைக்கண் பார்வையில் அவனை பார்த்தவாறு சிரித்துக்கொண்டாள் .

       அவர்களது கார் வீட்டை விட்டு தாண்டும் போதுதான் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு அவர் தன்னை பார்த்து சிரிக்கிறாள் என்பது அவனால் உணர முடிந்தது .

       ஜெயாவும் அவர்கள் சென்றவுடன் கேட்டையும் சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று கதவையும் அடைத்துக் கொண்டார் .     

     இவளுக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா என்று ரீதியில் அவளை கண்டும் காணாதவாறு ரோட்டில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தான் .

      அவன் சொந்தமாக கார் வைத்திருப்பதால் காரிலேயே சென்றுவிடலாம் என்பது அவனது முடிவாக இருந்தது .

      அதுபோக மகேஷும் அவனும் சென்றிருந்தாலும் கூட அவர்கள் இவ்வாறு காரில் செல்வது தான் வழக்கம் ,
     பஸ்  ட்ரெயின் என்றால் நிச்சயமாக அலைச்சல் ,  அது போக அசதி வேறு வந்துவிடும்  .

      அதன் காரணமாக அங்கு நடக்கப் போகும் மீட்டிங்கில் ஏதாவது பிரச்சினை வந்து விடக்கூடாது என்பது அவனது எண்ணமாக இருந்ததால் அவனது காரிலேயே கிளம்பி விட்டார்கள் .

     பஸ் ஸ்டாண்ட் தாண்டி கார் சென்று கொண்டிருக்க அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது அழைத்தது என்னவோ மகேஷ் தான்.

     ஆனால் ஏன் இவ்வளவு சீக்கிரமாக அழைக்கனும்…?
      ஒருவேளை அவனது வேலை முடிந்து விட்டதா என்று நினைத்தவாறு பேசிய அவன் மறுமுனையில் கேட்ட தகவலில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருந்தான் .

       காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவன் பேசி முடித்தவுடன் ஏதோ சிந்தனையில் இருப்பதை உணர்ந்த அவள் என்ன என்று விசாரித்தாள் .

“என்னாச்சு சிவா எதுக்காக யோசிச்சிட்டு இருக்கீங்க …?
    ஏதாச்சும் பிரச்சனையா….” என்று சாதாரணமாக அவன் தோள் தொட்டு  பேசியது தான் அவனை நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது .

“ஹான்  பிரச்சனை தான்!
     மகேஷுக்கு இப்ப அவசரமா கார் தேவைப்படுதாம் .
    அவனோட கார் திடீர் னு ஏதோ பிராப்ளம் ஆகிட்டு போல ….
    இன்னைக்கு அவன் எதுவும் முக்கியமான வேலை பார்க்க போறேன் அப்படி னு சொன்னாம் .
    என்ன வேலை அப்படி னு என் கிட்ட சொல்லல .
    ஆனா பர்ஸ்னலா ஏதோ பண்றான் னு மட்டும் எனக்கு தெரியுது….
நானும் என் கிட்ட விஷயம் வரப்ப தெரிஞ்சுக்கலாம் னு விட்டுட்டேன்….

சரி அண்ணா கிட்ட கார் வேணும்னா நீங்க கொடுத்து விட்டுருங்க . நம்ம பஸ்ல போய்க்கலாம் … ” என்று அவள் பேசி முடிக்க அவன் தான் ஆச்சரியமாக பார்த்தான் .
       மகேஷுக்கும் இவர்கள் இருவரை பற்றிய அனைத்து விடயங்களும் தெரியும்  ,

      இன்னும் தெளிவாக கூற போனால் அவளை திருமணம் செய்வதற்கு முன்பாக இருந்து அவனது எண்ணங்கள் என்பது என்ன என்பது அவனுக்கு தெரிந்தும் ஆனால் ஷர்வானியிடம் அவன் நினைத்திருந்தால் பேசி இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் .
       ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை .
      ஏன் திருமணம் முடிந்து கூட அவனை பற்றி கூறவில்லை .

     இப்பொழுது இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் விவாகரத்து ஆகப் போகிறது என்று தெரிந்தும் அதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை .
      ஏன் அவனோடு சேர்ந்து வாழ் என்று கூட கூறவில்லை  .

     அப்படி இருக்கும் பட்சத்தில் இவள் அவனை அண்ணா என்று அழைப்பதும் அவனுக்காகவே உணவெல்லாம் சமைத்து வந்து கொடுப்பதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது .

      இவளிடத்தில் நிச்சயமாக வேறு ஒரு பெண் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனது நண்பனை உண்டு இல்லை என்ற செய்திருப்பாள் .

    ஆனால் அவளும் அதற்கு மாறாக அவனிடம் அண்ணன் என்று பாச பொழிந்து கொண்டிருக்கிறாள்….!
      ஏதேதோ சிந்தனைகளில் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை மீண்டும் நிகழ்வு உலகத்திற்கு அழைத்து வந்தது அவளது குரல் தான் ……!

  • தொடரும்🖤🖤🖤

You may also like

Leave a Comment

About Me

Featured