அத்தியாயம் 28
பங்களா முழுவதும் மல்லிகைச் சரங்களின் வாசமும், சந்தனத்தின் மணமும் நிறைந்திருந்தது. அதிரவன் – மீனாட்சி திருமணத்திற்காக வீடு ஒரு மணப்பெண்ணைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மீனாட்சியின் பெற்றோர் வந்த பிறகு, பங்களாவில் ஒரு புதிய நிம்மதி குடியேறியது. அதிரவன் இப்போது பழைய பிசினஸ் மேக்னட் அல்ல; அவன் மீனாட்சியின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கும் ஒரு காதலனாக மாறியிருந்தான். மீனாட்சிக்கு அடிக்கடி ஏற்படும் சோர்வையும், அந்த விசித்திரமான தலைசுற்றலையும் பார்த்து அவன் பதறிப்போனான். ஒரு மாலை நேரம், அவள் சோபாவில் தளர்ந்து அமர்ந்திருக்க, அவளது பாதங்களை மெல்லத் தன் மடியில் தூக்கி வைத்துப் பிடித்துவிட்டான்.
“அதிரவன்… என்ன பண்றீங்க? அம்மா பாக்க போறாங்க,” என்று மீனாட்சி பதறினாள்.
“பாக்கட்டுமே… என் பொண்டாட்டிக்கும், என் வாரிசுக்கும் செய்றதுல எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை மீனாட்சி. இத்தனை நாள் உன்னை ஒரு அதிகாரம் பண்ற பொருளா பார்த்த என் கண்ணுக்கெல்லாம் இது ஒரு பெரிய தண்டனை தான்,” என்று அவன் உருகினான். அவனது கைகள் அவள் பாதங்களை மென்மையாக வருட, மீனாட்சியின் கண்கள் கசிந்தன. ஆணாதிக்கம் மண்டியிட்ட இடம் இதுதான்.
மறுபுறம், தென்னரசுவின் நிலைமை இன்னும் ஆச்சரியமாக இருந்தது. வைஷ்ணவிக்கு ஒரு சின்னக் குமட்டல் வந்தாலும் அவன் “வைஷு!” என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான். அவளுக்குப் பிடித்தமான உணவுகளைச் சென்னையில் தேடித் தேடி அலைந்து வாங்கி வந்தான். “வைஷு, உனக்கு எதுக்குடி வேலை? நீ அங்கேயே உட்காரு,” என்று அவளை ஒரு மகாராணி போல நடத்தினான்.
இதையெல்லாம் பார்த்து பெரியவர்களுக்கு தங்களுக்கென்று வாரிசு வரும் பொழுது தான், மனைவி மீது அக்கறை .
என்று அனைவரும் கிண்டல் செய்ய ஆண்கள் இருவருக்கும் ஒரே வெட்கமாகி போனது.
அதன் பிறகு மீனாட்சி அதிரவன் இருவரும் சந்திக்கக் கூடாது திருமணமாகும் வரை என்று கட்டளை போட ,
அவன் சும்மா இருப்பானா?? இரவு நேரத்தில் ரகசியமாக அவள் அறைக்குள் புகுந்து அவளோடு சில்மிஷம் செய்வதுடன் அவனுக்கு பெரும் வேலையாக இருந்தது.
“இன்னும் ரெண்டு நாளில் நம்ம கல்யாணம். இப்பவே வயித்துல உங்க குழந்தை ரெண்டு மாசம் உயிர். எது புதுசா பண்ற மாதிரி என்கிட்ட கொஞ்சிட்டு இருக்கீங்க??”.
என்று மீனாட்சி அவனைப் பார்த்து சினுங்க..
“அதெல்லாம் இல்ல எனக்கு எப்பவுமே நீ புது பொண்டாட்டி தான்”. என்று இன்னும் அவளை சூறையாடிக்கொண்டான்.
அவனுக்குள் இருக்கும் காமமும் குறையவில்லை காதலும் குறையவில்லை இரண்டும் சமநிலையில் அவளிடம் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்தான்.
,,,,,,
கல்யாணத்திற்கு முந்தைய நாள் மாலை… மெஹந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்தன. உறவினர்கள் யாரும் இல்லாததால், வீட்டில் வேலை செய்பவர்களும், சில முக்கியத் நண்பர்கள் மட்டுமே இருந்தனர். இளமாறனின் திட்டப்படி, மெஹந்தி போடும் கலைஞர்கள் போல அவனது ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.
மீனாட்சியும் வைஷ்ணவியும் மேடையில் அமர்ந்திருக்க, இரண்டு பெண்கள் அவர்களுக்கு மெஹந்தி போடத் தொடங்கினர்.
“மேடம், இது ஒரு ஸ்பெஷல் ஆர்கானிக் மெஹந்தி. இதோட வாசனை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்று அந்தப் பெண் ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டிலை எடுத்தாள்.
மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்கள் ரகசியமாக ஒரு மயக்க மருந்து கலந்த ஸ்ப்ரேவை அவர்கள் மூக்கிற்கு அருகே அடித்தனர். மீனாட்சிக்கும் வைஷ்ணவிக்கும் ஒரு நிமிடம் தலை சுற்றியது.
“வைஷு… எனக்கு ஒரு மாதிரி இருக்கு,” என்று மீனாட்சி சொல்லும்போதே அவளது கண்கள் செருகின. அடுத்த சில நொடிகளில் இருவரும் மயக்கத்தின் பிடிக்குள் விழுந்தனர்.
வெளியே அதிரவனும் தென்னரசுவும் கல்யாணப் பந்தலில் சில வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மெஹந்தி மீனாட்சி இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்ததால் அந்த அரை பக்கம் அவளை தொந்தரவு செய்ய வேலையாட்கள் யாரும் அந்த பக்கம் வரவில்லை இது இவர்களுக்கு சாதகமாகிப்போனது.
ஒரு மிகப்பெரிய துணி மூட்டைக்குள் இருவரையும் சுருட்டி உணவு சப்ளை செய்ய வந்த வேலைக்காரர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு வந்த இளம் மரணி நாட்கள் இரு பெண்களையும் தூக்கி சென்றனர்.
பங்களாவின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த அந்தப் பெரிய பார்சல் கண்டைனர் லாரியில் இருவரையும் ஏற்றினர். இளமாறன் தூரத்தில் நின்று கொண்டு இதைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தான்.
“சுருதி… பறவைகள் கூண்டுல மாட்டிக்கிச்சு. அடுத்த ஸ்டாப் பாம்பே தான்!” என்றான் வக்கிரத்துடன்.
சிறிது நேரம் கழித்து அதிரவன் உள்ளே வந்தான். “மீனாட்சி! வைஷு! எங்க போயிட்டீங்க?” என்று அவன் கத்தியபோது அங்கே அமைதி மட்டுமே நிலவியது. ஹாலில் மீனாட்சியின் செருப்பு மட்டும் அனாதையாகக் கிடந்தது.
அதிரவனின் இதயம் துடிக்க மறந்தது. “தென்னரசு! தென்னரசு! இங்க வாடா… பொண்ணுங்களைக் காணோம்!” என்று அவன் அலற, பங்களாவே ஒரு மரணப் பயத்தில் உறைந்தது. இளமாறனின் கொடூரமான வேட்டை தொடங்கிவிட்டது.
பங்களாவே மரண அமைதியில் உறைந்திருந்தது. மீனாட்சி மற்றும் வைஷ்ணவியின் அறைகளில் அவர்கள் பயன்படுத்திய மெஹந்தி வாசனை இன்னும் மிச்சமிருந்தது, ஆனால் அவர்கள் அங்கில்லை. அதிரவன் பைத்தியம் பிடித்தவன் போல் ஒவ்வொரு அறையாகத் தேடினான். தென்னரசுவின் கண்கள் சிவந்து, ஆத்திரத்தில் கைகள் நடுங்கின.
“அதிரவன்… இது சாதாரணக் காணாமல் போதல் இல்லைடா. யாரோ திட்டமிட்டுத் தூக்கியிருக்காங்க!” என்று தென்னரசு கத்த, பங்களாவின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் மெல்ல உள்ளே வந்தான்.
“அங்கிள்… அந்தப் பெரிய பெட்டியைத் தூக்கிட்டுப் போனவங்க, பின்னாடி நின்ன ஒரு பெரிய லாரியில ஏத்திட்டுப் போனாங்க. அந்த லாரி மேல ‘பாம்பே பார்சல் சர்வீஸ்’னு எழுதியிருந்தது,” என்று அவன் பயத்துடன் சொன்னான்.
“டேய் குட்டி பையா உனக்கு அந்த வண்டியோட நம்பர் ஞாபகம் இருக்கா??”.
என்று தென்னரசு கேட்க..
“ஞாபகம் இருக்கும் ஞாபகம் இருக்கு நம்பர் ரொம்ப பேன்சியா இருந்தது”. என்று சொல்லி, ஒரு மும்பை பின்கோடு கொண்ட வண்டி என் நம்பரை சொல்லிவிட
அதிரவன் உடனே பங்களாவின் சிசிடிவி கேமராக்களைச் சோதித்தான். மெஹந்தி கலைஞர்கள் என்ற போர்வையில் வந்தவர்கள், மயங்கிய நிலையில் இருந்த மீனாட்சியையும் வைஷ்ணவியையும் ஒரு பெரிய மரப்பெட்டிக்குள் வைத்து லாரியில் ஏற்றும் காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது. லாரியின் நம்பர் பிளேட்டைப் பார்த்த அதிரவன், தன் நண்பனான கமிஷனருக்குப் போன் செய்தான்.
“சார்… நான் ஒரு நம்பர் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். என்னடா பியான்சி மீனாட்சி அவ பிரண்ட் வைஷ்ணவி இரண்டு பேரையும் கிட்னா பன்னி அந்த லாரில தான் அனுப்பி இருக்காங்க.
அந்த லாரி இப்போ எந்தத் திசையில போகுதுன்னு எனக்கு உடனே தெரியணும்!” என்று கர்ஜித்துவிட்டுத் தனது எஸ்யுவி (SUV) காரை எடுத்தான். தென்னரசு கையில் ஒரு நீண்ட கத்தியுடன் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான்.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் அந்த லாரி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. லாரியின் உள்ளே, கண்டைனருக்குள் மீனாட்சியும் வைஷ்ணவியும் மயக்க நிலையில் ஒரு மூலையில் கிடந்தனர். அவர்களுக்குத் தங்களது உயிருக்கு நேரிடப் போகும் ஆபத்தோ, தங்களது வயிற்றில் வளரும் கருவுக்கு ஏற்படப் போகும் பாதிப்போ தெரியவில்லை.
அதே சமயம், இளமாறன் தனது காரில் அந்த லாரியைத் தொடர்ந்தபடி சுருதியிடம் பேசினான். “அதிரவன் இப்போ என்னைத் தேடி வருவான். ஆனா அவன் வர்றதுக்குள்ள இந்த வண்டி பார்டரைத் தாண்டிடும். வழியில என் ஆளுங்க நிப்பாங்க. அதிரவனையும் தென்னரசுவையும் அங்கேயே முடிச்சிடணும்,” என்று வக்கிரத்துடன் சிரித்தான்.
நெடுஞ்சாலையில் அதிரவனின் கார் லாரியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென இரண்டு கார்கள் அதிரவனின் காரை வழிமறித்தன. இளமாறனின் அடியாட்கள் கையில் இரும்புக் கம்பிகளுடன் கீழே இறங்கினர்.
“தென்னரசு… இறங்கு! இன்னைக்கு இவங்க யாரும் உயிரோட இருக்கக் கூடாது!” என்று அதிரவன் கதவைத் திறந்து கீழே குதித்தான்.
அதிரவனும் தென்னரசுவும் வெறிபிடித்த வேங்கைகளாக மாறினர். தன் மனைவி மற்றும் குழந்தையின் உயிருக்காகப் போராடும் ஒரு ஆணின் பலம் அங்கே தெரிந்தது. தென்னரசு ஒருவனைத் தூக்கி அப்படியே தரையில் அடித்தான். அதிரவன் தனது பலமான முஷ்டிகளால் இளமாறனின் ஆட்களை ரத்த வெள்ளத்தில் நனைய வைத்தான். ஆணாதிக்கம் சிதைந்து, தன் குடும்பத்தைக் காக்கும் வீரமாக அது மாறியிருந்தது.
அடிதடிக்கு நடுவே, லாரி தூரத்தில் மறைவதைப் பார்த்த அதிரவன், “தென்னரசு! வண்டியில ஏறு!” என்று கத்தினான். காயம்பட்ட நிலையிலும் அவர்கள் காரை விரட்டினர்.
சில மைல்கள் தொலைவில், அந்த லாரியை ஒரு மறைவான இடத்தில் இளமாறன் நிறுத்தச் சொன்னான். பாம்பே பார்ட்டியின் ஆட்கள் அங்கே கண்டைனரை மாற்றத் தயாராக இருந்தனர்.
வைஷ்ணவி மெல்லக் கண் விழிக்க முயன்றனர். வைஷ்ணவிக்கு அடிவயிற்றில் ஒரு மெல்லிய வலி எடுக்கத் தொடங்கியது.
“ஆஆஆ.. என் வயிறு ரொம்ப வலிக்குது மீனு மீனு நம்மள யாரும் கடத்திட்டு போயிட்டாங்க கண்ணை திறந்து பாரு மீனு”.
என்று மயக்கம் தெளிந்த வைஷ்ணவி சுயநிலவு இல்லாமல் இருக்கும் மீனாட்சி எழுப்ப பார்த்து மறுபுறம் வலித்துக் கொண்டிருக்கும் தன் வயிறு பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தாள்.
அதிரவனின் கார் அந்த இடத்தை நெருங்கியபோது, இளமாறன் அதிர்ச்சியடைந்தான். “இவங்க எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தாங்க? சுடுங்கடா அவங்களை!” என்று கத்தினான். துப்பாக்கிச் சத்தங்கள் அந்தப் பகுதியையே அதிரச் செய்தன.