“என்ன மச்சான் கல்யாணம் ஆயி ஒரு நாள் கூட லீவ் போடாம மறுநாளே சைட் பக்கம் வந்துட்டே .
புது மாப்பிள்ளை மறு விருந்து அது இது னு ஜாலியா இருக்க வேணாமா இப்படி அதுக்குள்ளேயே புது பொண்ண விட்டுட்டு வந்துடலாமா….?
எனக்கு கல்யாணம் நடந்தது ஒரு ஆக்சிடென்ட்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் .
அதுக்குள்ள இருந்து என்ன சீக்கிரமா விடுதலை பண்ணிக்கணும் னு தான் அவகிட்ட அக்ரீமெண்ட் போட்டுட்டு வந்து இருக்கேன் . இது எல்லா விஷயமும் தெரிஞ்சு நீயே இப்படி பேசுறது உனக்கே நல்லா இருக்கா மகேஷ் .
அவளோட நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லடா…..
டேய் என்னவோ அந்த புள்ள கூட பல வருஷம் ஒன்னா வாழ்ந்த மாதிரி பேசாத …
கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆயிருக்கு .
அதுக்குள்ள அவளோட நடவடிக்கை எல்லாம் என்ன சரியில்லை என்று நீ கண்டுபிடிச்ச ….?
அவ அடிக்கடி போன்ல யார்கிட்டயோ போய் தனியா பேசுறா .
அது மட்டும் இல்லாம நேத்து ஒரு கால் வந்துச்சு உடனடியா அம்மா கிட்ட சொல்லிட்டு அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டு நைட்டு லேட்டா தான் வீட்டுக்கு வந்தா …..
ஓ ஃபர்ஸ்ட் நைட் எதுவும் நடக்கலையேன்னு வருத்தமா இருக்கா…..
டேய் செருப்பு பிஞ்சிடும் .
உனக்கு திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருக்கேன் .
எங்க அம்மாவும் அத பத்தி எதுவுமே அவ கிட்ட கேட்கல!
அவ வேல விஷயமா போயிருப்பா…
அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க .
நான் போய் ரூம் ல படுத்துட்டேன் . அவ எப்ப வந்து படுத்தா என்றதே தெரியல காலை ல எந்திரிச்சு பார்க்கிறேன் அவ சோபால படுத்து கிடக்கிறா ……
சரிடா அவ வேலை விஷயமா அவங்க பேசி இருந்திருக்கலாம் இல்லையா…
அவங்கள பத்தி நீ ஏன் கவலைப்படுற எப்படி பார்த்தாலும் இரண்டு பேருமே மியூச்சுவலா பிரிய போறீங்க .
அப்படி இருக்கிறப்போ நீ அவங்கள பத்தி யோசிக்கவே கூடாது .
உன் வேலையை மட்டும் பாரு .
இதுக்கு மேல நான் எதையும் பேசினா என்ன தான் நீ திட்டுவ நான் போய் என்னோட வேலையெல்லாம் கவனிக்கிறேன் …..”என்று கூறிய மகேஷ் அதன் பிறகு அவன் இடத்தில் நின்று பேசாமல் சைட்டில் வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்பதை பற்றி விசாரிக்க சென்று விட்டான் .
ஆனால் அவனுக்கு தான் பித்து பிடித்தது போல் இருந்தது .
ஏன் அவளைப் பற்றிய சிந்தனையே தன்னை ஆட்கொள்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டது .
அவளிடம் சரியாக கூட பேசியது கிடையாது அவளோடு வாழ வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது .
ஆனால் அவள் என்ன செய்கிறாள் எதற்காக அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது .
அதுபோக நேற்று இரவு அவள் தாமதமாக வீடு வந்து சேர்ந்ததும் அவனது மனதை உறுத்தி கொண்டே இருந்தது .
அவள் பார்க்கும் வேலை ஆபத்தானது தான் அதனால் தனக்கு ஏதும் ஆபத்து வந்தால் கூட நிச்சயமாக அதை சரி செய்து கொள்ளலாம் .
ஆனால் தனது தாய்க்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்ன என்பது அவனது ஒரு பக்க சிந்தனையாக இருந்தாலும் மறுபக்கம் இவள் அப்படி என்னதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறாள் என்றும் யோசித்தது அவன் மனம் ……
ஒரு நாளில் தனது வாழ்க்கைக்குள் வந்தவளால் ஏன் தனது சிந்தனை இவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பது தான் அவனது தற்போதைய எண்ணமாகி போனது.
உடனடியாக அவளது எண்ணங்களில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவன் இன்றைய நாளுக்கான வேலைகளை மகேஷோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டான் .
ஷர்வாணியின் பெற்றோர் கோபாலன் மற்றும் விசாகம் இருவருக்குமே நன்றாக தெரியும் .
அவளுக்கு நடைபெற்ற இந்த திருமணம் கூட தங்கள் இருவரின் கட்டாயத்தின் பேரில் தான் நடைபெற்றது .
அவள் முழுமனதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை இதற்கு பிறகு அவளை எந்த ஒரு தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்க கூடாது என்று காரணத்தினால் மறு விருந்து அது போன்ற சடங்குகள் எதுவும் செய்வதற்கு அவர்கள் இருவருக்கும் மனம் வரவில்லை .
அதுபோக இந்த விடயத்தை பற்றி ஜெயாவிடமும் கூறி இருந்தால் ஜெயா தனது மகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது பற்றி எல்லாம் கூறவில்லை .
ஆனால் அவளது மனநிலையை புரிந்து கொண்டு சிறிது நாள் கழித்து இந்த சடங்குகளை வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் இருவரையும் தற்பொழுது தொல்லை செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டார் .
அதன் காரணமாகவே இரவு சடங்கிற்கு கூட அவளை கட்டாயப்படுத்தவில்லை .
அவள் எங்கோ வெளியில் சென்று இருக்கிறார் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் . இருவரின் எண்ணமும் ஒன்றே ஒன்றுதான் இந்த திருமணத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லை .
அப்படி இருக்கும் பட்சத்தில் இருவரையும் மேலும் மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது என்ற காரணத்தினால் அவர் காலப்போக்கில் இருவரும் பேசி புரிந்து கொண்டு நன்றாக வாழ ஆரம்பித்து விடுவர்.
அவர்களது வாழ்க்கையை அவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற ரீதியில் அவரும் ஒதுங்கி விட்டார் .
இன்று காலையில் சிவா வேலைக்கு செல்லும்போது கூட அவர் தடுக்கவில்லை .
அதற்கு மாறாக ஷர்வாணி ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது .
ஏனெனில் சமையலறைக்குள் நுழைந்து அவருக்கு உதவியாக காலை டிஃபனையும் அவளே செய்தாள் .
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை .
போகும்போது கூட சிவா தனது தாயிடம் மட்டுமே கூறிவிட்டு சென்றதையும் கவனித்துக் கொண்டிருந்தாளே தவிர மறு வார்த்தை எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் .
ஜெயாவும் மேற்கொண்டு எதுவும் இருவரிடமும் பேசவில்லை . அவரும் விட்டுவிட்டார் .
” ஷர்வாணி உள்ள வரலாமா….?
ஐயோ ஏன் மா என்கிட்ட போய் பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க…?
உள்ள வாங்க கதவு திறந்து தானே இருக்குது .
வெளி ஆள் கிட்ட பர்மிஷன் கேட்கிற மாதிரி என்கிட்ட எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ்லாம் ……
இருக்கட்டும்மா இருந்தாலும் கேட்டுக்கணும் தானே ! ” என்று கூறியவர் மெத்தையில் அவளுக்கு அருகிலேயே வந்து அமர்ந்தவாறு அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவள் தலையையும் வருடிவிட்டார் .
“உனக்கு இந்த கல்யாணத்துல பெருசா விருப்பம் இல்ல உங்க அப்பா அம்மா சொன்னாங்கன்றதுக்காக தான் நீ இதை பண்ணிக்கிட்டு எனக்கு நல்லாவே தெரியும் .
அதே மாதிரி தான் என் பையனுக்கும் சுத்தமா விருப்பம் கிடையாது,
சொல்லப்போனால் அவனுக்கு உலகமே நான் தான் . நாளைக்கு கல்யாணம் பொண்டாட்டி னு ஆனதுக்கு அப்புறமா அவனையும் என்னையும் யாராச்சும் பிரிச்சிடுவார்களோ அப்படிங்கிற காரணத்துக்காகவே ரொம்ப நாளா கல்யாணம் வேணாம் னு சொல்லிட்டான் .
அதுக்கப்புறம் அவனோட அப்பாவால நடந்த பிரச்சனை அவனோட மனசுக்குள்ள சின்ன வயசுல இருந்து யாரும் யாரு மேலயும் காரணம் இல்லாம பாசம் வைக்க மாட்டாங்க அப்படி என்று ஒரு எண்ணத்தை விதைச்சுருச்சு …..
அவனுக்கு நீ தான் எல்லாத்தையும் புரிய வைக்கணும் னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன் .
நீ அவனோட சேர்ந்து வாழணும் னு நான் போர்ஸ் பண்ணவும் மாட்டேன்….
முடிஞ்ச வரைக்கும் என்கிட்ட பேசுற மாதிரி அவன் கிட்ட பேசி பிரண்டாக பாரு .
ஒரு கட்டத்துல கண்டிப்பா அவன ஒரு செகண்ட் ஆச்சும் உனக்கு பிடிக்கும் .
அப்படி புடிக்கிறப்போ அதை அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போகலாம் னு தோணுச்சுன்னா அடுத்து அத பத்தி யோசி!
அப்படி இல்லன்னா கண்டிப்பா நீயே டிவோஸ் வாங்கிக்கலாம் . அதுக்கு நான் முழு சம்மதம் கொடுப்பேன் .
டிவோர்ஸ் ஆனதுக்கு அப்புறமும் கூட இப்போ என்கிட்ட நீ பேசுற மாதிரி இதே பாசத்தோட எப்பயும் பேசுவியா மா ……”என்று கேட்டவரின் கண்களில் இருந்த கண்ணீர் சரியாக அவளது கையையும் நனைத்தது .
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
நிச்சயமாக அவரிடம் இருந்து அவள் அதை எதிர்பார்க்கவே இல்லை .
திருமணம் என்று பேசியவுடன் அதில் பெரிதாக எந்த நாட்டமும் இல்லாமல் இருந்தவள் .
நிச்சயமாக அவருக்கும் தனது நடவடிக்கைகளில் இருந்து இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று நினைத்துக் கொண்டு தன்னிடம் அவரது மகனுக்காக வந்து பேசுவார் வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார் என்று நினைத்திருந்த அவளது எண்ணங்களுக்கு எதிர்மாறாக இருந்தது ஜெயாவின் வார்த்தைகள் .
” நீங்க சொல்றதெல்லாம் எனக்கே அதிர்ச்சியா இருக்கு மா .
எனக்கு கொஞ்சம் கூட இந்த திருமணத்தில விருப்பம் இல்ல தான் .
இருந்தாலும் நீங்க இப்படி உடனடியா என்னோட மனச புரிஞ்சிப்பீங்க னு நான் எதிர்பார்க்கல .
கண்டிப்பா உங்க கிட்ட பேசுற மாதிரி அவர்கிட்டயும் நான் பேசி பார்க்கிறேன் …..
எனக்கு நீங்க சொல்ற மாதிரி ஏதாவது தோணுச்சுன்னா கண்டிப்பா உங்க கிட்ட தான் முதல்ல அத சொல்லுவன் .
அப்படியும் செட் ஆகல அப்படின்னா கண்டிப்பா நான் அவர் கிட்ட இருந்து பிரிஞ்சதுக்கு அப்புறம் உங்க மேல இதே பாசத்தோட நான் இருப்பேன் இது சத்தியம் …..” என்று கூறியவள் அவரது கையை பிடித்து வாக்கு கொடுத்தாள் .
சிறிது நேரம் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர் .
ஷர்வாணியை பொறுத்தவரை ஜெயாவை அவ்வளவு பிடித்து விட்டது அவளுக்கு ….
தற்போதைய சூழ்நிலையில் அவளது தாய் தந்தையை தவிர்த்து வேறு யாரேனும் பிடிக்கும் என்றால் அது ஜெயா தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுவேன் என்ற ரீதியில் அவளது மானம் அவருடன் அந்த அளவிற்கு ஒன்றை போய்விட்டது .
“சரி மா நான் போய் மத்தியானம் சாப்பாடு ரெடி பண்றேன் அவன் சாப்பிட வந்துருவான் வேற…..
நீங்க இருங்க மா .
நானே சமைத்துக் கொண்டு போய் அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன் . இங்க தான் சைட் பக்கத்துல தான இருக்கு …. “அவர்கள் தற்பொழுது வசிப்பதும் தஞ்சாவூர் தான் அவனது வேலை பார்க்கும் இடமும் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் கிட்ட இருப்பதால் அவனும் மதிய உணவிற்கு எப்பொழுதும் வீட்டிற்கு வந்து விடுவான் .
ஷர்வாணியின் தாய் தந்தை பட்டுக்கோட்டை அவர்கள் திருமணம் முடிந்த கையோடு அவர்களது வீட்டிற்கு சென்று விட்டனர் .
எப்பொழுது தனது மகளை பார்க்க வேண்டும் என்றால் ஒரு மணி நேர பயணத்திலேயே பார்த்துக் கொள்ளலாம் என்றே அவர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் பட்டுக்கோட்டையை சுற்றிய ஊர்களில் தான் .
அதில் சரியாக சிக்கியது சிவாவின் ஜாதகம் .
ஆகையால் அவர்களும் சிவாவையே ஷர்வாணிக்கு மாப்பிள்ளையாக பார்த்துவிட்டனர் .
அவளும் அதற்கு எந்தவிதமான தெரிவிக்கவில்லை அதற்கு மாறாக தனது வேலையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் .
அவனுக்காகவே அவள் சமைத்து உணவையும் எடுத்துக் கொண்டு அவன் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள் ,
” நிச்சயமா அவன் இன்னும் ரெண்டு நாள் ல நம்ம கிட்ட பேசுறதுக்காக வருவான் ல அப்போ அவனை நம்ம இந்த பிரச்சனைக்குள்ள மாட்டி விடலாம் .
தொழில் மூலமா அவன சாய்க்கணும்ன்றது முடியாத காரியமா இருக்கு .
அப்ப இந்த மாதிரி பண்ணிட்டா அவனும் ஜெயிலுக்கு போயிடுவான் . நம்மளும் பிசினஸ் அ பண்ணிடலாம் …..
நீ சொல்றதும் சரிதான் .
எவ்வளவோ காரியம் பண்ணியாச்சு அவன் கன்ஸ்ட்ரக்ஷன் கட்டாமல் இருப்பதற்காக ….
ஆனால் அது எல்லாத்தையும் மீறி அவன் ஒரு ஒரு ப்ராஜெக்ட் ம் சிறப்பா செஞ்சு முடிச்சிட்டு நல்ல இன்ஜினியர் அப்படி என்ற பெயரையும் வாங்கிகிட்டு இருக்கான் .
இப்படியே போனால் நம்ம கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான் .
அவன் வரட்டும் அப்புறமா என்ன செய்யனுமோ அதை சிறப்பா செஞ்சிடலாம் ……”
” மச்சான் நம்ம இன்னும் ரெண்டு நாள் ல சென்னைக்கு போய் அங்க நம்ம புதுசா கட்ட போற கன்ஸ்டிரக்சனோட அவுட் ஃபிட் அப்புறம் இன்னர் டிசைன் எல்லாம் நம்ம டிசைன் பண்ணி வச்சது அவங்க கிட்ட காட்டி அவங்க ஒப்பினியன் என்ன என்பதை கேட்கணும் …..
ஆமா அந்த மீட்டிங் வேற இருக்கு இல்ல .
ஆனா அதுக்காக இன்னும் கொஞ்சம் டிசைன்ஸ் நான் பண்ணலாம் னு இருக்கேன் .
நீ அவுட் ஃபிட் ஓரளவுக்கு முடிச்சிட்ட….
நான் இன்னர் டிசைன்ஸ் மட்டும் பண்ணிடுறேன் . அதுக்கப்புறம் நம்ம போகலாம். .
சரிடா எல்லாத்தையும் முடிச்சுட்டு சொல்லு அவங்க கிட்ட எப்ப மீட்டிங் வெச்சுக்கலாம் னு நான் போன்லயே பேசி விடுறேன்……” என்று மகேஷ் மற்றும் சிவா இருவரும் வேலை விடயமாக பேசிக்கொண்டனர் .
சிவாவிற்கு எப்பொழுதுமே ஒரு வீட்டிற்கு உள்ளே உள்ள வால் பெயிண்டிங் மற்றும் கதவு டிசைன்கள் போன்றவற்றை அவனே வரைந்து கொடுத்து செய்ய சொல்லுவது மிகவும் பிடித்தமான விடயம் .
மகேஷிற்கு ஒரு வீட்டின் வெளிப்புறத் தோற்றம் எவ்வாறெல்லாம் அழகாக நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதை வரைந்து காட்டுவதிலும் அவ்வளவு ஈடுபாடு இருப்பதால் அவனே வெளி டிசைனை பார்த்துக் கொள்வான் .
இருவருமே தற்போது வரை ஒன்றாக ஒரே துறையில் பணிபுரிகின்றனர் என்ற பட்சத்தில் இருவருக்குள்ளும் வெவ்வேறு திறமைகள் இருக்கையில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கட்டிடம் கட்டுவதால் இருவரின் திறமைக்கேற்பவே பல டெண்டர்கள் தேடி வந்தன .
– தொடரும்🖤🖤🖤🖤🖤