25) தீயே 🔥

srija

srija novels
Staff member
Joined
Nov 13, 2024
Messages
100
Reaction score
1
Points
18
Location
india
Website
srijanovels.com
அத்தியாயம் 25

"நான் நினைச்சு கூட பாக்கல தேவி வசதியான வீட்டுக்கு பொண்ணு அப்படின்னு நம்மள மாதிரி சாதாரண வீட்டு பொண்ணு நெனச்சேன் இப்ப பாரு அசோக் சரக்கு கல்யாணம் பண்ணிக்க போறாராம் இருப்பதிலேயே அவர்தான் கொஞ்சம் நல்லவரா தெரியுது பாரு எனக்கு விஷ்வாவை பற்றி அந்த அளவுக்கு தெளிவு கிடையாது தர்ஷன் எனக்கு சுத்தமா பிடிக்காது ஆனா அசோக் ஓகே".
என்று சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு சாக்ஷி சொல்ல

"ஹேய் அவ வெளியே இதெல்லாம் காட்டிக்க விரும்பாம இருந்திருக்கலாம் அதுக்காக அவளை ஏன் இப்படி குறை சொல்லிட்டு இருக்க அமைதியா இரு இப்ப அவ மித்ரன் பேமிலி மருமக அவளுக்கு கொடுக்க வேண்டிய ரெஸ்பெக்ட் கொடுக்கணும் வந்த பொண்ணுங்கள விட நம்ம தேவி நமக்கு தெரிஞ்சவர்தான அதனால என்ன இருக்கு நாம இப்போ தூரமா விலகி இருக்கிறதே அவருக்கு கொஞ்சம் கஷ்டத்தை கொடுக்கலாம் நாம அப்புறமா அவ கிட்ட போய் பேசலாம்".

என்று மேனகா சொல்லிக் கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரையும் இடித்துக் கொண்டு தேவி அமர அவளைப் பார்த்து சிரித்தனர் கையில் மெஹந்தி ஓட வந்த அவளை பார்த்த மேனகா

"ஒரு இடத்தில் அமைதியா உட்காரலாம் இல்ல மெஹந்தி போட்டுக்கு கையில் அப்புறம் கலைஞ்சா நல்லா இருக்குமா??"

"அதுக்கு பசிக்குதுல சாப்பிடணும் இப்ப என்னால சாப்பிட முடியாது அதனால எனக்கு நீதான் ஊட்டி விடணும்"

என்று சொன்னவுடன் மேனகா சாப்பாடு ஊட்டி விட ஒரு பக்கம் சாக்ஷி அவளும் ஊட்டி விட
மூவரும் சிரித்துப் பேசி இருப்பதை பார்த்த பாட்டி

"பேசாம இந்த ரெண்டு பொண்ணுங்கள மருமகள்களா ஏத்திருக்கலாம் போல"

என்று அவரால் பேசினால் முடிந்தது ஆனால் செயல்படுத்த முடியவில்லை மறுபக்கம் யாமினி போட்ட ஆட்டம் அப்பப்பா அளவே இல்லாமல் ஆகிவிட்டது கணவரின் பெயரை குறிப்பிடும் இடத்தில் இப்படி செய் அப்படி செய் இந்த டிசைன் நல்லா வில்லை இந்த டிசைன் நல்லா வில்லை என்று ஒருமுறை வைத்த மெஹந்தி பார்க்க பிடிக்கவில்லை என்று மூன்று முறை கைகளை சுத்தம் செய்து மீண்டும் இது மெஹந்தி வைத்துக் கொண்டிருக்க மெஹந்தி ஆர்டிஸ்ட் கோபத்தில் கொதிக்கும் மனதை உதறி தள்ளி அவளுக்கு ஒரு வழியாக மெகந்தி வைத்து முடித்துவிட்டார். சுஷ்மா மெஹந்தி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது,

"இந்த டிசைன் நல்லா இருக்கும் இதை வேணா வச்சு பாரு"என்று கரன் அவள் அருகே வந்து ஒரு டிசைனை கொடுக்க மெஹந்தி ஆர்டிஸ்ட் சுஷ்மாவிடம் அனுமதி கேட்டு அதே டிசைன் வைக்க.

கரண் மெனக்கெட்டு டிசைன் வழிமுறைகளையும் சில திருத்தங்களையும் ஆர்டிஸ்டிடம் சொல்ல சொல்ல ஆர்டிஸ்ட் அதே போல் செய்து வைத்துக் கொண்டிருந்தார் சுஷ்மாவுக்கு இதுபோல் இதுபோல் தானே ஒரு மணமகன் வேண்டும் என்று நினைத்தேன் மனைவிக்கு வருங்கால மனைவிக்கு மெஹந்தி வைக்கும் பொழுது கணவன் யாருக்கோ விருந்து போல் இருந்து கொண்டிருக்கிறான் விஷ்வா ஆனால் இவன் தன்னோடு அமர்ந்து தனக்கானதை தனக்கு பிடித்ததை எவ்வளவு அழகாக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறான் என்று சுஷ்மாவின் மனம் வேதனைக்கு உண்டானது.

"ஏய் உனக்கு தான் மெஹந்தி பங்க்ஷன் நடக்குது நீ என்ன எந்த டிசைனும் ஒழுங்கா வைக்காம நான் ரிவ்யூ சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ எதுவுமே சொல்ல மாட்டேங்குற ஆமா எங்க மாப்ள உன் பக்கத்துல உட்காராம எங்க போயிட்டு இருக்காரு??"

என்று கேட்டுக்கொண்டே கரன் விஷ்வா எங்கே என்று தேட ஆனால் அங்கே இல்லை அவன்.

"மாமா அவர் இந்த மாதிரி சடங்குகளை உட்கார மாட்டேன்னு முன்னாடியே சொல்லிட்டாரு அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கு இல்லையா".

"இப்பவே வருங்கால கணவனுக்கு சப்போர்ட் எல்லாம் வேலையும் இருக்கலாம் ஆனா பொண்டாட்டி வந்த பிறகு அவளுக்குன்னு கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்கணுமா சரி இது உன்னோட வாழ்க்கை பாத்துக்கோ நான் கிளம்புறேன் குட்டீஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க".

என்று சொல்லிவிட்டு அவன் குழந்தைகளோடு குழந்தைகளாக அங்கே இசைத்துக் கொண்டிருக்கும் டிஜே பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்.

"மேடம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க இப்ப நீங்க அவரை மாமா என்று தானே சொன்னீங்க உங்க பஞ்சாபி லாங்குவேஜ்ல ஆக்சுவலி எனக்கும் அந்த லாங்குவேஜ் தெரியும் உங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு நம்மள நம்மளா இருக்க விடுறவங்க கூட தான் நம்ம லைஃப் நல்லா இருக்கும்".

சொல்லி மெஹந்தி முடித்துவிட்டு குழம்பி இருந்த மனதில் கல்லை தூக்கி போட்டுவிட்டு மெஹந்தி ஆர்டிஸ்ட் என்று விட சுஷ்மா ஏதோ போல அமர்ந்து இருந்தாள்.

மறுபக்கம் விஷ்ணு இவள் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பாமல் ஏதோ போல் இருப்பவன் மறுபக்கம் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தன்னை பார்த்து சிரிக்கும் கரன் எது உண்மை எது பொய்? எது நமக்கான சிறந்த பாதை என்று அவள் முடிவெடுக்க வேண்டிய நேரம் என்று அவள் அடி மனம் கூவி கொண்டிருந்தது. யாரையும் நம்ப கூடாது பெற்றவர்கள் பணத்திற்காக கொண்டு வந்து விட்டார்கள் நானும் பேராசையோடு தான் வந்தேன் ஆனால் சந்தோஷமான வாழ்க்கை அதற்கு எங்க போகிறது நாம் தானே முடிவு எடுக்க வேண்டும் நம் வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்க வேண்டியது தான்.

என்று ஒரு முடிவை இரவுக்குள் எடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள்.

இப்படி குழம்பியவாறு சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த விஷ்வா மீது மோதி விட ஏற்கனவே ஏதோ ஒரு கிளைன்ட் விசாவின் திருமண விழாவை காரணம் காட்டி அவரது ஈவென்ட் ஒன்றை கேன்சல் செய்து இருந்தால் டென்ஷனில் இருந்தவன் தன் மீது மோதிய சுஷ்மாவை பார்த்து,

"அறிவு என்ற சுத்தமா கிடையாது எதிர்ல வர்றவங்க கண்ணுக்கு தெரியலையா எரிச்சலை கிளப்பிக்கிட்டு உன்னை யார் இங்க வர சொன்னது போ அங்க".

என்று சுளிர் என்று முகத்தில் அழித்தது போல் சொல்லிவிட்டு சென்றுவிட .

"இப்ப என்ன ஆச்சு எதிரே தெரியாம இடிச்சிட்டேன் இந்த மாதிரி கல்யாணம் ஆகுற டைம்ல பொண்ணு தெரியாம இடிச்சா பார்த்து வரமாட்டியான்னு கேட்பாங்க சரி அட்லீஸ்ட் கைல மெஹந்தி வச்சிருக்கியே டிசைன் காட்டுன்னு கேட்பாங்க ஆனா இவர் எதுவுமே கேட்க மாட்டேங்கிறார். எதையும் பேசவும் மாட்டேங்கறார். எல்லாம் காலம் போற போக்குல பார்த்துக்கொள்ளலாம் அப்படின்னு சொல்றாரு."

என்று வேதனையோடு தன் அறையை நோக்கி சென்று விட்டாள்.

"ஏய் அங்க பிரம்மாண்டமா உன் கல்யாணத்துக்கான மெஹந்தி பங்க்ஷன் நடந்துகிட்டு இருக்கு நீ எதுக்கு லூசு மாதிரி ரூம்குள்ள வந்த அதுவும் ஸ்பெஷல் லஞ்ச் நமக்கு அரேஞ்ச் பண்ணி இருக்காங்க வா போய் சாப்பிடலாம் உங்க அப்பாவும் வெயிட்டிங்".

"இப்பதான் நீ பெத்த பொண்ணு உன் கண்ணு முன்னாடி தெரிஞ்சா இல்ல ஆமா எனக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க எங்க போறதா இருக்கீங்க??"
என்று தன் அம்மாவை பார்த்து சுஷ்மா கேட்க

"அட இது என்ன கதையா இருக்கு உன்னை கட்டி கொடுத்துட்டு நாங்க மட்டும் எப்படி ஊர்ல இருக்க முடியும் அதுவும் எங்களுக்கு இருக்க ஒரே பொண்ணு நீ உன்ன விட்டுட்டு எப்படி நாங்க இங்கேயே ஓரமா ஒரு இடத்துல இருக்க போறோம் மாப்பிள்ளை தான் இவ்வளவு சம்பாரிச்சு வச்சிருக்கார்ல அதுவும் நீதான் மூத்த மருமக எங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க மாட்டியா என்ன எதுக்கு இப்படி கேட்கிற ஒரு வேலை கல்யாணம் முடிஞ்ச உடனே அம்மா அப்பா போயிடுவாங்க நீ மட்டும் புருஷனோட வாழலாம் அப்படின்னு நினைக்கிறியா? நீ புருஷனோட வாழு நான் ஒன்னும் சொல்ல போறது இல்ல ஆனா மறுபடி ஊருக்கு போய் என்ன பண்ண போறோம் நாங்களும் இதே அரண்மனையில் வாழ்ந்துக்க போறோம்"

என்று பெற்ற மகளிடம் பேசுவதை ஏதோ பேரம் பேசுவது போல் சொல்ல.

"சரி அது உங்க இஷ்டம். இப்ப நான் எதுவும் பேசறதா இல்ல எனக்கு தலை வலிக்குது நான் எதுவும் சாப்பிடுற ஐடியா இல்ல நீங்க நிரந்தரமா இங்க தங்க போறீங்க நீங்க என்கிட்ட பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியம் இல்ல நீங்களே போய் சாப்பிட்டுக்கோங்க"

"எதையோ மனசுல வச்சிக்கிட்டு எனக்கு முடக்க பேசிட்டு இருக்க சுஷ்மா எதுவும் சரியில்ல அப்புறம் அந்த கரன் உன்கிட்ட ஒட்டி உரசி பேசிக்கிட்டு இருக்கான் சின்ன வயசுல அவனுக்கு நீ தான் உனக்கு அவன் தான் அப்படின்னு விளையாட்டுக்கு பேசினதெல்லாம் ஞாபகம் வச்சுக்காத ஒழுங்கா விஷ்வாவுக்கு மனைவியா நாளைக்கு காலையில மணமேடையில் வந்து ஒழுங்கா உட்காரும் வழிய பாரு".

என்று எங்கே அதிகபட்ச சொத்து சுகம் தன்னை விட்டு பறிபோய் விடுமோ என்று சும்மாவின் தாயார் சொல்லிவிட்டு சென்றுவிட மேலும் இதயம் நெருங்கி போய் சுஷ்மா அமர்ந்து விட்டாள்.

"யாராவது இப்படிப்பட்ட வாழ்க்கை விட்டுடுவாங்களா? புருஷன் நல்லா இல்லனா என்ன சுகம் கொடுக்கலைன்னா என்ன பணம் தரும் போதே வேறு எதுவும் தராது பணத்தை வைத்து என்ஜாய் பண்ணு நீ எங்க போனாலும் கேட்காதவன் புருஷனா அமைவது கொடுத்து வச்ச விஷயம் இப்படித்தான் நிறைய பெரிய இடத்து பெண்கள் இருக்காங்க"

என்று ஒரு பக்கம் சாத்தான் மூளை அவளை இம்சிக்க மறுபக்கம்

"கேவலம் காசு பணத்திற்காக பொம்மை போல் ஜெனமா ஒருத்தன் கூட வாழ்க்கையில் நடத்துவதற்கு ஒரு பிணம் கூட வாழ்வதை மேல் சொன்னால் புரிந்து கொள் உன்னோட வாழ்க்கை எனக்கு தெரிஞ்சு கரன் உனக்கு சரியானவன் அவன் கிட்ட எடுத்து சொல்லு அவன் உன் மேல பிரியமா இருக்கிறது அப்பட்டமா தெரியுது அப்புறம் என்ன அழகு பணம் முக்கியம் இல்ல உனக்கான சந்தோஷத்தை கொடுக்குற புருஷன் தான் உனக்கு முக்கியம்"

எது அடிமனம் குத்தாட்டம் போட எதை பேச்சைக் கேட்பது என்று புரியாமல் தலையை பிடித்துக் கொண்டாள் அவள் கைகளை கசக்கிய நேரம் விஷ்வா என்ற பெயர் வைத்த மெஹந்தி அழிந்து போனது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இங்க மேனகா தனது கையில் அழகிய மெஹந்தி போட்டுக்கொண்டு நட்ட நடுவில் காதலித்து அவனை வெறுத்து ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆயினும் அவனை மறக்க முடியாத மேனகா அவன் பெயரை மட்டும் குறித்து வைத்துக் கொண்டிருந்தாள்

V என்று.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 

Author: srija
Article Title: 25) தீயே 🔥
Source URL: Srija Novels-https://srijanovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.