அத்தியாயம் 17
தன்னுடைய ராஜ பட்டு மெத்தையில் குப்புற விழுந்து படுத்துக் கொண்டிருந்தான் அதிரவன். அவன் வெற்று முதுகில் தன் இதழ் பதித்து, மீனாட்சி மெல்ல மெல்ல தன் விரல்கொண்டு அவனை அணைத்துக் கொண்டு அவன் மீது படுத்துக்கொள்ள…
“மீனு…” என்று திரும்பியவன், அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு அவள் இதழ்களில் நச்சென்று முத்தங்களைக் கொடுத்து வழங்க…
“இன்னும் வேகமா…” என்று அவள் மோன குரலில் சொல்ல, அதில் மெய்மறந்து போனவன் அவளை அப்படியே தன் மீது அமர வைத்து அவளோடு இன்பக் கடலில் மூழ்க…
“ஆஆஆஆ…” என்று மீனாட்சி அலறும்போது, அவன் பதறி அடித்து எழுந்து அமர்ந்தான். இவையெல்லாம் கனவு என்று அப்போதுதான் அதிரவன் உணர்ந்தான்.
“ஓ மை காட்! இது கனவா? மீனு, என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ற. எதுக்குடி கோச்சுக்கிட்டு போன? அப்புறம் நான் என்ன கேட்டுட்டேன்? காலம் முழுக்க என் கூட இரு, உனக்கு எல்லாத்தையும் செய்றேன். இந்த கல்யாணம் மட்டும் நமக்கு வேண்டாமே!”
என்று கண்களை இறுக மூடியவன் சில விஷயங்களை நினைத்துப் பார்க்கவே அவன் உடல் நடுங்கியது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை அவன் ஆண்டு வந்தாலும், அவன் மனதில் அன்று விழுந்த ஒரு வடு இன்றும் ஆறாமல் இருப்பதுதான் இப்போது மிகப்பெரிய ஆச்சரியக்குறி.
தூக்கம் வராமல் பால்கனியில் நடந்து கொண்டிருந்தான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நேரம் ஒரு மாதோடு இருந்திருந்தால் எப்பொழுதோ அவன் உறக்கத்திற்குச் சென்றிருப்பான். ஆனால் மீனாட்சி என்று அவன் வாழ்வில் வந்தாளோ, அப்போது முதல் வேறு எந்தப் பெண்ணையும் அவன் நாடுவதில்லை.
இதற்கு மேல் சரிப்பட்டு வராது என்பது போல் தன் சிகரெட்டை எடுத்து அதைப் பற்ற வைத்து வளையம் விட்டுக்கொண்டு, “இன்னும் கொஞ்ச நாள்தான் மீனு உனக்கு டைம் கொடுத்து இருக்கேன். சீக்கிரம் என்கிட்ட வந்துடு. நீ ஏதாவது சேட்டை பண்ணா பின்விளைவுகள் ஜாஸ்தியா இருக்கும். சீக்கிரம் வந்துடு மீனு,” என்று தனது மீனுக்கு நிலா வழியாகத் தூது அனுப்பிக் கொண்டிருந்தான்.
அதே சமயம், தனது மலைக் கிராமத்தில் வீட்டு மொட்டை மாடியில் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
“மனசே சரியில்ல. நினைச்சுக் கூட பாக்கல, தென்னரசு வைஷ்ணவியை கல்யாணம் பண்ணி இருக்காரு. இதை நினைக்கவே எனக்குப் பயமா இருக்கு. இதுல வைஷ்ணவி அவரை லவ் பண்ணி இருக்கா. இவ்வளவு நாள் நானும் தானே அவ கூட இருந்தேன், இதைப் பத்தி ஒரு மூச்சு விடல பாத்தியா அந்தப் பொண்ணு,” என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது, இறுதியாக வைஷ்ணவி அவளிடம் சொன்ன ஒரு விஷயம் அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
“இங்க பாரு, ஒருத்தர் நம்மளைத்தான் வேணும்னு கேக்குறாங்க, நாமளும் அவங்க மேல உசுரையே வச்ச பிறகு எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது. ஒரு நாள் நமக்கு ஏத்த மாதிரி எல்லாம் மாறும், மாத்திக்கணும். அதுதான் நம்முடைய திறமை,” என்று வைஷ்ணவி சொல்லிவிட்டுச் சென்ற விஷயம் மீனாட்சி மனதில் உறுதி கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட இதே நிலைமை தானே அவளுக்கும்? அதிரவன் சொன்னது என்ன? திருமணம் வேண்டாம், தன்னோடு ஒன்றாக ஒரே இடத்தில் காலம் முழுக்க ஒருவருக்கொருவர் உண்மையாக வாழலாம் என்று கேட்கிறான். ஊரறிய கழுத்தில் தாலிதான் கட்ட மாட்டேன் என்றான், மற்றபடி ஒன்றாகத் தானே வாழக் கூப்பிடுகிறான்? ஆனால், இந்தக் கட்டுப்பாடு உள்ள கிராமத்தில் வளர்ந்த அவளுக்குத் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று.
அதனால்தான் அவள் மனம் இதை ஏற்க முடியாமல் தவிக்கிறது.
“இந்த அதிரவன் சாருக்கு நான் எப்ப ப்ரோபோஸ் பண்ணேன்? அன்னைக்கு காட்டுக்குள்ள தப்பிச்சு வரும்போது லிப் கிஸ் கொடுத்தாரு, அப்படியே என்னை மயக்கி வச்சுட்டாரு. அவரைப் பார்க்கும்போதே மயங்கிட்டேன். ஆனா அவருக்கு இருக்கிற இந்த ஒரு கெட்ட பழக்கம்தான் என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு. அந்தப் பொண்ணுங்க மாதிரி என்னையும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டா நான் என்ன பண்றது? வேணாம் வேணாம் மீனாட்சி… தப்பா இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு பிடிக்காத வாழ்க்கை கூட வாழ்ந்துடலாம். ஆனா நம்ம மானம் போகிற மாதிரி ஒரு வாழ்க்கை வாழக் கூடாது. அவர் கூடப் போனா உனக்குக் கௌரவம் கிடைக்காது, அந்தஸ்து கிடைக்காது. பணமும் சுகமும் தான் கிடைக்கும். ஆனா நம்ம வீட்ல சொல்ற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கௌரவம், பெயர், மரியாதை எல்லாமே கிடைக்கும். மனசுல ஒருத்தரை நினைச்சுக்கிட்டோம், அவ்வளவுதான். இதைப் பற்றி நம்மைப் பார்க்க வர மாப்பிள்ளைகிட்ட சொல்லி கல்யாணத்தை ஏற்பாடு பண்ணணும்,” என்று நாளை அவள் அப்பாவிடம் திருமணத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து, அதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள்.
இங்கே வைஷ்ணவி முதலிரவு அறையில் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க, தங்கள் நண்பர்களோடு கள்ளுக் குடித்து வந்த தென்னரசு தள்ளாடிக்கொண்டு அறைக்குள் வர, மகன் போகும் அழகைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள் ராக்காயி.
“இவனுக்கு அவங்க அப்பன், பாட்டன் குணம் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அவங்களை விட மோசமா இருக்கான். நல்ல வேலை, பொம்பள புள்ள சவகாசம் தான் இல்ல. என் பேத்தியைத் தானே கல்யாணம் பண்ணி இருக்கான். நிச்சயம் என் பேத்தி ஏதாவது ஒரு மந்திரம் போட்டு இவனைத் தன் கைக்குள்ள போட்டுக்கணும். கடவுளே, எனக்கு ஒரு வழி பண்ணு,” என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, ரத்னவள்ளி தன் அம்மாவைக் கோபமாகப் பார்த்து பேசினாள்.
“இன்னும் என்ன காலத்துல இருக்கீங்க? ஒரு உதவாக்கரை புருஷனுக்குக் கட்டி வச்சுட்டு, அந்தப் புருஷனை அந்தப் பொண்ணுதான் மாத்தணும்னு ஏதாவது விதி இருக்கா என்ன? கண்ணு முன்னாடியே குடிச்சிட்டு ரூம்குள்ள போறான். என் பொண்ணை என்ன பாடுபடுத்தப் போறானோ தெரியல. நான் பெத்த பொண்ணு என்ன மாதிரி சுயமரியாதை சிந்தனை கொண்ட பொண்ணா இருப்பான்னு பார்த்தா, காதலிச்சவன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நான் அவனை மாத்திக்கிறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கா. நான் பெத்த பொண்ணா இது? நினைக்கவே எனக்கு வேதனையா இருக்கு. நாளைக்குக் காலைல அண்ணன் இங்கிருந்து கிளம்பணும். இவன் என் பொண்ணை வேணும்னே கொடுமைப்படுத்துவான். நான் இருக்கிற வரைக்கும் தான் இது… நான் இல்லாதபோது கொஞ்சம் நல்லா இருக்கட்டும். உங்க குடும்ப சகவாசமே இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா விதி, என் தம்பிக்கு என் பொண்ணைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு. இந்தப் பாருமா, நான் ஓரளவுதான் பொறுத்துக்கிட்டு இருப்பேன். இவன் ரொம்ப ஆடுனான், அப்புறம் நான் எதையும் பார்க்க மாட்டேன். அவன் கழுத்தை வெட்டிப் போட்டு, என் மக கழுத்துல இருக்கிற தாலியை அறுத்துட்டு நிம்மதியா ஜெயிலுக்குப் போவேன். உன் புள்ள உசுரு வேணும்னா அவனை ஒழுங்கா நடந்துக்கச் சொல்லு,” என்று ரத்னவள்ளி கோபமாகப் பேசிவிட்டு கீழே இருக்கும் ஒரு அறைக்குச் சென்றுவிட, ஒரு பக்கம் மகனின் பிடிவாதம், ஒரு பக்கம் மகளின் கோபம் என ஒரு தாயாக ராக்காயி மிகவும் வேதனைப்பட்டாள்.
தள்ளாடிக்கொண்டு வந்த தன் கணவனைப் பார்த்து வைஷ்ணவி எழுந்து நிற்க, “இப்ப எதுக்கு என்னைப் பார்த்த உடனே வாத்தியாரைப் பார்க்கிற புள்ள மாதிரி எந்திரிச்சு நிக்கிற? இதெல்லாம் உன் ஸ்கூல்ல வச்சுக்கோ. நான் உன் புருஷன் தானே? எனக்கு இந்தப் பழக்கம் அப்பப்ப இருக்கும், ஆனா ரொம்பக் குடிக்க மாட்டேன். உன் மாமன் எவ்வளவு குடிச்சாலும் கன் மாதிரிதான் இருப்பான். இப்போ இப்படி இருக்கேன், மற்றபடி ஒன்னும் இல்ல,” என்று சொல்லிக்கொண்டே அவளை அமர வைத்து, அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.
“அப்புறம், உங்க அம்மா வெளியே ஒரு ராமாயணத்தையே நடத்திட்டுப் போயிட்டு இருக்கா போல இருக்கு. இங்க பாரு, உன்னை அடிச்சுக் கொடுமைப்படுத்துறது, உங்க அம்மா இருக்கும்போது உன்னைத் துன்புறுத்துறது எல்லாம் எனக்கு வேலை இல்லை. உங்க அம்மா ஓடிப்போய் கல்யாணம் பண்ணது நம்ம குடும்பத்துக்கு அவமானம். அதைச் சரி கட்டத்தான் உன்னை நான் கட்டியிருக்கேன். அதுக்காக உன்னைத் தொடாமல் இருப்பேன்னு நினைக்காத புள்ள. எனக்கு எந்தப் பொண்ணுங்க மேலையும் ஈடுபாடு கிடையாது. அது என்னமோ உன்ற முகம் பார்த்து எனக்கு ஒரு ஆசை வந்துடுச்சு, மற்றபடி ஒன்னும் கிடையாது,” என்று அவன் சொல்லிக்கொண்டே போக…
“அப்ப நீங்க என்கிட்ட பழகுன விதமெல்லாம் பார்க்கும்போது என்னைக் காதலிக்கிற மாதிரி இருந்துச்சு, அதுக்கு என்ன சொல்லுவீங்க?” என்றாள் வைஷ்ணவி.
“ஹா ஹா ஹா… அதுவா? எப்படி உன்னைப்பேசி கரெக்ட் பண்றதுன்னு தெரியாம, கூட இருக்கிற பயலுங்க எல்லாம் சினிமா வசனமா சொன்னாங்க. நான் அதெல்லாம் பார்த்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமா உன் மனசைக் கவுக்குற மாதிரி பேசி எப்படியோ ஒரு வழியாச் சமாதானப்படுத்தி ஊருக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா புள்ள, நான் நினைச்சுக் கூடப் பாக்கல… நீ இவன் எனக்கு வேணாம்னு கை உதறிட்டுப் போவ அப்படின்னு நினைச்சேன். ஆனா நான் எந்த அளவுக்குப் பெர்பார்மன்ஸ் பண்ணி இருந்தா, ‘எனக்கு இவர்தான் வேணும்’னு உங்க அம்மா முன்னாடி சொல்லிருப்ப? இதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்,” என்று சொல்லி அவள் மெல்லிடையை மெதுவாகப் பற்றித் தன் பக்கம் இழுக்க…
“அதான் உங்களுக்கு என் மேல காதல் எதுவும் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சுல்ல? அப்போ இது மட்டும் எதுக்கு? பிடிக்காம இந்த மாதிரி உறவு கொள்வது என்பது பிணத்தோடு உறவு கொள்வதற்குச் சமம்,” என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, அவன் பிடி விலகவில்லை, இன்னும் இறுக்கமானது.
“எனக்கு காதலில் ஈடுபாடு இல்லதான், ஆனா உன் மேல கிடையாது,” என்று ஒரு காட்டுப் பயல் பஞ்சுமிட்டாயைப் பார்ப்பது போல் அவள் மீது பாய்ந்து விட, அவன் திடீர் தாக்குதலால் அவளால் சமாளிக்க முடியவில்லை. சற்று விலகப் பார்த்தாலும், முரட்டு உடம்புக்காரனான அவன், மொத்தமாக அவள் மீது படுத்து, தன் ஒரு கரத்தால் அவள் உடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி, தன் இதழோடு அவள் இதழை முட்டி உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தான். அவள் உயிரையும் சேர்த்து… காதலன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவனின் முதல் முத்தம் இப்படியா இருக்க வேண்டும் என்ற வேதனை அவளுக்குள்.
“என்னங்க… கொஞ்சம்… முடியல… ப்ளீஸ்… அரசு ப்ளீஸ்…” என்று நடுங்கிய குரலில் சொல்ல…
“அட என்ன புள்ள நீ? எனக்கு இப்படித்தான் பண்ணத் தெரியும். நீ நிறைய சினிமா பார்த்துட்டு மென்மையா பண்ணுவேன்னு நினைக்காத. எனக்கு இதுதான் தெரியும்,” என்று அவள் எதிர்பாராத வண்ணம் அவளை வேகமாக நாட ஆரம்பித்தான்.
ஒரு பக்கம் வலி இருந்தாலும், இஷ்டப்பட்டவன் தான் தன் உடலைத் தொடுகிறான் என்ற ஒரு விரக்தி கலந்த நிம்மதியில் வைஷ்ணவி அப்படியே கிடக்க, முதல் முறை பெண்ணின் வாசம் பட்டு தென்னரசு ஆவலோடு இன்பக் கடலில் மூழ்கினான். பெண்ணுக்கும் இன்பத்தைக் கொடுத்து தானும் இன்பத்தைப் பெறுவதுதான் தாம்பத்தியத்தின் அழகான விதிமுறை. ஆனால் அந்தச் சாதாரணக் காட்டுப் பயலுக்கு அது எங்கே தெரியப் போகிறது?
“ஐயோ புள்ள… தாம்பத்தியம்னா என்னென்னமோ நினைச்சேன், ஆனா இவ்வளவு சுகமா இருக்கும்னு நினைச்சுக் கூடப் பாக்கலடி,” என்று அவள் கழுத்தில் முத்தமிட்டு அவள் மீது படுத்து உறங்க ஆரம்பித்தான். வைஷ்ணவி மென்மையாக அவன் தலைமுடியை வருடிக்கொண்டிருந்தாள். அது அவனுக்கு இதமளிக்கவே, இன்னும் அவளை நெருக்கமாகக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு உறங்க ஆரம்பித்தான். அவளுக்குள் ஒரு மென்மையான சிரிப்பு மட்டுமே வந்தது.
“உங்களுக்குள் காதல் இருக்கு, அதை நான் வெளியே கொண்டு வருவேன் அரசு,” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். தன் காதல் உண்மையானது, அவனுக்கும் காதல் இருக்கிறது என்று பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டு, அவனைத் தன் காதலால் மாற்றித் தீருவேன் என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.