Home ANTIHERO21) இளமை 😍

21) இளமை 😍

by sreejanovels
39 views

அத்தியாயம் 21

விடியற்காலை ஐந்து மணி. அதிரவனின் அந்தப் பெரிய பங்களாவில் ஒரு பயங்கரமான நிசப்தம் நிலவியது. பனிக்காற்று ஜன்னல் திரைச்சீலைகளை மெல்ல அசைக்க, அதிரவன் உறக்கம் கலைந்து மெல்லக் கண் விழித்தான். நேற்று இரவு மீனாட்சியுடன் நடந்த அந்த ஆவேசமான கூடல், அவளது உடலின் வாசம் எல்லாம் அவன் நினைவுகளில் இன்னும் பசுமையாக இருந்தது.

அவன் கைகள் இயல்பாகப் படுக்கையின் அடுத்தப் பக்கத்தைத் துழாவின. ஆனால் அங்கே வெறும் போர்வை மடிப்புகள் மட்டுமே இருந்தன. அவள் உடல் சூடு கூட அந்த இடத்தில் இல்லை; அந்த இடம் குளிர்ந்து போயிருந்தது.

“மீனாட்சி…” என்று கரகரப்பான குரலில் அழைத்தான்.

பதில் வரவில்லை. குளியலறையில் இருப்பாள் என்று நினைத்து எழுந்து சென்று பார்த்தான். கதவு திறந்திருந்தது, உள்ளே யாருமில்லை. அவனது இதயத் துடிப்பு மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்தது. அறையின் பால்கனி, உடை மாற்றும் அறை என எல்லா இடங்களிலும் தேடினான்.

“மீனாட்சி! எங்க இருக்க?” என்று கத்திக் கொண்டே கீழே ஓடி வந்தான்.

அடுக்களை, ஹால் என வீடு முழுவதும் தேடியும் அவள் இல்லை. அவனது கண்கள் சிவந்தன. ஆவேசத்தில் மேசையிலிருந்த பூச்சாடியைத் தரையில் ஓங்கி அடித்தான். “மீனாட்சி!!!” என்று அவன் போட்ட கூச்சல் அந்தப் பெரிய பங்களாவையே அதிர வைத்தது.

அப்போதுதான் மேசையில் இருந்த அந்தக் கடிதம் அவன் கண்ணில் பட்டது.

“உங்களுடன் வாழ்ந்த இந்த ஒரு இரவு மட்டும் என் வாழ்க்கைக்குப் போதும். மறக்க முடியாத நினைவுகளைத் தந்துவிட்டீர்கள். ஆனால், உங்கள் அதிகாரத்திற்கு என்னால் அடிபணிய முடியாது. விடைபெறுகிறேன்.”

அதைப் படித்து முடித்த அதிரவனின் முகம் ரத்தம் ஏறியது போலச் சிவந்து போனது. அவனது கௌரவமும், ஆணாதிக்கமும் ஒரே அடியாகச் சரிந்து விழுந்தது போல உணர்ந்தான். “என்னைத் தவிக்க விட்டுட்டுப் போகலாம்னு நினைச்சியாடி? உன்னை எங்க இருந்தாலும் தூக்கிட்டு வருவேன்!” என்று கர்ஜித்தவன், சட்டை கூட அணியாமல் வெறும் டீ-ஷர்ட்டுடன் தன் ஜீப்பை நோக்கிப் பாய்ந்தான்.

அதே சமயம், கள்ளிக்காட்டு மலை கிராமத்தில் தென்னரசுவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. விடியற்காலையில் வைஷ்ணவியைக் காணாமல் ஊர் முழுக்கப் பைத்தியம் பிடித்தவன் போலத் தேடி அலைந்தான்.

“அம்மா! அந்தப் புள்ள ஜன்னலை வளைச்சுட்டு ஓடிருச்சுமா! என் கௌரவத்தைச் சந்திச் சிரிப்பாக்கிட்டுப் போயிடுச்சே!” என்று கத்திக்கொண்டே தன் பைக்கை எடுத்தான். அவன் முகம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் கறுத்துப்போய் இருந்தது.

அதிரவன் தன் ஜீப்பை மின்னல் வேகத்தில் ஓட்டி வந்து, சரியாக மலை அடிவாரத்தில் தென்னரசுவின் பைக்கை வழிமறித்தான். இரு முரட்டு ஆம்பளைகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் கண்களில் இழப்பின் வலியும், ஒருவிதமான வெறியும் இருந்தது.

“ஹேய் தென்னரசு தானே நீ?? . மீனாட்சி ஊருக்கு வந்தாளா என்கிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டா”.

என்று அதிரவன் கோபமாக சொல்ல.

“அட நீங்க வேற ஏன் பொண்டாட்டி வைஷ்ணவியும் காணும். அப்படின்னா ரெண்டு பிள்ளைகளும் ஒரே நேரத்தில் காணாமல் போய் இருக்காங்கன்னா பிளான் பண்ணி இந்த பொட்ட பிள்ளைங்க நம்மள ஏமாத்திட்டாளுங்க”.

என்று தென்னரசு கடுமையாக சொல்ல.

“மீனாட்சி எங்க போனாலும் நான் அவளை விட மாட்டேன். மீனாட்சி எனக்கு மறுபடியும் கிடைச்ச காரணமே உன்னோட ஒய்ஃப் வைஷ்ணவி தான். நிச்சயமாக இரண்டு பேரும் ஒண்ணாதான் கிளம்பி இருக்கணும்”.

என்று அதிரவன் சொல்ல.

“கண்டிப்பா நம்ம கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு பாக்குறாங்க ஆனா விடக்கூடாது எனக்கு என் பொண்டாட்டி வேணும் உங்களுக்கு உங்க மீனாட்சி வேணும் நம்ம இப்ப சேர்ந்து தான் தேட முடியும். அப்புறம் முக்கியமான விஷயம், எங்க அக்கா வீட்டுக்கு தான் ரெண்டு பேரும் போயிருப்பாங்க. வாங்க அங்க போலாம் அதுசெங்கல்பட்டு பக்கத்துல இருக்குற சின்ன கிராமம்”.

என்று தென்னரசு சொல்ல.
அதிரவன் தனது ஜிப்பை திருப்பி தயாராக இருக்க, தென்னரசு தன்னுடைய வண்டியை அங்கே தனக்கு தெரிந்த ஒரு நபரின் கடையில் பார்க் செய்துவிட்டு அதிரவன் ஜிப்பில் ஏறிக்கொண்டான்.

அந்த விடியற்காலைப் பொழுதில், அந்த இரண்டு பெண்களும் சுதந்திரத்தைத் தேடிச் சென்றிருக்க, இந்த இரண்டு முரட்டு ஆண்களும் அவர்களை மீண்டும் தங்கள் பிடிக்குள் கொண்டுவர வெறியோடு கிளம்பினார்கள்.

……

அதிரவனின் ஜீப் செங்கல்பட்டு கிராமத்தின் வீதிகளில் புழுதி பறக்க வந்து நின்றது. வேலூரில் இருந்து விடியற்காலையிலேயே கிளம்பிய அதிரவனும் தென்னரசுவும், சில மணிநேரங்களிலேயே வைஷ்ணவியின் அம்மா ரத்தினவள்ளியின் வீட்டை அடைந்தனர். அதிரவனின் கண்கள் உறக்கமில்லாமல் சிவந்து போயிருந்தன; அவனது இதயத்தில் ஆத்திரமும், மீனாட்சியை இழந்த தவிப்பும் மாறி மாறி அலைமோதின.

வண்டியிலிருந்து குதித்து இறங்கிய அதிரவன், நேராக ரத்தினவள்ளியின் வீட்டு வாசலுக்குச் சென்றான். தென்னரசுவும் பின்னாடியே ஓடி வந்தான். அங்கே ரத்தினவள்ளி அமைதியாக வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்.

“அக்கா! வைஷு எங்க? அவ இங்கதான் வந்திருக்கான்னு எனக்குத் தெரியும். அவளைக் கூப்பிடுங்க!” என்று தென்னரசு அதிகாரமாகக் கத்தினான்.

ரத்தினவள்ளி நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார். “என் பொண்ணு இங்க வரலையேப்பா. அவள் உன் கூட தானே குடித்தனம் நடத்திட்டு இருக்கான்னு நினைச்சேன்.

நீங்க என்னடான்னா விடியக்காலையிலேயே வந்து தேடுறீங்க?” என்று மிகவும் நிதானமாகப் பதில் சொன்னார்.

அதிரவன் முன்னே வந்து ரத்தினவள்ளியின் கண்களை ஊடுருவிப் பார்த்தான். “அம்மா… என்கிட்ட விளையாடாதீங்க. மீனாட்சியும் வைஷ்ணவியும் இங்கதான் இருக்காங்க. அவங்க எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டுத் தப்பிக்க முடியாது. மரியாதையா அவங்களை வெளியே வரச் சொல்லுங்க,” என்று மிரட்டினான்.

“தம்பி… நீங்க பெரிய இடத்துப் பிள்ளை. ஆனா பெத்த மனசு பொய் சொல்லாது. என் பொண்ணு இங்க இல்ல. வேணும்னா வீட்டைத் தேடிப் பாருங்க,” என்றார் ரத்தினவள்ளி சலனமில்லாமல்.

அதிரவன் ஆத்திரத்தில் ரத்தினவள்ளியைத் தள்ளிவிட்டு உள்ளே புகுந்தான். ஒவ்வொரு அறையாகத் தேடினான். பரண் மேல், அடுக்களை, புழக்கடை என எங்கும் பார்த்தான். தென்னரசுவும் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிவிட்டு ஏமாற்றத்துடன் வெளியே வந்தான்.

உண்மையில், அவர்கள் இருவரும் அங்கே இல்லை. ரத்தினவள்ளிக்கு அவர்கள் பாதுகாப்பாகத் தப்பிச் சென்றது தெரியும், ஆனால் அதை இவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை.

“அம்மா… அவங்க இங்க இல்லாம இருக்கலாம். ஆனா எங்ககிட்ட இருந்து மீனாட்சி ஆளதப்பிக்க முடியாது. இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் அவளை நான் பிடிச்சுட்டு வருவேன்!” என்று அதிரவன் வெறியோடு சொல்லிவிட்டு ஜீப்பை நோக்கிச் சென்றான்.

ஜீப் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில், ரத்தினவள்ளி தன் போனை எடுத்து வைஷ்ணவிக்கு அழைத்தார்.

மறுபக்கம், நீலகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் அந்த ரகசியமான பூர்வீக கிராமத்திற்குச் செல்லும் பேருந்தில் மீனாட்சியும் வைஷ்ணவியும் அமர்ந்திருந்தனர். மலைப்பாங்கான பாதையில் பேருந்து ஏறிக்கொண்டிருக்க, ஜன்னல் வழி வரும் குளிர்க்காற்று அவர்கள் முகத்தில் பட்டது.

போன் ஒலிக்கவும் வைஷ்ணவி எடுத்தாள். “அம்மா… என்னாச்சு?”

“வைஷு… அவனுங்க வந்துட்டுப் போயிட்டானுங்கடி. அதிரவன் கண்ணுல அவ்வளவு வெறி தெரியுது. உங்க மேல அவனுங்களுக்கு அன்பு இருக்கு, ஆனா அதை முறைப்படி காட்டத் தெரியாம இப்படிப் பைத்தியம் மாதிரி அலைறானுங்க. கொஞ்ச நாள் அவனுங்க தவிக்கட்டும், அப்பவாச்சும் புத்தி வருதான்னு பார்ப்போம். நீங்க பத்திரமா இருங்க,” என்று சொல்லிவிட்டு ரத்தினவள்ளி போனை வைத்தார்.

மீனாட்சி வைஷ்ணவியின் தோளில் சாய்ந்து ஜன்னல் வழியே பார்த்தாள். “வைஷு… நம்மளால இங்க நிம்மதியா இருக்க முடியுமா? அதிரவன் எப்படடியாவது கண்டுபிடிச்சுடுவான்னு என் மனசு சொல்லுது.”

“பயப்படாத மீனா. இந்த நீலகிரி கிராமம் என் அப்பாவுக்குத் தெரிஞ்ச ரகசியமான இடம். இங்க யாருமே வர மாட்டாங்க. இது நம்ம வாழ்க்கை… நமக்கான சுதந்திரம்,” என்று வைஷ்ணவி ஆறுதல் சொன்னாள்.

சில மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் அந்த மலை அடிவார கிராமத்தை அடைந்தனர். சுற்றிலும் அடர்ந்த மரங்கள், பனி படர்ந்த மலைகள். அங்கே இருந்த ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதவைத் திறந்தனர். அந்த வீடு பல காலமாகக் கைவிடப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு அது ஒரு சொர்க்கமாகத் தெரிந்தது.

மீனாட்சி திண்ணையில் அமர்ந்து தூரத்தில் தெரியும் மலைகளைப் பார்த்தாள். அவளது இதழின் ஓரத்தில் இன்னும் அதிரவன் கொடுத்த அந்தச் சுகமான அவஸ்தையின் வடு இருந்தது. அவனது நினைவுகள் அவளை வாட்டினாலும், அவனது அதிகாரத்தில் இருந்து தப்பித்த நிம்மதி அவளுக்கு ஒரு பெரிய விடுதலையைத் தந்தது.

மறுபுறம், அதிரவன் தன் ஜீப்பில் வெறியோடு அடுத்த கட்டத் தேடலைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனது முரட்டு இதயம் மீனாட்சிக்காகத் துடித்துக் கொண்டிருந்தது, அதே சமயம் அவளை மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என்ற ஆணாதிக்கமும் அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது.

You may also like

Leave a Comment

About Me

Featured