அந்த அறை முழுக்க மல்லிகை வாசமும் இது போக வாசனை திரவியங்களும் அவ்வளவு அலங்காரம் செய்யப்பட்டு பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது .
“எதுவுமே நடக்காததுக்கு இப்படி ஒரு செட்டிங்ஸ் எல்லாம் தேவையா கோபி….. “என்ற ரீதியில் இருந்தது மகேஷின் மைண்ட் வாய்ஸ் .
ஏனோ அவனுக்கு ஷர்வாணியை பார்த்த உடனேயே நிச்சயமாக சிவாவிற்கு சரியான ஜோடி இவள் தான் என்று தோன்றியது.
அமைதியாக பேசும் அவளது குணமும் கிட்டத்தட்ட சிவாவை போன்று தான் உள்ளது என்பதையும் அவன் தெரிந்து கொண்டான் .
அனைத்திலும் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது அது போக எவ்வளவு பெரிய விடயமாக இருந்தாலும் சரி அதற்கான தீர்வை எளிதாக எடுத்து விடுவான் சிவா .
அதேபோல் இவளும் இவ்வளவு பெரிய விடயத்தை அதுவும் ஒரே நாளில் கூறியிருக்கிறாள் என்று நினைக்க நினைக்க அவனுக்கு நினைவில் நின்றது எல்லாம் நிச்சயமாக இவர்கள் நினைக்க போவது நடக்கப் போவதில்லை என்பது தான் ……!
அவள் மட்டுமே அவனுக்கு சரியான ஜோடியாக இருக்க முடியும் என்பது அவனது எண்ணமாகி போனது .
அவளை பெண் பார்க்கப் போனதிலிருந்து சந்தித்து இருக்கிறான் அன்றும் சரி அமைதியாகவே இருந்து விட்டாள் .
இன்றும் இவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் இருக்கிறாள் .
ஆனால் அவனிடத்தில் தனது முடிவு என்ன என்பதையும் தெரிவித்து இருக்கிறாள் .
அதே நேரத்தில் மண்டபத்தில் அவள் வன்சியிடம் பேசியது அவனுக்கு நினைவிற்கு வந்தது வேலை விடயமாக இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம் .
அதை இவன் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டு என்னிடம் உளறி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் .
பால்கனியில் நின்றபடி போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பவனை பார்க்க பார்க்க திருமணம் முடிந்த உடனேயே விவாகரத்து பற்றி அவளிடம் பேசி ஆகிவிட்டது .
அத்தோடு தனது கடமை முடிந்து விட்டது என்ற ரீதியில் இவன் இருக்கிறானா…?
அதற்குள் வேலை விடயமாக பேச ஆரம்பித்து விட்டானா….
என்று அவன் அருகில் சென்று அவனது ஃபோனையும் புடுங்கி தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டான் .
“மச்சான் கொஞ்சமாச்சும் பொறுப்புள்ள மாதிரி நடிக்கவாச்சும் செய் டா !
உங்க ரெண்டு பேருக்குள்ள பேசி முடிச்சிட்டீங்க ஓகே !
அம்மாவை பொறுத்த வரைக்கும் எதுவும் தெரியாது .
அம்மாவுக்கு வேற இப்ப எல்லாம் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது .
டாக்டர் ட கூட்டிட்டு போனா வயசாயிருச்சு அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க சந்தோஷமா பாத்துக்கோங்க னு சொல்றாங்க .
இந்த நேரத்துல நீ இப்படி இருக்குறத பாத்தா அவங்க கண்டிப்பா வேதனைப்படுவாங்க….
டேய் டேய் நிறுத்து நான் என்னமோ அவளை இந்த வீட்டை விட்டு அடிச்சு தொறத்துனா மாதிரி பேசிக்கிட்டே போயிட்டு இருக்க .
நாங்க ரெண்டு பேரும் தான் பேசி வெளியில ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா நடிக்கிறே னு சொல்லிட்ட இல்ல .
அப்புறம் என்ன உன் அட்வைஸ் மழையை பொழிய ஆரம்பிச்சுட்ட…..
அது எல்லாமே ஓகே தான் டா . நீ அதுக்குள்ள இப்படி ஓரமா நின்னு போன் பேசிட்டு இருக்குறத பாத்தா நிச்சயமா அம்மா கோபப்படுவாங்க .
அதனால நீ இப்ப என்ன பண்ற மணி வேற எட்டாயிருச்சு . இப்போ போய் உன் ரூம் ல வெயிட் பண்ணு….” என்றவனின் பேச்சும் சரிதானே தனது தாய்க்கு தெரிந்தால் நிச்சயமாக கோபப்படுவார் .
அதையும் தாண்டி வருத்தப்பட்டு தன்னிடம் ஏதேதோ பேச ஆரம்பித்து விடுவார் என்ற ரீதியில் அவனும் இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு சென்று விட்டான் .
அறைக்குள் நுழைந்தவனுக்கு நடக்காது ஒரு சடங்கிற்கு இவ்வளவு அலங்காரம் தேவையா என்று இருந்தது .
உடனடியாக அத்தனை அலங்காரங்களையும் கலைத்து விட்டான் .
சர்வ அலங்காரத்தோடு அவள் அறைக்குள் நுழைய , பின்புறமாக திரும்ப நின்று சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தவனுக்கு கொலுசு சத்தம் கேட்க திரும்பி பார்த்தான் .
காலையில் பார்த்ததோடு இன்னும் சற்று அழகு மெருகேற்றப்பட்டு அவள் இருப்பது போன்று அவனுக்கு தோன்றியது . ஏற்கனவே சந்தன நிறத்தில் இருப்பவளுக்கு பவுண்டேஷன் கன்சீலர் மை லிப்ஸ்டிக் என அனைத்தையும் போட்டு தேவலோக அப்சரஸ் போல் காட்டியிருந்தனர் .
“ஹலோ பாஸ் என்ன பாத்தது போதும் , உங்களுக்கு பால் வேணும் னா குடிச்சிட்டு படுத்துக்கோங்க….
எனக்கு தூக்கம் வருது .
அந்த சோஃபாலையே படுத்துக்கிறேன் நீங்க பெட்ல படுத்துக்கோங்க…..
இல்ல நீயும் பெட்லயே படுத்துக்கலாம் உடம்பு வலிக்கும் ல…
இல்ல இல்ல எனக்கு அதுவே கம்ஃபர்ட்டபிளா இருக்கு…” என்று கூறியவர் சோபாவில் சென்ற படுத்துக் கொண்டாள் .
என்ன பொண்ணுடா இவளை பத்தி புரிஞ்சுக்கவே முடியலையே என்று யோசித்தவன் பாலையும் குடித்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டபடி மெத்தையில் படுத்து கொண்டான் .
மகேஷும் இரவு ஜெயாவிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டான் .
சூரியன் தனது கதிர்களை கிளம்பி கொண்டு வானம் எங்கும் தனது ஆட்சியை தொடர இங்கே இரு ஜீவன்களோ ஒரே மெத்தையில் அருகே படுத்துக் கொண்டிருந்தன . முதலில் எழுந்தது என்னவோ சிவா தான் .
இவ எப்ப இங்க வந்தா . சோபாலதான படுத்துக்கிறேன் என்று சொன்னாள் .
நான் இங்கே படுத்துக்கோ சொன்னதுக்கு கூட இதுதான் கம்ஃபோட்டபில இருக்கு னு சொல்லிட்டு இங்க அதுவும் இப்படி பக்கத்துல என் மேல கால போட்டுட்டு தூங்கிக்கிட்டு இருக்கா…..
ஏதோ டெடி பியரை கட்டி புடிச்சிட்டு தூங்குற மாதிரி என்ன வேற புடிச்சுகிட்டு தூங்குறா ……
சின்ன வயசுல இருந்து டெடி ஐ கட்டி புடிச்சுட்டு தூங்குவது பழக்கம் போல !
அதான் இப்படி பண்ணிட்டு இருக்கா .
நேற்று பார்த்ததைவிட இன்று அதுவும் அவ்வளவு நெருக்கத்தில் அவளது முகத்தை பார்த்தவனுக்கு ஏனோ அவளது அழகை ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றியது . காரணம் தான் அவனுக்கு தெரியவில்லை …..
ஒப்பனை இல்லாமலும் அழகாக தான் இருக்கிறாள் என்று தனக்குள்ளையே சொல்லிக் கொண்டவன் , அவளிடம் இருந்து மெல்ல அவள் தூக்கம் கலையாத வரை தன்னை விடுவித்துக் கொண்டவன் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டான் .
குளித்து முடித்து கீழே இறங்கி வந்தவன் சமையலறைக்குள் சத்தம் கேட்கவும் தனது தாய் தான் அங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்றான் .
“வா கண்ணா அவ தூங்கி எந்திரிச்சிட்டாளா இந்தா நீ காபி குடிச்சிட்டு அவளுக்கும் போய் காபி கொடு…..
அம்மா இதெல்லாம் அவ தான் பண்ணனும் ஆனா என்ன பண்ண சொல்றீங்க .
என்னடா நீ இப்படி பேசுற .
புருஷன் தூங்கிட்டு இருக்கப்போ அவனை எழுப்பி பொண்டாட்டி தான் காபி கொடுக்கணும் னு இல்ல .
யாரு பர்ஸ்ட் எந்திரிக்கிறாங்களோ அவங்க போட்டு கொடுக்கலாம் .
இது எல்லாமே சின்ன சின்ன வேலை தானே இந்த மாதிரியான வேலை மூலமா தான் நம்மளோட துணை கிட்ட நம்ம அன்பை வெளிப்படுத்த முடியும் .
அக்கறைய காட்ட முடியும். இதுல தான் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பையும் தன்னால புரிஞ்சுக்க முடியும் .
சரி மா காலையிலேயே நீ எனக்கு கிளாஸ் எடுக்க வேணாம் .
இப்ப காபி அவளுக்கு கொண்டு போய் கொடுக்கணும் அப்படித்தானே .
சரி குடுங்க….” என்று தனது காபி கோப்பையையும் வாங்கி குடித்தவன் அவளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு மாடி ஏறினான் .
அந்த வீட்டில் கீழே நான்கு அறையும் மாடியில் மேலே இரண்டறையும் இது போக பால்கனி ஊஞ்சல் கார்டன் எல்லாம் அழகாக அவனால் பராமரிக்கப்பட்ட வந்தது .
தனது அறைக்குள் நுழைந்தவன் கண்டது எல்லாம் கண்ணாடி முன்பு நின்று தலையை வாரிக் கொண்டிருக்கும் தனது மனைவியை தான் .
அதற்குள் எழுந்து குளித்து விட்டாளா…? என்று கூட அவனுக்கு தோன்றியது .
“அம்மா உன்கிட்ட காபி குடுக்க சொன்னாங்க இந்தா ..”என்று காபி கோப்பையை தன்னிடத்தில் நீட்டுபவனை பார்க்க ஆச்சரியமாக இருந்தது .
“என்ன அப்படி பாக்குற நம்ம தான் இவனுக்கு காபி போட்டு தரணும் .
இவன் நமக்கு காபி போட்டு கொடுக்கிறான் என்று பார்க்கிறியா .
யார் யாருக்கு காபி குடுத்தா என்ன..
ஃபர்ஸ்ட் யார் எழுந்திருக்கிறார்களோ அவங்க இன்னொருத்தவங்களுக்கு போட்டு கொடுக்கிறதுல எந்த தப்பும் இல்லையே…!
அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கல..
எப்படியும் அம்மா சொல்லி தான் நீங்க எடுத்துட்டு வந்து இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் .
இருந்தாலும் அதுலயும் ஈகோ பாக்குற பசங்க எல்லாம் இருக்காங்க .
ஆனா நீங்க அதெல்லாம் பத்தி நினைக்காம கொண்டுட்டு வந்து இருக்கீங்களா என்று தான் யோசனை இருக்கு .
ஓஹோ அப்படியா என்ன எங்க அம்மா அந்த ஈகோ பாக்குற மாதிரி எல்லாம் வளக்கல….. ” என்று கூறியவன் அதோட பேச்சையும் முடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தவாறு ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டான் .
அன்றாட வேலைகளில் இதுவும் ஒன்று..
அந்த நாள் முடிவடைவதற்குள் ஒரு கவிதை புத்தகத்தையாவது வாசித்து விட்டால் தான் அவனுக்கு அந்த நாளே ஓடும் என்றது போல் ஆகிவிடும் அவனுக்கு ……
தனது தாயும் தந்தையும் அவ்வளவு காதலோடு பேசிக்கொள்வதையும் வாழ்வதையும் பார்த்திருப்பவளுக்கு ஒரு விடயம் மட்டும் அவ்வப்போது புரியும் .
இருவருமே அதீத காதலில் தான் இருக்கின்றனர் .
எனினும் தந்தைக்கு தேவையான அனைத்தையும் தாய் தானே பார்த்து பார்த்து செய்கிறார் .
ஒரு நாளாவது மனைவிக்காக கணவன் சின்ன சின்ன வேலைகள் ஆவது செய்யலாமே என்று கூட அவளுக்கு தோன்றும் .
அது போன்று ஒருவன் தனது கணவனாக கிடைத்தால் நன்றாக இருக்கும் கூட எண்ணியவள் காலப்போக்கில் அதெல்லாம் கிடைப்பது அரிது என்று காதல் கல்யாணம் என்ற எந்த உறவு முறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் .
ஆனால் இன்று அவன் செய்த செயல் முதல் முறையாக தனது எண்ணத்தை ஈடேற்றுவது போன்று அவளுக்கு தோன்றியது .
இருவரின் எண்ணமும் உடைப்பட்டு ஒரே எண்ணமாகுமா…..?
– தொடரும்🖤