Home ANTIHERO14) பார்வை 😍

14) பார்வை 😍

by sreejanovels
4 views

அத்தியாயம் 14

சுவாதி சத்தமாகப் பாட்டைப் போட்டு டிவி பார்த்துக் கொண்டு சமையல் வேலையை ஆரம்பிக்க, இங்கே அறைக்குள் கணவன் மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு திசை பக்கம் அமர்ந்து கொண்டிருந்தனர்.

ஒரு வேகத்தில் அவளை அழைத்து வந்துவிட்டான். கதவைப் பூட்டி வைத்து மனைவியைப் பார்க்க, அவளோ அவனைப் பிடித்துத் தள்ளி அங்கே ஓரமாக அமர்ந்துவிட்டாள். அவளுக்கு எதிர் திசையில் அவனும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்க நோக்கம் என்ன? எதுக்காக இங்க வந்துருக்கீங்க?” என்று அவள் முதலில் ஆரம்பிக்க,

“என்கூட வந்துடு” – மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தது. என்னுடன் வா, என்னோட வா என்று.

“ப்ச்.. சொன்னா புரியல உங்களுக்கு? ஏன் இப்படி என்னோட உயிரை வாங்கிட்டு இருக்கீங்க? என்னை கொஞ்சம் நிம்மதியா விடுங்களேன். அப்படி என்னதான் உடம்பு ஆசைன்னு கேட்டு வர்றீங்கன்னு தெரியல. இப்ப என்ன, இந்த உடம்புதானே வேணும்? எடுத்துத் தொலை!”

ஆக்ரோஷமாகக் கத்தித் தன் ஆடை மீது கை வைக்க வர, அதை அப்படியே பிடித்தவன் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அடி போட்டு…

“லூசு! எதுக்கு டிரஸ்ஸைக் கிழிக்கப் பார்க்கிற? ஆமா, நீதான் வேணும். முடியல… ரெண்டு வருஷம் எப்படித் தெரியுமா இருந்துச்சு? பாவம் என் உடன்பிறப்பு” என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டித் தன் இருப்பு நிலையை கூற, தலையில் அடித்துக் கொண்ட அஞ்சலி, “வெளியே போ” என்று சொன்னாலும் அவன் கேட்கவில்லை. அவள் கிழிக்கப் பார்த்த அவள் ஆடைக்கு அவன் விடுதலை தர, வெற்று மேனியோடு அவன் முன்பு நிற்க முடியாமல் திரும்பி நிற்க, அவளை அப்படியே முதுகோடு கட்டிக் கொண்டவன் முதுகில் முத்தக் கோலங்கள் போட ஆரம்பித்தான்.

“வி.. விஜய்.. விஜய்ய்.. ப்ளீஸ் விடுங்க” என்று மோனக் குரலில் சொல்ல,

“நீ சொல்றதுக்கும், உன்னோட வாய்ஸ்க்கும், உன்னோட எக்ஸ்பிரஷனுக்கும் சம்பந்தமே இல்லை” என்று கழுத்தில் முத்தம் கொடுத்தான்.

அவ்வளவுதான், மொத்தமாக அவனிடம் சரணாகதி. இதற்காடா இரண்டு வருடம் டைம் வேஸ்ட் பண்ணினோம் என்பது போல் ஆனது அவனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன்வசப்படுத்தி கட்டிலில் கிடத்தி, தன் உடைக்கும் விடுதலை தந்தான்.

பல நாள் கழித்துக் கணவனை இந்த கோலத்தில் பார்த்தவள் வெட்கம் கொண்டு அப்படித் திரும்பிக் கொள்ள, அவள் முதுகில் முத்தமிட்டுக் கொண்டு அவன் கை மட்டும் அடியில் சென்று, பல நாள் கழித்து அவள் அங்கத்தை ரசிக்க ஆரம்பித்தது.

“முன்ன விட வளர்ந்து இருக்கு” என்று சொல்லி அவள் காதில் முத்தம் கொடுத்தான். அவள் வெட்கத்தில் இன்னும் சிலிர்த்துப் போக, கொஞ்சம் கொஞ்சமாக அவன் கையில் படர்ந்தது அந்தத் திரவம்.

தாய்மையின் பூரிப்போடு, தளர்ந்த மார்போடு, கொழுத்த வயிறோடு இருக்கும் மனைவியைக் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டு அவள் சம்மதத்தைக் கேட்க, கண்களை மூடி அவள் தன் ஆசையை வெளிப்படுத்தினாள். அவள் கீழ் உதடு பற்களால் தண்டிக்கப்படும் போது, அவளும் தன்னைப் போலவே இதே நிலைமையில் தான் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவன், தன் அச்சாணி கொண்டு அவள் பெண்மைப் பெட்டகத்தில் நுழைக்க, பல நாள் கழித்துச் சேர்வதன் விளைவாக இருவருக்கும் வலி, வேதனை, சுகம் எல்லாம் ஒன்று கூடி இருவரையும் இன்பலோகத்திற்கு அழைத்துச் சென்றது.

“எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? ஹாஹாஹா. நீ இல்லாம எனக்கு எதுவுமே ஓடல. எவ்வளவு கெட்ட பையனா மாறிட்டேன் தெரியுமா? நீ என்னை எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்ட… நீ போன பிறகு அனாதை ஃபீலிங் தான்” என்று உரக்கக் கத்திக்கொண்டு அவளுக்குள் இன்னும் அதிவேகமாக நுழைய, எங்கே தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்று அவள் இடையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இயங்கினான்.

வேகம், வேகம், வேகம் மட்டுமே இருவருக்கும் இருந்தது. அவளுக்கு ஆயிரம் மன அழுத்தம், அவனோடு வாழவே வேண்டாம் என்று விவாகரத்து வரைக்கும் சென்றவள், அவன் கழுத்தில் முத்தமிட்ட நொடி அவனுள் சரணாகதி ஆகிவிட்டாள். இவனும், நீ எவ்வளவு அடித்து விரட்டினாலும், கோபமாக மற்றவர் முன்பாக இவளை வெட்டிப் போடும் அளவிற்குப் பேசினாலும், இவளைப் பார்த்தவுடன் மடங்கி விடுகிறான். இப்படி இருவருக்கும் இதுதான் நடந்தது. இருவருக்கும் ஒரு இணைப்புப் பாலம் இந்தத் தாம்பத்தியம், அதில் மட்டும் இரண்டு பேரும் கோல்டு மெடல் வாங்குவார்கள்.

வாழ்க்கையில், இல்லறத்தில், தாம்பத்தியத்தில் அன்பு இவ்வளவு சுகமாக இருக்கும் என்று இவளோடு இணையும் போதுதானே அவன் நினைத்தான். ஆனால் இவள் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தினால், வினுஷா மீது தான் வைத்திருக்கும் காதல் பொய் என்று சமூகம் சொல்லிவிடுமோ, அல்லது பொய் என்று இவள் நினைத்துவிடுவாளோ என்ற பயத்தில் தானே இவள் மீது வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதலை அடியோடு ஆழப் புதைத்துவிட்டு, இவளை வதைத்து ரசித்து அவளைத் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டான். அவன் காதலின் ஆழத்தை அறியாமல் இவள் தவறாக நினைத்துக் கொண்டு விலக, பெண்ணின் மனதைத் தொடாமல் உடலைத் தொட்டால் வெற்றி என்று அவன் நினைத்திருக்க… இப்படி அனைத்தையும் ஒதுக்கிவிட்டு இருவரும் தங்கள் தற்போதைய செயலில் ஆர்வம் கொண்டனர். கட்டிப் புரண்டு, கட்டில் கசங்கி, உடலும் உடலும் பசை போட்டு ஒட்டாத குறையாக இருவரும் இணைந்து பிணைந்து இருந்தனர்.


“பாவாடை கட்டையில பார்த்தேனே மச்சம்… ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்” என்ற பாடல் வேறு இனிமையாக இசைக்க, டிவி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குப் பக்கம்தான் கணவன் மனைவி இருவரும் சல்லாபத்தில் இருந்தனர். பாடல் வேறு அவர்களுக்குக் கிளுகிளுப்புக் கொடுக்க, இன்னும் சத்தமாக, வேகமாக இயங்க ஆரம்பித்தனர்.

“ம்ம்.. ஹாஆஆஆ” என்ற ஒரு விதமான குரல் அறையிலிருந்து கேட்டவுடன் விக்கித்துப் போன சுவாதி, “அட என்ன சவுண்ட் அது?” என்று அதிர்ச்சி அடைந்து டிவியை ஆஃப் செய்தாள். இன்னும் அறையிலிருந்து இது போன்ற முனகல் சத்தம் வந்தது. “என்ன இது, இந்த ரூமில் இருந்து இப்படிச் சத்தம் வருது? அஞ்சலி தானே போனா… என்னடா இது?” என்று மெதுவாகக் கதவைத் திறக்கப் பார்த்தாள். திறக்க முடியவில்லை. கதவைச் சத்தமாகத் தட்ட, எதுவும் ரெஸ்பான்ஸ் வரவில்லை. குழந்தை வேறு உறங்கிக் கொண்டிருந்தது. இவள் சமையலில் கவனம் செலுத்தி, டிவியில் கவனம் செலுத்திப் போன அஞ்சலியைப் பற்றி நினைக்கவே இல்லை.

“அஞ்சலி! அஞ்சலி! கதவைத் திற, என்ன சத்தம் வந்தது? ஏய்!” என்று அவள் கதவைத் தட்டிக் கொண்டே இருக்க, கணவன் மனைவி இருவரும் சப்தம் அதிகமாக வரவே தங்களைச் சமாதானம் செய்து முடித்தனர். விஜய் மட்டும் கீழே டிராக் பேண்ட் அணிந்து கொண்டு கதவைத் திறந்தான். அரைகுறை ஆடையோடு, வேர்வை படிந்த முகத்தோடு விஜய்யைப் பார்த்த சுவாதி பேய் அடித்தது போல் முழித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்! என்ன பார்க்கிற? ரெண்டு வருஷம் கழிச்சுப் பொண்டாட்டியைப் பார்க்கிற புருஷன் சும்மா இருப்பானா? அதான் என் பொண்டாட்டியைத் தேடி வந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு எங்களை டிஸ்டர்ப் பண்ணாத. குழந்தையை எழுப்பாமல் பார்த்துக்கொள். சீக்கிரம் டின்னர் சமைச்சு வை” என்று அவளிடம் பதில் எதிர்பார்க்காமல் சொல்லிவிட்டுத் கதவை மூடிவிட்டான்.

“என்ன இது? சார் உள்ள இருந்து வெளியே வந்தாரு… என்னமோ சொன்னாரு, டின்னர் சமைச்சு வைக்கச் சொன்னாரு, கதவை மூடிட்டாரு… அப்படின்னா, அடக் கடவுளே! பொண்டாட்டிகூட ரொமான்ஸ் பண்ண வந்திருக்கானா? நாங்க ரெண்டு பேரு தான் இங்க இருக்கிற மாதிரி இருந்துச்சு. இப்ப இந்த ஆள் வர்றதைப் பக்கத்துல இருக்குறவங்க பார்த்தா என்ன ஆகிறது? கேவலமாப் பேச மாட்டாங்க? ஐயோ அஞ்சலி! பெரிய இவள் மாதிரி ‘என் புருஷன் எனக்கு வேணாம், அவன் எனக்கு ஆசையைக் கொடுக்கல, எனக்கு அவன் வேணவே வேணாம்’னு பெரிய இவ மாதிரி பேசுனா… புருஷன் தொட்டவுடன் மயங்கிப் போறாளுங்க. இப்படிப் பொண்ணுங்க இருக்குறதால்தான் புருஷனுக்குக் கொம்பு முளைக்குது. என்கிட்ட இந்த மாதிரி ஆட்டுனா அந்த ரித்திக் கையை ஒடிச்சுடுவேன்” என்று சத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, காலிங் பெல் சத்தம் கேட்டது.

யாராய் இருக்கும் என்று கதவைத் திறக்கும் போது வெளியே ரித்திக் நின்று கொண்டிருந்தான்.

“இருக்குற பிரச்சினைல இது வேற ஒரு பக்கம்! ஏம்பா, உன் தங்கச்சி இறந்து போனதுக்கான காரணம் சொல்லியாச்சு, தப்பு பண்ணவங்களுக்குக் கடவுளாப் பார்த்துத் தண்டனையும் கொடுத்தாச்சு. அஞ்சு வருஷம் கழிச்சு எதுக்குப்பா என்னோட உயிரை வாங்க வந்திருக்க?” என்று வேதனையில் சுவாதி அவனைப் பார்த்துத் கத்திக் கொண்டிருந்தாள்.

“ஏய் ஏய் கிளியோபாட்ரா மாதிரி ரொம்ப சீன் போடாதே! நான் உனக்காக ஒன்னும் வரல. விஜய் வீட்டுக்கு வந்து ஏனோ தானோன்னு புலம்பி, ‘நான் அஞ்சலியைப் போய் ஒன்னு இல்லாம ஆக்குறேன் பாரு, இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்’ அப்படின்னு கார் எடுத்துக்கொண்டு ரொம்ப ஸ்பீடா இங்க வந்தான். நான் அவனை ஃபாலோ பண்றதுக்குள்ள எஸ்கேப் ஆகிட்டான். சரி கண்டிப்பா இங்கதான் வந்திருப்பான் அப்படின்னு வந்து பார்த்தேன். நீ மட்டும் தான் இருக்க… குழந்தை இங்க தூங்குறான். விஜய் எங்க? இங்க வந்தானா? சரி அஞ்சலி எங்க?” என்று அவன் சந்தேகமாகக் கேட்க, சுவாதி சங்கடமாக அந்த அறையைக் காண்பித்தாள்.

“சுத்தம்! ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஆகாது. இதுல ரெண்டு பேரையும் ஒரு ரூமுக்குள்ள அடைச்சு வச்சிருக்கியா? அவன் அந்தப் பொண்ணை அடிக்கிற அடியில அந்தப் பொண்ணு உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தா என்ன பண்ணுவ? ஏற்கனவே அவன் ரொம்பக் கோபக்காரன்” என்று, விஜய் மிகவும் கோபத்தோடு அஞ்சலியை அடிப்பதற்காகத் தான் சென்று இருக்கிறான் என்று தவறாக நினைத்துக் கொண்டான் ரித்திக்.

சுவாதி தலையில் கைவைத்துக் கொண்டு, “நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லை. அவங்க பொறுமையாத் தான் வருவாங்க. வரும்போது சோட்டுக்கு ஒரு தங்கச்சிப் பாப்பாவ ரெடி பண்ணிட்டு வராம இருக்க மாட்டாங்க” என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. அப்படி என்றால் இருவரும்…

“இது என்ன புதுக் கதையா இருக்கு?”

“எனக்கும் அதே டவுட் தான். இந்த அஞ்சலி இருக்காளே, என்கூட இருந்த வரைக்கும் ‘எனக்கு அவர் வேண்டாம், எனக்கு அவரைப் பிடிக்கல, ஒரு தூரத்திலிருந்து பார்ப்பேன், எனக்கு அவர் வேண்டவே வேண்டாம், என் வாழ்க்கை இப்படித்தான்’ அப்படின்னு என்னென்னமோ வசனம் பேசினா. ஆனால் கடைசியில் இப்படி…” என்று சிரிக்க, அவனும் கூடச் சேர்ந்து சிரித்தான். இருவரும் பேசிய சத்தத்தில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சிணுங்கி அழ ஆரம்பிக்க, இருவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சமாதானம் செய்வதற்காகச் சமையலறை பக்கம் இருக்கும் பால்கனிக்குச் சென்றுவிட்டனர்.

இங்கு அறையில், அஞ்சலி அடித்த அடியில் விஜய்யின் கன்னம் பழுத்துச் சிவந்து கிடந்தது.

You may also like

Leave a Comment

About Me

Featured